கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 49 15

சுகன்யாவின் வீட்டு ஹாலில் நடராஜனும், மல்லிகாவும், தங்களுடைய வருங்கால சம்பந்தியிடம் மனம் விட்டு சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார்கள். சுகன்யா மல்லிகாவின் பக்கத்தில் உட்க்கார்ந்திருந்தாள்.

“அத்தே.. ஒரு செகண்ட்.. இப்ப வர்றேன்…” மல்லிகாவிடம் சொல்லிக்கொண்ட சுகன்யா, செல்வாவின் நம்பரை தன் செல்லில் பார்த்ததும் எழுந்து மாடிக்கு வேகமாக ஓடினாள்.

“தேங்க் யூ… தேங்க் யூ… செல்வா” படிகளில் தாவிக்கொண்டே பேசினாள். மூச்சிறைக்க கட்டிலில் படுத்துக்கொண்டாள். செல்லுக்கு ஒரு முத்தம் கொடுத்தாள்.

ஒரு வாரமா இவனை என் வழிக்கு கொண்டு வரணும்ன்னு தவிச்சிக்கிட்டு இருக்கேன். இந்த மீனா நிஜமாவே கில்லாடியா இருக்கணும். ஒரு மணி நேரத்துல இவனை எனக்குப் போன் பண்ண வெச்சுட்டாளே? சுகன்யாவின் மனது துள்ளியது.

“சாரிம்மா சுகு… அயாம் ரியலி சாரி..” செல்வாவின் குரல் கரகரத்தது.

“பரவாயில்லேப்பா. நீ சாரில்லாம் சொல்ல வேண்டாம். நீ எங்கிட்ட பேசிட்டியே அதுவே போதும் எனக்கு.” சுகன்யாவின் குரல் கம்மியது

“ஹேய்… அழறியாம்மா…? சுகா ப்ளீஸ்… என்னை கில்டியா ஃபீல் பண்ண வைக்காதே. என்னை மன்னிச்சிட்டேன்னு மட்டும் ஒரு வார்த்தை சொல்லு.”

“எனக்கு இப்பவே உன்னைப்பாக்கணும்.. அர்ஜெண்டா ஒரு விஷயம் இன்னைக்கு நான் உங்கிட்ட பேசியே ஆகணும்பா..” சுகன்யாவுக்கு மூச்சு சீராகிக்கொண்டிருந்தது.

“நாளைக்கு எங்க வீட்டுக்கு வரத்தானே போறே நீ?”

“ஆமாம் வரத்தான் போறேன்…”

“பின்னே?”

“செல்வா பிளீஸ்.. நான் சொல்றதைக் கேளு. திஸ் மேட்டர் இஸ் அல்ரேடி டிலேய்ட் பை எ வீக் நவ்.”

“இப்ப என் அப்பா… அம்மா அங்கே இருக்காங்களா?”

“ம்ம்ம்.. கீழே ஹால்லே பேசிக்கிட்டு இருக்காங்க.”

“சுகு… நான் பத்து நிமிஷத்துல உன் வீட்டுக்கு வர்றேன்.. நீ ரெடியா இரு…”

“தேங்க் யூ செல்வா.”

***

செல்லை அணைத்து விட்டு, கட்டியிருந்த புடவை, பாவாடையை உருவி எறிந்தாள். பிரா, பேண்டீஸுடன் பாத்ரூமுக்குள் நுழைந்து முகத்தை நன்றாகக் கழுவிக்கொண்டாள். புதிதாக வாங்கியிருந்த, நீல நிற ஜீன்சையும், வெள்ளை நிற டாப்ஸையும் எடுத்து போட்டுக்கொண்டாள். முகத்தில் இலேசாக பவுடரை அடித்துக்கொண்டாள். அவளுடைய இளமைகள் ஊஞ்சலாடாத் தொடங்கின.

“தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லே” வாய்விட்டு பாட ஆரம்பித்தாள்.