இடை அழகி மேடம் சங்கீதா 12 171

காரணம் எதுக்குன்னா முதல்ல ஆற அமர எல்லாரும் சூப்பை ஊதி குடிச்சி முடிச்ச பிறகு பசி நல்லா எடுக்கும்னு சொல்லித்தான் இந்த பழக்கம் இருக்கு..” “குடிக்கலைனா கூட எனக்கு நல்லாவே பசி எடுக்குமே….” என்று கார்த்திக் பதில் சொல்ல.. “சப்…. என்ன பேசி முடிக்க விடுடா வாத்து..” என்று மெதுவான கடுப்பில் ஒரு நிமிடம் லேசாக கடித்துக் கொள்ள… கார்த்திக் பாவமாக அவளைப் பார்த்து கொஞ்சம் உரிமையுடன் லேசாக முறைத்தான்.. “சரி சரி… ஐ அம் சாரி…. ஐ அம் சாரி… ஏதோ நினைப்புல சொல்லிட்டேன்… கோச்சிகாத சரியா…. ஹா ஹா… சோ ச்வீட்… இப்போ உன் மூஞ்சிய பார்க்க செம காமெடியா இருக்குடா….” “போதும் போதும் மேல சொல்லு…. சாப்புட வர்றதே பசி எடுக்குறதாலதான்…அங்க வேற வந்து சூப்பை குடிச்சி எக்ஸ்ட்ரா பசி வர வெச்சிப்பாங்கலாம்…. நல்ல கூத்து டா” என்று முணுமுணுத்தான் கார்த்திக்.. அவனிடம் புஃப்பே எதார்த்தங்களை எடுத்துக் கூறுவதை கூட ஒரு நிமிடம் மறந்து அவன் வெகுளியாக பேசும் விதத்தை அவளது ஆழ் மனதில் ரசித்தாள் சஞ்சனா… கடந்த சில ஆண்டுகளாக அவளிடம் போலியாக பேசியவர்கள் அதிகம்…. ஆனால் இப்படி யாரும் அவளிடம் மனம் விட்டு உண்மையாய் பேசியதில்லை…. அதை கார்த்திக்கிடம் உணர்ந்து ரசித்தாள் சஞ்சனா..“வித விதமா நிறைய சாப்பிடுற வரைடீஸ் வெச்சி இருப்பாங்க…. நமக்கு எது வேணுமோ அதை கொஞ்சகொஞ்சமா எடுத்து வெச்சி சாப்டுக்கலாம்…. இன்னொரு விஷயம் சொல்லவா?…. நல்லா கொட்டிகனும்னு வர்றவங்க ஒரு ஜாதி… அது கூட பரவாயில்ல.. என்ன சாப்பிடுரதுன்னே தெரியாம பேந்த பேந்த முழிச்சி கடைசியா ஏதாவது புடிச்ச்சதை சாப்டுட்டு மீதிய தட்டுல வெச்சிட்டு வேஸ்ட் பண்ணுறது இன்னொரு ஜாதி….” – இதை அவள் சொல்லும்போது கார்த்திக் ஒரு திருட்டு முழி முழித்தான்.. அதை கவனித்த சஞ்சனா.. “ஹா ஹா… ச்சீ லூசு நான் உன்னை சொல்லல…. அதான் நான் உங்கூட இருக்கேன்ல எது எது என்னன்னு உனக்கு நான் சொல்லாமலையா போய்டுவேன்….? முதல்ல நான் சொன்ன ரெண்டு தரப்பினர விடவும் எல்லாத்தையும் கொஞ்சகொஞ்சமா ஒரு ருசி பார்த்துட்டு எது ரொம்ப பிடிச்சி இருக்கோ அதை கடைசியா கொஞ்சம் தட்டுல அதிகம் வெச்சி திருப்தியா சாப்டுட்டு போறவங்களுக்குதான் இந்த புஃப்பே கரெக்ட்டா இருக்கும்….” என்றாள்…. “சரி உனக்கு எது பிடிச்சி இருக்குன்னு சொல்லு..” என்றாள் சஞ்சனா.. “ஹ்ம்ம்…. நமக்கெல்லாம் நாக்குல எது பட்டாலும் உடனே ஜிவ்வுன்னு காரமா இருக்கிறதுதான் வேணும்…. என்று கார்த்திக் சொல்ல “ஹா ஹா…. நீயும் என் ஜாதிதான்… வா..” என்று சொல்லி ஸ்பைசி சில்லி க்ரேவியும் மெத்தென்று இருக்கும் ருமாலி ரொட்டியையும் வைத்து லேசாக மூக்கிலும் கண்களிலும் தண்ணி வரும்விதம் சாப்பிடுவதைப் பார்த்து இருவரும் ஒருவருக்கொருவர் மெதுவாக சிரித்துக் கொண்டார்கள்…. சாப்பிடும்போது ஆரம்பத்தில் கார்த்திக் எப்படி சஞ்சனாவின் தோற்றத்தை ரகசியமாக ரசித்தானோ அதே போல இப்போது சாப்பாட்டில் ஆழ்திருக்கும் அவனை அவனுக்கே தெரியாமல் சஞ்சனா அவன் முகத்தில் தெரியும் ஒரு விதமான வெகுளித்தனத்தயும் வசீகரத்தையும் ரகசியமாக கவனித்து ரசித்தாள். நடுவில் அவனுக்கு சற்று பொரை ஏற…. உடனே அவளது இருக்கையில் இருந்து எழுந்து அவன் பக்கம் வந்து நின்று தலையில் தட்டும்போது அவனை நெருங்கி நின்றாள். அப்போது அவனது முகம் லேசாக அவளது இடுப்பில் உரசியது.. அந்த ஒரு நொடி ஏற்பட்டபட்ட உணர்வு என்ன உணர்வு என்று அவனாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை..ஆனால் அவளுடைய இந்த பரிவும், நட்பும், அரவணைப்பும் அவன் மனதில் ஒரு விதமான சந்தோஷத்தைக் குடுத்தது…. அவளின் கையை தன் தலை மீது பிடித்து “போதும்” என்று சொல்லவந்து அவளுடைய மென்மையான ஸ்பரிசத்தை தொட்டபோது சில நொடிகளில் பொறை தானாகவே நின்றது அவனுக்கு.. அவன் கைகள் தன் கை மீது பட்டபோது அவளும் செயலற்று நின்றாள். இருவரும் ஒருவருக்கொருவர் ஒன்றும் பேசாமல் சில நொடிகள் பார்த்துக்கொண்டிருக்க “ஹஹா.. ஆன்னு வாய திறந்துகிட்டு இருக்காத… ஈ போய்ட போது.. ஃபர்ஸ்ட் வாய க்ளோஸ் பண்ணு…” என்று லேசாக வெட்கத்தில் சிரித்து கண்களை நேராக அவனை பார்ப்பதை தவிர்த்து கீழே பார்த்து அவளது இருக்கைக்கு சென்று அமர்ந்தாள்..” அவளது சிரிப்பை சந்தோஷமாக வைத்த கண் வாங்காமல் பார்த்து வாயை மெதுவாக அசை போட்டுக்கொண்டு இருந்தான் கார்த்திக்…. சற்று நேரத்திருக்கு பின் “சரி வா டெஸர்ட்க்கு போலாம்..” என்று அவள் சொல்ல ஒன்றும் புரியாமல் முழித்தான்.. அதைப் பார்த்து “ஹா ஹா… டெஸர்ட்னா சாப்டு முடிச்ச பிறகு ஜூஸ் இல்லைனா ஐஸ்க்ரீம் போல எடுத்துக்குற வஸ்த்துங்க.. வேணாமா உனக்கு?” என்று சிரித்து கேட்க.. உடனே மடக் மடக் என்று தண்ணியை குடித்துவிட்டு “ஐ கம் யூ குய்க்லி” என்று ஏதோ இங்லீஷ்ல உளற “நீ என்ன சொல்ல வந்த….” என்று புரியாமல் சஞ்சனா கேட்க… “அய்யோ உடனே உன் கூட வரேன்னு சொன்னேன்….

10 Comments

  1. Sir eathu sex story pola thriyala sir eana story onum puriyala please sex part eapo varum tell me

  2. Next post please.

  3. Next post please sir

  4. சூப்பர் கதை

  5. Hello next post varuma varatha. Summa delay panni kadupu ethitu. Story theriuma ella theriyatha. Pls podunga….

  6. Ney la thooku la thoongnum story theeiyala na. Ennum subject ku varave ella.

  7. Next post please

Comments are closed.