இடை அழகி மேடம் சங்கீதா 10 70

இப்போ நான் கிளம்புறேன்.” என்றாள். அலை போன்ற களைந்த முடியுடன் ராகவ் தனது இரு கைகளிலும் casual ஆக shirt துணியை மடித்து விட்டு தசை முறுக்கு தெரியும்விதம் வசீகரமாக மெல்லிய வெளிச்சத்தில் வராந்தாவில் நின்று கொண்டிருந்தான். கிளம்பும்போது கதவருகே நின்றுகொண்டு ராகவை ஒரு பார்வை ஏறிட்டு பார்த்தாள் சஞ்சனா. “என்ன ஆச்சு சஞ்சு? ஏன் அப்படி பார்க்குற?” – மென்மையாய் சிரித்து கேட்டான் ராகவ். சஞ்சனா மென்மையாக புன்னகைத்து ஒரு நொடி ராகவைப் பார்த்து மெதுவாக அவன் அருகே வந்து அவன் கன்னங்களில் அவள் கரங்களால் ஒரு நொடி தடவினாள். “என் கண்ணுக்கு இப்போ CEO ராகவ் தெரியல, என் ஆழ் மனசுல இருந்த அந்த cute ராகவ் ஒரு நிமிஷம் நியாபகத்துக்கு வந்தான். அதான் அவனை ஒரு நிமிஷம் நின்னு தரிசிச்சிட்டு போகலாம் னு நின்னேன்.” – அவளையும் அறியாது அவள் விழிகளின் ஓரம் நீர்த்துளிகள் வந்தது. “sorry டா.. ஏதோ கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன். I..I am..sorry…. நான் வரேன் டா.” ராகவ் அவளின் கைகளை ஒரு நிமிடம் பிடித்தான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சில நொடிகள் பார்த்துக் கொண்டனர். பின்பு ராகவ் அவளது கைகளை மெதுவாக விடுவித்து ஒன்றும் பேச முடியாமல் சற்று சங்கடத்தில் திரும்பிக் கொண்டான்..

ராகவ் அவனுக்குப் பின் புறம் அவள் வேகமாக இறங்கி செல்கிறாள் என்பதை டோக் டோக் என்று சஞ்சனாவின் ஹீல் ஸ்லிப்பெர்ஸ் குடுக்கும் சத்தத்தில் தெரிந்து கொண்டான். இரவு 10 மணி நெருங்கிக் கொண்டிருந்தது. சஞ்சனா அவளது வீட்டினுள் வந்தவள், நேராக கட்டிலில் தொப்பென விழுந்தாள். நீண்ட நேரம் படுக்கையில் படுத்தவாறு பலரையும் அலசி ஆராய்ந்தாள். IOFI function நடந்த போது மிதுன் பார்வையில் பொங்கிய பொறாமையும், பொதுவாக அவன் ராகவ் மீது கொண்டிருக்கும் வெறுப்பும் அவளுக்கு நினைவுக்கு வந்தது. இந்த சம்பவத்தில் கண்டிப்பாக அவனுக்கும் ஏதாவது ஒரு பங்கு இருக்கலாம் என்று அவளது ஆழ் மனது சொல்லியது. கூடவே துரை, அந்த துரைப் பற்றியும் அவனுக்கு ஏதேனும் தெரிய வாய்ப்பு உள்ளது. அவனிடம் மீண்டும் பேச வேண்டும். ஆனால் IOFI function நடந்த போது கூட அவன் நம்மிடம் ஏதோ பேச வந்து நாம் கதவை செருப்பால் அடிப்பது போல டமால் என்று சாத்தி விட்டதை எண்ணி “கொஞ்சம் சொதப்பிடோமே” என்று வருந்தினாள். மீண்டும் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தாள். “அவனுடன் பேசி பழக வேண்டும், அது மட்டும் இல்லாமல் எனக்கு அவன் குடுத்த வலிக்கு நான் இன்று வரை அவனுக்கு திருப்பி குடுக்கவில்லை. இப்போ ராகவ் கிட்டயும் அவன் ஏதோ ஒரு விஷயத்துல விளயாடுறான்னா நிச்சயம் சும்மா விடக் கூடாது. let me think….” என்று சிந்தித்தாள். ஒரு பத்து நிமிடம் கழித்து, நீண்ட ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு முகத்தை கழுவினாள். வெகு நாட்களுக்கு பிறகு தனது ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் அமர்ந்து மெல்லிய வெளிச்சம் தரும் மஞ்சள் விளக்கை போட்டு கண்ணாடியில் தன் அழகை தலை முதல் கால் வரை கண்களால் அளந்தாள். மெது மெதுவாய் தனது மேல் சட்டை பட்டன்களை கழட்டினாள்.

3 Comments

  1. Next post please…

Comments are closed.