இடை அழகி மேடம் சங்கீதா 12 171

டக்கென கார்த்திக் அவளைத் திரும்பிப் பார்த்து “வாட் அன் அட்ராசிட்டி….ச்ச….” என்று சீரியஸாக(!!) ஒரு லுக்கு விட்டான்…. அதற்கும் மூவரிடமும் சிரிப்புதான் வந்தது…. “இண்டிபெண்டன்ஸ் டேக்கு எங்க ஸ்கூலுக்கு வந்திருந்த வி.ஐ.பி ஒரு பஞ்சாப் சிங்க், எங்க ஸ்கூலோட அசோசியேஷன் தலைவர்.. அவர் முன்னாடி ஒரு ஒரு ஸ்டூடன்டும் நின்னு எங்க பி.டி மாஸ்டர் ‘ஆன் யுவர் மார்க்’னு சொல்லும்போது காஷ்வலா நிக்கணும்.. அப்புறம் அட்டேன்ஷன்னு சொல்லும்போது மரியாதை செலுத்தணும்.. அப்போ தலைவர் டர்ன் வந்துது…. ஹா..ஹாப்போ..ஹா ஹா… அட்டேன்ஷன்னு எங்க மாஸ்டர் சொன்னப்போ காலை வேகமா மேல துக்கி கீழ டப்புன்னு வெக்கும்போது அவன் கால்ல சாக்ஸ் இருந்துச்சே தவிர ஷூ இல்ல… எங்கடான்னு பார்த்தா சிங்கோட பெரிய தொந்தி மேல அந்தர் பல்டி அடிச்சி எகிறி போய் விழுந்திருந்துச்சி.. ஹா ஹா ஹா..” – என்று ராகவ் சொல்லி முடிக்க சஞ்சனாவும் சங்கீதாவும் சில நொடிகள் ஒன்றும் பேச முடியாமல் குனிந்து சிரித்தார்கள்…. சஞ்சனா காஷ்வலாக “you poor guy…” என்று சிரித்துக்கொண்டே சொல்ல… “அய்யய்யோ புவர் எல்லாம் இல்லீங்க.. ஊருல நிறைய சொத்து இருக்கு..” என்று சீரியசாக..அதே சமயம் வெகுளியாக சொன்ன விதத்தைப் பார்த்து சஞ்சனா “ஹாஹ் ஹா ஹா… ஹையோ… முடியலடா ராகவ்.. எங்கிருந்துடா புடிச்ச இவன…ஹம்மா..” என்று சிரித்துக்கொண்டே கார்த்திக்கின் வெகுளித்தனத்தை ரசித்தாள் சஞ்சனா.. அப்போது “சார்….”, என்று ஒரு முதியவர் வந்து ராகவை அழைக்க..

அவரிடம் “எல்லாம் ரெடியா?” என்றான் ராகவ்.. சங்கீதா ஒன்றும் புரியாமல் “என்ன ரெடியா? யார் அவரு? தலை முடியை சுருட்டிக்கொண்டே மென்மையாய் சிரித்துக் கேட்டாள் சங்கீதா…. “ஏ ஸ்மால் சர்ப்ரைஸ்.. என் கூட வா..” கண் அடித்து சிரித்துக் கொண்டே சொன்னான் ராகவ்.. அதற்கு “சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் குடுக்குறடா நீ..” என்று புன்னகைத்துக்கொண்டே சங்கீதா ராகவுடன் சென்றாள்.. “நாங்கெல்லாம் வரக்கூடாதா?” என்று கார்த்திக் கேட்க…. “தனியா வெத்தல பாக்கு வெச்சி கூப்பிடனுமா…. எந்திரிச்சி வாடா வாத்து…” என்று சொல்லி விறு விறுவென நடந்தான் ராகவ்.. அந்த முதியவர், எக்ஸ்ஹிபிஷனில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கலர் பேப்பர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த ஒரு சிறிய மேடை இருக்குமிடத்துக்கு கூட்டிசென்றார். திடீரென ஒரு குழந்தை ஒரு கையால் ஊனி வேகமாக வந்து சங்கீதாவின் கால்களை பிடித்து தேங்க்ஸ் என்று சொல்ல அதிர்ந்து போய் என்ன இது.. எழுந்திரி.. எழுந்திரி… யார் குழந்தை இது…” என்று ராகவை ஆச்சர்யமாக பதட்டத்துடன் பார்த்தாள், இன்னொரு குழந்தை பின்னடியிருந்து அவளது மிடியைப் பிடித்து ஆட்டியது.. திரும்பிப் பார்த்தால் “இந்தாங்க ஷா.. ஸா.. சாக்குலேட்டு..” என்று கஷ்டப்பட்டு தொண்டையில் இருந்து குரலை வரவழைத்து பேசியது.. சங்கீதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை… “ராகவ் என்……ன நட..க்குது…” என்று ராகவிடம் கேள்வி எழுப்பும்போது அவளை சுத்தி இன்னும் பெரிய கூட்டமாக சின்ன சின்ன ஊனமுற்ற குழந்தைகள் ஓடி வந்தது.. சங்கீதாவுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை… “ராகவ் என்ன நடக்குது இங்க?…” என்று குழப்பமாய்ப் பார்க்க “ஷ்ஷ்ஷ்… பேசாம என்ன நடக்குதுன்னு பாரு….” சஞ்சனாவுன், கார்த்திக்கும் கூட ராகவ் என்ன செய்கிறான் என்று எண்ணி குழம்பி இருந்தார்கள்… அந்த பெரியவர் சங்கீதாவின் அருகில் வந்து ஒரு பெரிய சைஸ் புகைப்படம் ஒன்றைக் குடுத்தார். அதில் கிட்டத்தட்ட பதினைந்து குழந்தைகளுக்கு ஒரு வருஷத்துக்கான சாப்பாடு, படிப்பு செலவு, துணிமணி போன்ற விஷயங்களுக்கு உதவியதுக்கு நன்றி என்றும், பார்வையற்ற இரண்டு பெண்களுக்கு கண் ஆப்பரேஷனுக்கு சிகிச்சை செலவும், விபத்தில் கணவனை இழந்த ஐந்து பெண்களை மறுமணம் செய்து கொள்ள தயாராய் இருக்கும் ஐந்து வாலிபர்களுக்கும் திருமண செலவுக்கு காசு குடுத்து உதவியமைக்கு நன்றி தெரிவிக்க எங்களால் முடிந்த ஒரு சிறிய பாராட்டு என்று சொல்லி “ராஜா கைய வெச்சா… அது ராங்கா போனதில்ல…” என்ற பாடலுக்கு கை இல்லாத சில சின்ன குழந்தைகள் அவர்கள் கால்களால் சிறப்பாக நடனம் ஆடி சல்யூட் செய்து சங்கீதாவுக்கு நன்றியை தெரிவித்தனர். இவற்றை பார்க்க பார்க்க சங்கீதாவின் கண்கள் லேசாக பனிக்க ஆரம்பித்தன..

10 Comments

  1. Sir eathu sex story pola thriyala sir eana story onum puriyala please sex part eapo varum tell me

  2. Next post please.

  3. Next post please sir

  4. சூப்பர் கதை

  5. Hello next post varuma varatha. Summa delay panni kadupu ethitu. Story theriuma ella theriyatha. Pls podunga….

  6. Ney la thooku la thoongnum story theeiyala na. Ennum subject ku varave ella.

  7. Next post please

Comments are closed.