இடை அழகி மேடம் சங்கீதா 10 70

ஓகே ஓகே, நீங்க நார்மல் தான். ஆனா ஒரு சின்ன request.. என்ன டாக்டர்? ஒரு.. (“க்ஹரம்” என்று தொண்டையை கரகரத்துக் கொண்டு) ஒரு வாரம் இங்கே in patient அ அட்மிட் ஆக முடியுமா? – என்றார் டாக்டர். எதுக்கு டாக்டர்? நான்தான் நார்மல் னு சொன்னீங்களே? ஆமாம் நீங்க நார்மல்தான், இருந்தாலும் தினசரி நான் உங்களுக்கு சில injection குடுக்கணும் னு விரும்புறேன்.. அது உங்களுக்கு நல்ல ஆழ்ந்த தூக்கம் தரும் அதுக்கு தான் சொல்லுறேன். நார்மல் னு சொல்லும்போது எதுக்கு injection எடுக்கணும்?… அப்படியே இருந்தாலும் அதுக்கு நான் இங்கே ஒரு வாரம் in patient அ அட்மிட் ஆகணும்? இஸ்ஸ்ஹா (சத்தம் இல்லாத பெருமூச்சு….) ஒகே, உங்க இஷ்டம்.. – என்றார் டாக்டர். அடுத்த நாள் அலுவலகத்துக்கு சென்றேன், அங்கே நவீன் இருந்தான்.. என்னடா? பார்த்தியா? பார்த்தேன், நார்மல் னு சொல்லிட்டார்.. ஒஹ்ஹ்… வெரி குட் டா.. I am happy.. “ஆனா ஒரு வாரத்துக்கு in patient அ இருக்க சொல்லி சொன்னாரு அதுக்கு நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். அந்த ஒரு நாளே என் பொண்டாட்டிக்கு தெரியாம போயிட்டு வந்தேன், இன்னும் ஒரு வாரம் போய் தங்கிட்டு வந்திருந்தால் என்னை அவ மதிக்கவே மாட்டா.” “டேய் நீ மத்தவங்கள விட்டு தள்ளு, உன் பொண்டாட்டிய உட்பட, உன் உடம்பையும் ஆரோக்கியத்தையும் கவனிடா.. டாக்டர்ஸ் எதையும் நம்ம முகத்துக்கு நேரா சொல்ல மாட்டாங்க டா, அவர் உன்னை சமாதான படுத்துரதுக்கு நீ நார்மல் னு சொல்லி இருப்பாரு. அதை நீ சீரியஸா எடுத்துக்காதடா..” “நானே சந்தோஷமா இருக்கேன். நீ ஏன் இவ்வளோ கஷ்ட படுற?” இஸ்ஹா.. (விரக்தியில் பெரு மூச்சு விட்டான் நவீன்) சரிடா…. இன்னைக்கு உனக்கு ஒரு உண்மைய சொல்லுறேன், உனக்கு கடவுளிடம் இருந்து வந்த பதில் கடிதாசி நான்தான் போட்டேன். உன் மணசு நோகக் கூடாதுன்னு நானே உனக்கு தெரியாம செஞ்ச காரியம் அது. ஒரு தடவ நீ கடவுளுக்கு கடுதாசி போட்டு இருக்கேன்னு சொல்லிட்டு பதில் வரல பதில் வரலன்னு போலம்பின, அதுக்கு நானே எழுதி உன் வீட்டுக்கு போஸ்ட் பண்ணேன். “you blody bastard, ஏன் என் கிட்ட பொய் சொன்ன, எனக்கு பொய் சொன்னா பிடிக்காது டா துரோகி, அது உனக்கு தெரியும் இல்ல இதுக்கே உன்னை நான் கொல்லனும் டா. என்னோட சிந்தனைகளோடு விளையாடி இருக்கே ராஸ்கல்.” “டேய் குமார் நீ என் friend என்கிற ஒரே காரணத்துக்காக நானும் இன்னும் இதெல்லாம் பொறுமையா கேட்டுகுட்டு இருக்கேண்டா.. வேற யாராவதா இருந்தா நடக்குறதே வேற. இவ்வளோ பேசுறியே, பல நேரத்துல நீயே என் கிட்ட நிறைய விஷயங்கள சொல்லி இருக்கே, அதெல்லம் உனக்கு மறந்து கூட போகும் தெரியுமா?” “என்ன சொல்லி இருக்கேன் அப்படி?” “உன்னை துரை நல்லா use பன்னுராண்டா. அவன் பிடியில இருந்து உன்னால வெளியில வர முடியல, அப்போ அப்போ அதை என் கிட்ட சொல்லி கஷ்ட பட்டு இருக்கடா நீ.” “துறையைப் பத்தி தப்பா பேசாத டா. எனக்கு கெட்ட கோவம் வரும். அவர் எனக்கு கடவுள் மாதிரி. எனக்கு சம்பளம் வரும் அதே மாசம் ஒன்னாம் தேதி கூடுதலா நிறைய காசை போடுவாரு.” போடலங்கா… உன் குணத்தை நல்லா use பண்ண தெரிஞ்ச முதல டா அவன். அவன் சொல்லிதானே நீ நம்ம IOFI வளாகத்துள இருக்குற கழிவு நீர் பொருட்கள மூட்டை கட்டி துறையோட laboratory ல குடுத்து அந்த மரத்த துண்டுகள செய்ய உதவுற? அது எனக்கு தெரியாதுன்னு நினைக்குரறியா? என்னிக்கி இருந்தாலும் ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் பிரச்சினை பெருசானா விசாரணை கமிஷன் வெச்சி கண்டு புடிக்கும்போது நீ கண்டிப்பா மாட்டுவ டா. “இதெல்லாம் கூட உன் கிட்ட சொல்லிட்டேனா?” “டேய் பயப்படாத டா, நான் உன் friend டா, காட்டி குடுக்க மாட்டேன். ஆனா நீ மனசளவுல ரொம்ப குழம்பி உன் ஆரோக்கியத்தை கெடுத்துகுட்டு இருக்கே டா.. அதுக்காகவாவது உன்னை ஒரு டாக்டர் கிட்ட காமிச்சி சிகிச்சை எடுத்து வாழ்க்கைல நிம்மதியா தேடுடா.. உன்னை நம்பி உன் பொண்டாட்டி மட்டும் இல்ல உனக்கு ரெண்டு பசங்களும் இருக்காங்கடா. கொஞ்சம் யோசி டா… குமார் கொஞ்சம் மௌனமாக யோசித்தான்.

3 Comments

  1. Next post please…

Comments are closed.