இடை அழகி மேடம் சங்கீதா 12 171

“யோவ்.. யாராவது நிறுத்துறீங்களா? இல்ல அந்த எழவ தூக்கி போட்டு உடைக்கட்டுமா?”…. என்று இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அடித்தொண்டையில் இருந்து கத்தினார்…. “நல்ல பாட்டுதானே அதுக்கு ஏன் இந்த மனுஷன் இப்படி கத்துறாரு….” என்று முணுமுணுத்துக்கொண்டே ஹெட் கான்ஸ்டபிள் அந்த ரேடியோவில் சத்தத்தை திருகி குறைத்தார்.. அப்போது “ட்ரிங்…. ட்ரிங்….” என்று மேஜையின் ஓரத்தில் உள்ள ஃபோன் ஒலித்தது…. “ஹலோ” – கணீர் குரலில் பேசினார் ராஜேந்திரன்.. “ஹலோ.. போலீஸ் ஸ்டேஷன்?” – ஹாஸ்பிட்டலில் இதற்கு முன்பு கேட்ட அதே குரல் இப்போது ராஜேந்திரனுக்கு கேட்டது.. “ஆமா… போலீஸ் ஸ்டேஷன் தான்…. நீ… அன்னிக்கி…” – என்று ராஜேந்திரன் பேசும்போது குறுக்கிட்டான்.. “சார் நான் யாருங்குறதை அப்புறம் பார்த்துக்கலாம்…. அன்னிக்கி நீங்க ஹாஸ்பிட்டல்ல தப்ப விட்ட ஆளு இன்னைக்கி ரயில்வே டேஷன்ல இருக்கான்..” – படபடப்புடன் பேசினான் அவன்… “நீ யாருங்குறதை முதல்ல சொல்லு….” – இன்ஸ்பெக்டர் எரிச்சலுடன் கத்தினார்… “இப்போ உங்களுக்கு மேல விவரம் சொல்லவா இல்லை ஃபோன் வெச்சிடவா?” – பயந்த குரலில் சத்தம் குறைவாகவும் அதே சமயம் கோவமாகவும் பேசினான்.. “ஏய்.. இரு இரு… சொல்லு விஷயம் என்ன?” – ஒரு புறம் எப்படியாவது அவனை இன்னும் கொஞ்சம் பேச விட்டு அவனது குரலை டாப் செய்ய அருகே உள்ள கான்ஸ்டபிளை அவசரமாக கையசைத்து சத்தம் இல்லாமல் அமைதியாய் அழைத்து செய்கை காட்டினார்…. “அந்த ஆளு ப்லாட்ஃபார்ம் எட்டுல ஒரு எஸ்.டி.டீ பூத் கிட்ட இருக்கான். அவன் கைல ஒரு பொட்டி இருக்கு..கூடவே ஒரு கேமரா வெச்சிருக்கான்….” – பேச்சுக்கு இடையே அதிகம் மூச்சு வாங்கியது அவனுக்கு.. “முதல்ல நீ யாருங்குறது…” – இன்ஸ்பெக்டர் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டான்.. “சார்.. அதான் வேணாம்னு சொல்லுறேன்ல.. நான் வெக்குறேன்…” – இந்த முறை நன்றாகவே கத்தினான்.. “இரு இரு.. நான் கேக்கல.. கேக்கல… ஹலோ.. இருக்கியா?.. ஹலோ… ஹலோ….” – இன்ஸ்பெக்டரின் கடைசி ஹலோவுக்கு குரல் உயர்ந்தது.. “சீக்கிரம் சொல்லுங்க…” – பதட்டம் இன்னும் அதிகம் ஆனது அவன் குரலில் “நீ யாருன்னு சொல்லலைன்னா பரவாயில்ல… ஆனா நாங்க தேடுற ஆள் அவந்தான்னு எப்படி தெளிவா சொல்லுற?” – கோவத்தை அடக்கி அமைதியாக பேச முயற்சித்தார் ராஜேந்திரன்… “அவன் ஸ்டேஷன் உள்ள போறதுக்கு முன்னாடி ஒரு பப்ளிக் டாய்லட் கிட்ட ஒரு கருப்பு கவர்ல நீங்க போன தடவ ஹாஸ்பிடல்ல அவனை தப்பிக்க விட்டப்போ போட்டிருந்த வார்டன் டிரஸ்லாம் தூக்கி எறிஞ்சிட்டு போனான்… என்னால அதிகம் பேச முடியாது.. முடிஞ்சா புடிச்சிக்கோங்க…. நா கெளம்புறேன்…” “ஹலோ.. ஹலோ…” கீ.. கீ.. கீ.. கீ….- ஃபோன் துண்டிக்கப்பட்டது… “ச்ச.. என்ன எழவுயா இது…. வாங்கையா..”

ராஜேந்திரன் உடனே ஹெட் கான்ஸ்டபளிடம் என்னென்ன செய்ய வேண்டுமென்று ஜீப் ஏறிக்கொண்டே கைகளை அசைத்து அசைத்து “புரிஞ்சிதாடா வெலக்கென்ன..” என்று கடித்துக்கொண்டே விளக்க “ஆங் ஆங்.. ரைட்..” என்று சுய கெளரவம் எதுவும் பார்க்காமல் அதே சமயம் ஒழுக்கம் தவறாமல் இன்ஸ்பெக்டருக்கு பதில் அளித்துக்கொண்டே பவ்யமாக உடன் சென்றார்…. ஃபோனில் ஹெட் கான்ஸ்டபிள் யார் யார் எங்கெங்கே மஃப்டியில் நிற்க வேண்டுமென்று அவசரமாக சொல்லிக்கொண்டே இருக்க ஸ்டேஷன் வந்தது.. ஒரு கான்ஸ்டபிள் சிகப்பு நிற டீ ஷர்ட் மற்றும் வேஷ்டியில் நின்றுகொண்டு சாதாரணமாக பீடி பிடித்துக்கொண்டிருந்தார்…. அவரிடம் முன்கூட்டியே தகவல் சொல்லியாகிவிட்டது.. ஸ்டேஷன் உள்ளே டூ வீலர் மற்றும் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் ஒரு ஐந்து அடி சுவர் தடுப்பு இருந்தது.. அங்கே குனிந்து மெதுவாக ராகவ்கு ஃபோன் செய்தார் ராஜேந்திரன்.. “ஹலோ ராஜேந்திரன்.. சொல்லுங்க..என்ன விஷயம்..” – சீரியஸாக கவனித்தான்.. ராகவ்…. “சார் நீங்க அடையாளம் சொன்ன ஆளை கண்காணிச்சோம், அவன் இப்போ ரயில்வே ஸ்டேஷனில் இருக்கான். கைல ஒரு பெட்டியும் கூடவே ஒரு சின்ன வீடியோ கேமராவும் இருக்கு. கூடவே இன்னொரு முக்கிய விஷயம் சொல்லணும்…” “சொல்லுங்க….” “அன்னிக்கி ஹாஸ்பிட்டல்ல எங்க கான்ஸ்டபிள் ஒருத்தனை சுட்டுட்டு ஓடின ஆசாமியோட உருவங்க எல்லாமே இவனோட நல்லா பொருந்துது சார்..” “ரியல்லி ஃபன்டாஸ்டிக்.. நீங்க எல்லா என்ட்ரன்ஸ்லையும் உங்க ஆளுங்கள போட்டுடுங்க.. நான் உடனே கிளம்பி அங்க வரேன்…. அவன் எனக்கு என் கஸ்டடியில வேணும். அப்புறம்…அவன் பார்க்க கொஞ்சம் வாட்டசாட்டமா இருந்தானா?..” “ஆமா சார்…” கண்களை மூடி தீவிரமாக யோசித்தான்..”ஹ்ம்ம்… எனக்கும் அந்த உருவம் பொருந்துது..” “நீங்க எதை சொல்லுறீங்க..” “ஒன்னும் இல்ல நேர்ல வந்து சொல்லுறேன்…” அதன் பிறகு ராகவின் கார் சிறுத்தையை போல சீறிப் பாய்ந்ததெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரியும்.. சற்று நேரத்துக்கெல்லாம் மீண்டும் ராஜேந்திரன் ஃபோன் செய்தார்.. சொல்லுங்க ராஜேந்திரன்… நீங்க மெதுவா உள்ளே டூ வீலர் சைக்கிள் பார்கிங் இருக்குற இடத்துக்கு வந்துடுங்க…. முடிஞ்ச வரைக்கும் கூட்ட நடமாட்டத்தோட சேர்ந்து முகம் காமிச்சிகாம வந்து சேருங்க… ஒரு நாற்பது அம்பது அடி கடந்து வந்தா எங்க ஆளுங்க சத்தம் குடுக்காம நின்னுட்டு இருப்பாங்க… அங்க வந்து அடையாளம் பார்த்துக்கோங்க… சரி சரி.. நீங்க சொன்ன மாதிரியே வரேன்…

10 Comments

  1. Sir eathu sex story pola thriyala sir eana story onum puriyala please sex part eapo varum tell me

  2. Next post please.

  3. Next post please sir

  4. சூப்பர் கதை

  5. Hello next post varuma varatha. Summa delay panni kadupu ethitu. Story theriuma ella theriyatha. Pls podunga….

  6. Ney la thooku la thoongnum story theeiyala na. Ennum subject ku varave ella.

  7. Next post please

Comments are closed.