நீ நினைச்சி இருந்தா என் கிட்ட இருக்குற நெருக்கத்தை பயன் படுத்தி, குமாருக்கு இன்னும் கொஞ்சம் பெரிய பதவி குடுக்க சொல்லி சம்பளத்தை ஏத்த சொல்லி, இன்னும் என்னென்னவோ கேட்டிருக்கலாம். ஆனா அதெல்லாம் ஒண்ணுமே செய்யல, you are a highly self esteemed women, உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு” – அவளின் கரங்களைப் பிடித்து சொன்னான் ராகவ். என்ன பேசுவதென்று தெரியாமல் ஈர விழிகளுடன் குனிந்து மௌனமாய் தன் மருதாணி கரங்களில் ராகவின் பெயரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கீதா. “எவ்வளோ professional அ நடந்துகிட்ட. உன்னை காதலிக்குறதை நினைச்சி பெருமை படுகிறேன் சரா.” – ராகவ் இதைக் கூறியதும் ஒரு நிமிஷம் நிமிர்ந்து பார்த்தாள் சங்கீதா.
“I am sorry, எந்த இடத்துல என்ன பேசுறதுன்னு தெரியாம பேசிட்டேன். I am sorry sangeetha….” “its okay da….” “டாக்டர் கிட்ட காசு விஷயத்துல நீ கேட்டுதான் நான் பதில் சொல்லனுமா? உன் கஷ்டம் என்னன்னு தெரிஞ்சி நானே முன் வந்து உதவ எனக்கு உரிமை இல்லையா?” – சங்கீதாவிடம் உரிமையுடன் கேட்டான் ராகவ். என்ன சொல்வதென்று தெரியாமல் சில நொடிகளுக்கு பிறகு “ஏன்டா இப்படி இருக்கே?” – என்று அவனை திட்டவும் முடியாமல் திட்டாமல் இருக்கவும் முடியாமல் தவித்து பேசினாள். “சரா, நான் இப்போ உன்னை இந்த நிலைமைல இங்கே தனியா விட்டுட்டு போக விரும்பல, நான் வேணும்னா….” – ராகவ் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டாள் சங்கீதா.
Next post please…
Next week 11
Next 11