இடை அழகி மேடம் சங்கீதா 12 171

தனது வண்டியை ஸ்டேஷன் உள்ளே கூட நிறுத்தாமல் வெளியே நிறுத்திவிட்டு நால்வருமே தங்களது முகங்களுக்கு தொப்பியோ துணியையோ கட்டிக்கொண்டு ஓரளவுக்கு முகம் தெரியாத விதம் நாலா பக்கமும் பிரிந்து தனித்தனியே இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்துக்கு சாதாரணமாக சத்தமோ ஆர்பாட்டமோ இன்றி வந்து சேர்ந்தனர்… பார்கிங் என்ட்ரன்ஸ் அருகே பாவமாக ஏதோ கொஞ்சம் பச்சை நிறத்தில் வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருக்கும் டியூப் லைட் இவர்கள் சேர்ந்தடையும் இடத்தை முக்கியமாக கருதி இருட்டாகவே வைத்திருந்தது.. அனைவரும் ராஜேந்திரனுடன் ஒன்று சேர்ந்தனர்.. “சார்..” – என்று ராகவ் மெதுவாக நெருங்க.. “ஷ்ஷ்.. மெதுவா பேசுங்க” என்று அமைதி படுத்தினார் ராஜேந்திரன்.. “நேரா போய் துப்பாக்கிய காமிச்சி சுத்தி வளைச்சி பிடிக்க வேண்டியதுதானே?….” – சத்தமின்றி ராகவ் ராஜேந்திரனுடன் கேள்வி எழுப்ப…. “எனக்கும் போலீஸ் மூளை கொஞ்சம் இருக்கு சார்….” என்று ராகவை நோக்கி தனது கோவத்தை அடக்கி அதே சமயம் பவ்யமாக பேசினார்…. இடுப்பில் சற்று லூசான பேன்டை மேலே தூக்கிவிட்டு கண்கள் சுருங்க சற்று கோவமாக…. “அதானே… நீங்க உங்க வேலைய பாருங்க சார்…” என்று சொல்லி ராகவை நோக்கி “அவர் போலீஸ் டா… சும்மா குவிஸ் ல உன் பேச்சை கேட்டு நான் அசிங்க பட்ட மாதிரி இங்கே உன் பேச்சை கேட்டு வேல செஞ்சி இங்கே இருக்குற கான்ஸ்டபிள்ஸ் முன்னாடி அவரு அவமானப்படனும்னு பார்க்குரியா?” பேசிக்கொண்டிருக்கும்போது காலில் யாரோ எத்தி உதைப்பதை உணர்ந்து “அம்மே…” என்று கத்தினான்… “சாரி சாரி…” என்றாள் சங்கீதா… வழக்கம் போல பொறுமையே இல்லாமல் போலீஸ் கிட்ட கூட வாதாடுறானேன்னு எண்ணி ராகவின் மீதுள்ள கோவத்தில் ராகவை அடிக்க போக அது கார்த்திக்கின் காலில் பட்டுவிட்டது…. மீண்டும் இடுப்பில் நறுக்கென்று ஏதோ கிள்ளியது போல உணர்ந்தான் “இஸ்… எப்பா…” என்று லேசாக அலறினான்… “அறிவு கெட்ட லூசு பின்னாடி கால் எடுத்து வெக்கும்போது ஏண்டா என் கால நசுக்குற….” என்று சஞ்சனா கொஞ்சம் கடித்தாள்…. “ஊருல இருந்து கிளம்பும்போதே வாசப்படியாண்ட பூனை குறுக்கால ஓடுச்சி… அப்போவே என் அம்மா கூட அடுத்த நாள் கெளம்பி போடான்னு சொல்லுச்சி…. கேக்கல… நான் கேக்கல… யோசிச்சி இருக்கணும்… இந்த எனிமிய நான் பார்க்க வந்திருக்ககூடாதுன்னு அப்போவே யோசிச்சி இருக்கணும்.. தப்பு பண்ணிட்டேன்..” “சார் கொஞ்சம் பேசாம இருக்கீங்களா?” – இன்ஸ்பெக்டர் கொஞ்சம் கடுப்பாகி கார்த்திக்கை நோக்கி பேச…. “உக்கும்.. வீட்டுல நாய் காணாம போச்சுன்னு கம்ப்ளைன்ட் குடுக்க வர்றவங்க கிட்ட நாய் படத்தை பேப்பர்ல விளம்பரம் குடுங்கன்னு சொல்லுற போலீசயெல்லாம் கூட்டிட்டு வந்தா இப்படிதான் டென்ஷன்ல கத்துவாங்க…. இந்நேரம் அவங்க கிட்ட இருக்குற மோப்பம் புடிக்குற நாய கூட்டியாந்திருந்தா கூட அது போய் அவன் ரெண்டு காலுக்கும் நடுவுல இருக்குற பொடலங்காவ கடிச்சி மேட்டர் முடிச்சி இருக்கும்….. இங்கே சும்மா செவுத்துக்கு பின்னாடி கூடி நின்னுக்கிட்டு சவுண்ட் உட்ராறு….” என்று மெளனமாக வானை நோக்கி முணுமுணுக்க.. “என்ன சொன்னீங்க?….” – என்று இன்ஸ்பெக்டர் ஆத்திரமாக கேட்க.. “இன்னைக்கி நீங்கதான் சார் அவனுக்கு எமன்….” என்று சத்தமாக சொடக்கு போட்டு மரியாதையாக அவரைப் பார்த்து சொல்ல.. கொஞ்சம் கார்த்திக்கை முறைத்துக்கொண்டே ராகவ் பக்கம் திரும்பி பேச ஆரம்பித்தார் ராஜேந்திரன்.. “சார்…. அவனை பிடிச்ச பிறகு நீங்க சொல்லுறா மாதிரி உங்க கஸ்டடியில எல்லாம் எங்களால ஃபார்மாலிட்டி படி அவனை ஒப்படைக்க முடியாது சார்…. முதல்ல ஸ்டேஷனுக்கு தான் கூட்டிட்டு போகணும்….” “அய்யோ…. முதல்ல நீங்க அவனை புடிங்க சார்….” – இன்ஸ்பெக்டரை நோக்கி கூலாக கார்த்திக் இதை சொல்ல “ஹி இஸ் ரியலி இரிடேட்டிங் மீ….” என்று தன் லத்தியை கார்த்திக் நோக்கி கான்பித்து ராகவிடம் கடித்துக்கொண்டார் ராஜேந்திரன்…. தயவு செஞ்சி கொஞ்சம் பேசாம இருடா…. என் லைஃப் டா இது – என்று ராகவ் சொல்ல கார்த்திக் கொஞ்சம் அமைதி ஆனான்.. “எட்டாவது பிளாட்ஃபார்மில் ட்ரெயின் வரும்போது எஸ்.டீ.டி பூத்துக்கு முன்னாடி “S5″ கம்பார்ட்மென்ட் நிக்கும் சார்… அப்போ அதுல எங்க ஆள் ஒருத்தன் மஃப்டியில் நிப்பான்.. சாதாரணமா இறங்குற மாதிரி நெருங்கி வந்து அவனை பிடிக்கிற ப்ளான் இருக்கு, அப்போ கீழையும் பூத் கிட்ட ஒரு ஆள் சிகப்பு டீ ஷர்ட்டில் நின்னுட்டு இருப்பான்.. பிடிக்க கஷ்டம் இருக்காது.. அப்படியே தப்பினாலும் அவனை ஸ்டேஷன் என்ட்ரன்ஸ் முன்னாடி பிடிக்க ரெண்டு பேரையும்…., பயணிங்க வெளியே போற எக்சிட் பக்கமும் ரெண்டு பேரையும் போட்டிருக்கேன்.. நீங்க சொல்லுறா மாதிரி எடுத்தோம் கவுத்தோம் னு சொல்லி துப்பாக்கிய தூக்கிட்டு அவன் முன்னாடி போய் நின்னு சினிமாவுல வர மாதிரியெல்லாம் பண்ண முடியாது… எப்படியும் அவன் தப்பிக்க மாட்டான் சார்… நம்புங்க….” – என்று ராஜேந்திரன் பேசும்போது அவரது பேச்சை விடவும் அவரது உடல் மொழி மிகவும் நம்பிக்கை தரும்விதம் இருந்தது ராகவ்கு…. இன்னும் பத்து நிமிடத்தில் ரயில் வருமென்று ஸ்டேஷன் ஸ்பீக்கர்கள் ஒலித்தன… நிமிடங்கள் குறைந்தது…. இன்னும் இரண்டு நிமிடங்கள்தான் பாக்கி… நேரம் வந்து விட்டது…

10 Comments

  1. Sir eathu sex story pola thriyala sir eana story onum puriyala please sex part eapo varum tell me

  2. Next post please.

  3. Next post please sir

  4. சூப்பர் கதை

  5. Hello next post varuma varatha. Summa delay panni kadupu ethitu. Story theriuma ella theriyatha. Pls podunga….

  6. Ney la thooku la thoongnum story theeiyala na. Ennum subject ku varave ella.

  7. Next post please

Comments are closed.