கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 49 15

மீனா முன் சீட்டில் அவனருகில் உட்கார்ந்ததும், கையிலிருந்த கோட்டை பின் சீட்டில் ஏறிந்தாள். கதவை மூடிக்கொண்டாள்.
“மை காட்… சத்தியமா சொல்றேன்டீ… இந்த மாதிரி நீ டிரஸ் பண்ணே… இண்டர்வியூல உன்னைப் பாக்கற அந்தக் கிழப்பசங்க அங்கேயே செத்தானுங்க… ஒண்ணுமே பேசாம வேலையைத் தூக்கி உன் கையில கண்டிப்பா குடுத்துடுவானுங்கடீ செல்லம்…’ அவள் மார்பின் மேல் வைத்த தன் கண்களை திருப்ப முடியாமல் திணறினான் சீனு.

“என்னப்பா.. நீயே கண்ணு போட்டா எப்படீ…” மீனா சிணுங்கினாள்.

“கோழி மெதிச்சி குஞ்சு சாகுமா…?”

“எந்த குஞ்சைச் சொல்றே நீ? மீனா தன் உதட்டைக் குவித்து குறும்பாகக் கண்ணடித்தாள்.

“அடிப்பாவீ… அம்மாத் தாயே… மீனாட்சீ… நீ ரொம்பவே முத்திட்டே… கெட்டு குட்டி சுவராப் போயிருக்கேடீ..!! இப்படீல்லாம் கூட உனக்கு பேசத் தெரியுமாடீ..” சீனு அவள் இடுப்பில் கிள்ளினான்.

“உன் கூட சேந்தேன்ல்லா அதான்… கையை எடுடா சனியனே… கதவாண்டை அப்பா நின்னுக்கிட்டு இருக்கார்..”

கார் ஈ.ஸீ.ஆர் ரோடில் வெண்ணையாக வழுக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திய சீனு,
“மீனு… கிட்டவாடிச்செல்லம்..” குழைந்தான்.

“இப்ப எதுக்கு வண்டியை நிறுத்தினே நீ”

“ஒரு வாரம் ஆச்சுல்லே.. ஒண்ணே ஒண்ணு குடுடீ கண்ணு…. பெட்ரோல் போட்டாத்தான் வண்டி ஓடும்..” வெட்கமில்லாமல் சிரித்தான் சீனு.

“வேணம்பா… ரோட்ல வண்டிங்கள்ளால்லாம் நிறையப் போவுதுல்லே..”

“ப்ளீஸ்… போறவன் போறான்.. வர்றவன் வர்றான்… நீ ஒண்ணே ஒண்ணுடீ….”

“நான் உன் கிட்ட வந்தா… என்னை நீ கட்டிப்புடிப்பே.. அப்புறம் என் சட்டையெல்லாம் கசங்கிப்போயிடும்.. இண்டர்வியூவுக்கு போகணுமில்லே…”

மீனா சிணுங்கியபோதிலும், சீனுவின் கண்களில் இருந்த உல்லாசம் அவளையும் பட்டெனத் தொற்றிக்கொண்டது. சீனுவின் உதடுகள் தரும் இதமான சூட்டுக்கு அவள் பெண்மை அலைந்தது. மீனா காரின் கண்ணாடியின் வழியாக முன்னும் பின்னும் ஒருமுறைப்பார்த்தாள்.

சீனுவின் கழுத்தை தன் இடது கையால் மனதில் பொங்கும் ஆசையுடன் வளைத்தாள். சீனுவைத் தன் புறம் இழுத்து அவன் நெற்றியில் ஆவலுடன் முத்தமிட்டாள். புருவங்களில் முத்தமிட்டாள். அவன் உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டாள். தன் இதழ்களில் வழியும் ஈரத்தை, தன் இதழ்களை கவ்வி உறிஞ்சிய சீனுவின் இதழ்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினாள். அவன் உதடுகள் தந்த அழுத்தத்தை மனம் சிலிர்க்க, உடல் சிலிர்க்க விழி மூடி அனுபவித்தாள்.

“தேங்க்யூடீச் செல்லம்..” சீனுவும் சிலிர்த்தான்.

சீனு தன் உதடுகளைத் துடைத்துக்கொண்டு வண்டியைக் கிளப்பினான். கார் ஓட ஓட, மீனா அவன் தோளில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டாள். அரை நிமிடத்திற்கு ஒருதரம் தன் முகத்தைத் திருப்பி திருப்பி, அவன் கன்னத்தில் தன் உதடுகளை மென்மையாக ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தாள்.

சூரியன் மேற்கில் துயில் கொள்ள சென்றுவிட்டான். வெளியில் இருட்டத் தொடங்கியிருந்தது. மொட்டை மாடி வழியாக தென்னங்காற்று குளிர்ச்சியாக அறைக்குள் வந்து கொண்டிருந்தது. செல்வா அறைக்கதவை முழுவதுமாக திறந்தான். மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாக நாலு முறை நடந்தான்.

மெள்ள மெள்ள மனதிலிருக்கும் எரிச்சல் குறைவதை அவன் உணர்ந்தான். நெற்றியில் வந்து விழும் தன் தலைமுடியை விரல்களால் கோதி, பின்னால் தள்ளிக்கொண்டான். முழுக்கைச்சட்டை பொத்தானை விடுவித்து, சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டுக்கொண்டான்.

மாடியின் கைப்பிடி சுவரை பிடித்துக்கொண்டு கீழே பார்த்தபோது, செம்பருத்தியும், நந்தியாவட்டையும், செவ்வரளியும், காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.

கொல்லையில், கிணற்று மேடையில் வேணி குத்துக்காலிட்டு உட்க்கார்ந்திருந்தாள். வேணியின் புடவை அவள் கணுக்காலுக்கு மேலேறியிருக்க, மொழுமொழுவென சதைப்பிடிப்பான கெண்டைக்காலும், வெள்ளை நிற பாதமும், பளிச்சிட்டன.

என்ன அழகு இது… இப்படி ஒரு அழகா..? முகம்தான் அழகா இருக்குன்னு நினைச்சேன்.. கழுத்துக்கு கீழவும் அழகா இருக்கான்னு நினைச்சேன்.. மொத்த உடலும் இவளுக்கு அழகா இருக்கே… கண்கள் கூசியது. செல்வா அதிர்ந்து போனான்.

சங்கர் இடுப்பில் மடித்துக்கட்டிய லுங்கியும், மார்பில் பனியனுமாக தன் முகத்தைக் கழுவிக்கொண்டு இருந்தான். வலுவான தோள்கள். கரணை கரணையான கால்கள். தொப்பை விழலாமா என யோசித்துக்கொண்டிருந்தது. அவன் ஆஃபீஸிலிருந்து அப்போதுதான் வந்திருக்கவேண்டுமென நினைத்தான் செல்வா.