இடை அழகி மேடம் சங்கீதா 12 171

ஒரு பெரிய வட்டமாக அனைத்து குழந்தைகளும், பார்வயற்றவர்களும், மருமனமாகப் போகும் பெண்களும் சேர்ந்து மதிய உணவுக்கு ஸ்பெஷல் சாப்பாடு சாப்பிட்டார்கள். சாப்பிடுவதற்கு முன்பு “கடவுள் நேரில் அவதரிப்பதில்லை… அவர் எங்களுக்கு இந்த இனிய நாளில் அண்ணதானம் செய்ய சங்கீதா என்ற தேவதையை அனுப்பி எங்களுக்கு ஓராண்டுக்கு படிப்பும், உணவும், குடுத்து மகிழ்ச்சி அளித்தமைக்கு அவரை என்றும் எங்கள் மனதில் எண்ணி நன்றியை சொல்லுவோம்..” என்று சொல்லி முடித்ததும்.. “எப்படா பேசி முடிப்பாங்க..” என்று பார்க்க கலையாக சற்று கருப்பு நிறத்தில், தேங்காய் எண்ணை பூசி சிறிய ரெட்டை ஜடை போட்டு சிகப்பு ரிப்பன் கட்டி சாப்பாடிலேயே கண்களை குறியாக வைத்திருந்தது ஒரு இரண்டடி வளர்ந்த குழந்தை…. அது அனைவரும் சாப்பிட உட்காரும்போது சந்கீதாவைப் பார்த்து புருவங்களை உயர்த்தி அந்த ஒரு கனம் அந்தஅ சாப்பாடுதான் அதன் சந்தோஷ உலகம் என்பது போல் சோற்றில் கை வைத்தபோது சங்கீதாவின் கண்கள் அவளையும் அறியாமல் அழுதது.. குளமான கண்களுடன் ராகவை திரும்பிப் பார்த்தாள்… “நீ குடுத்ததா உன் பேரை எழுதி குடுத்து நான்தான் இதுக்கெல்லாம் செலவு பண்ணேன்…. நான் குடுத்தா என்ன.. நீ குடுத்தா என்ன?… ரெண்டும் ஒன்னுதானே?” – அவன் சாராவின் கண்களை துடைத்தபடி சொன்னான் ராகவ்…. எங்கே நிற்கிறோம், யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் அவன் தோள்களில் சாய்ந்து அனைத்துக் கொண்டாள் சங்கீதா.. மறுமணம் செய்துகொள்ளும் பெண் ஒருவள் சங்கீதாவின் அருகினில் வந்தாள்… எதற்கு வருகிறாள் என்று தெரியாமல் சங்கீதா ஆச்சர்யமாக பார்த்தாள்.. திடீரென அவள் கையில் ஒரு சின்ன வெள்ளை அட்டையில் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறத்தில் ஸ்கெட்ச் பேனா வைத்து டிசைன் வரைந்து அதற்குள் ஒரு வாக்கியத்தை எழுதி இருந்தாள். அதை சங்கீதா பார்பதற்குள் ராகவ் வாங்கி பார்த்தான். என்ன எழுதி இருக்கிறதென்று படித்த பிறகு “கொஞ்சம் பொறு.. நான் ஒன்னு தரனும்.. அதை பார்த்துட்டு இதை படி… ரொம்ப பொருத்தமா உனக்காகவே எழுதி இருக்காங்க..” என்றான்… “நீ என்ன தரப்போற?….” – பணித்த கண்களில் மென்மையாக புன்னகைத்து கேட்டாள் சங்கீதா.. “இதுதான்….” என்று ஒரு சிறிய சில்கி ஷைநிங் துணியால் கிஃப்ட் ராப் செய்யப்பட்டு இருந்த ஒரு சின்ன டப்பாவைக் குடுத்தான். சங்கீதா அதைப் பிரித்தாள்…. பிரித்தவுடன் அந்த டப்பாவில் “இது நான் என் வாழ்கையில் உனக்கு குடுக்கும் உயர்மிகுந்த பரிசு… இதை எடுத்துகுட்டா நீ எனக்கு இந்த உலகத்துல வேற எதுவும் பெருசா குடுத்துட முடியாது”ன்னு எழுதி இருந்தது.. உள்ளே பார்த்தாள்.. அதில் குங்கும போட்டு வைத்து மஞ்சள் கட்டியில் கட்டிய தாலி கயிறு இருந்தது. அதைப் பார்த்ததும் உதடுகள் விம்மியது, அவள் ஆழ் மனதில் இருந்து சந்தோஷ கண்ணீர் அடங்காமல் வந்தது.., அழுவதற்கு முன்பே கண்னங்கள் சிவந்தது.. மனதில் ஏகத்துக்கும் எகுறிய சந்தோஷத்தில் மூச்சு வாங்கியது… உடனே ராகவின் நெஞ்சில் சாய்ந்து இன்னும் அழுத்தமாக கட்டிக் கொண்டாள். பின்னாடி இருந்து கார்த்திக்கும் “சூப்பர் மச்சி” என்று கைத் தட்டினான்… சஞ்சனாவுக்கும் இந்த இனிமையான தருணம் சந்தோஷத்தைக் குடுத்தது.., சங்கீதாவின் அருகே வந்து சந்தோஷத்தின் மிகுதியில் அழுது கொண்டிருந்தவளின் தோளில் தடவி நிமிர்த்தி பார்த்து “என் வாழ்க்கைல நான் இன்னொரு பொன்னைப் பார்த்து உண்மையிலேயே சந்தோஷப்படுறேன்னா அது இந்த நாள்தான்கா…. நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க.. ராகவ் மனசுல பொண்டாடீங்ற இடம் பிடிச்சிடீங்க… சத்தியமா உங்களுக்காக நான் ரொம்ப சந்தோஷப் படுறேன்….” என்று சொல்லி விட்டு அனைவரையும் சங்கீதாவின் அருகே வரும்படி செய்து “எல்லாரும் ஜோரா நம்ம சங்கீ அக்காவுக்கு சத்தமா ஒரு ஓ போடுங்க பார்க்கலாம்…” என்று சஞ்சனா சொன்னவுடன் குழந்தைகள், பெண்கள், கார்திக், சஞ்சனா, ராகவ் மற்றும் ஸ்நேஹா ரஞ்சித் உட்பட.. ராகவின் சராவுக்காக அவள் காது “ஓய்ங்” என்று சத்தம் வரும் அளவுக்கு “ஓ” என்று கத்தினார்கள். கூட்டம் ஒரு புறம் கத்திக்கொண்டிருக்க ராகவ் அவனது சாராவை அவளது ஒப்புதலுடன் முறைப்படி உரிமையுடன் அவளது தோளில் கைப் போட்டு தனியாக ஒரு பக்கம் நகர்ந்து மெதுவாக அவளுடன் ஜோடியாக நடந்து சென்றான்….

10 Comments

  1. Sir eathu sex story pola thriyala sir eana story onum puriyala please sex part eapo varum tell me

  2. Next post please.

  3. Next post please sir

  4. சூப்பர் கதை

  5. Hello next post varuma varatha. Summa delay panni kadupu ethitu. Story theriuma ella theriyatha. Pls podunga….

  6. Ney la thooku la thoongnum story theeiyala na. Ennum subject ku varave ella.

  7. Next post please

Comments are closed.