கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 49 15

இவளைப் பாத்தாப் பாவமா இருக்கு.. நான் என்னா வேணும்னா இவளைப் புடிச்சி தள்ளினேன்… ஏதோ எரிச்சல்ல நவுருடீன்னு தள்ளிவுட்டேன்.. சாமி சத்தியமா வேணும்ன்னு தள்ளவே இல்லே…

என்னமோ என் சனியன் புடிச்ச நேரம்.. சுவத்துல போய் இவ தலை இடிச்சிக்கிச்சி.. டங்குன்னு சத்தம் கேட்டுதே… தள்ளினதுல, நிஜமாவே இவளுக்கு தலையில அதிகமா அடிபட்டு இருக்குமா.. ரத்தம் கித்தம் கட்டிக்கிட்டு வீங்கிடிச்சா என்ன?”

இன்னும் தலையில கையை வெச்சுக்கிட்டு உக்காந்து இருக்காளே?
மனதுக்குள் சுகன்யாவின் மேல் பொங்கிய உண்மையான பாசத்துடன், கூடவே லேசான பயத்துடன், அவள் தலையை தடவிக்கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் சுகன்யாவை மெதுவாக நெருங்கினான் செல்வா. அவள் தோளில் தன் கையை மெதுவாக வைத்தான்.

செல்வாவின் மனதில் தன் மேல் இருக்கும் அக்கறையை, அவன் மனதில் ஓடும் எண்ணத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல், தலையில் ஏற்பட்ட சிறிய வீக்கத்தால், வீக்கத்தினால் உண்டான வலியால், சுகன்யா அவன் கையை வேகமாக உதறி தள்ளிவிட்டு சடாரென எழுந்து அறைக் கதவை நோக்கி நகர்ந்தாள்.

சுகன்யா தன்னை உதறியதும், உதறியது மட்டுமல்லாமல் அறைக்கதவை நோக்கி நடந்ததைக் கண்டதும், செல்வாவின் ஆண்மை, தன்னை அவள் தேவையில்லாமல் மீண்டும் மீண்டும் சீண்டுகிறாள், அவள் தன் ஆண்மையை அவமதிக்கிறாள் என செல்வா தவறாக நினைத்துவிட்டான்.

இதுதான் நேரம் என்பது…!! இதுதான் வாலில்லா ராகுவின் விளையாட்டு என்பது…!! எங்கிருந்து ஒருவன் விலக விரும்புகிறானோ அங்கேயே அவனை இழுத்துக்கொண்டு செல்லுவது!! ஒருவரைப்பற்றி, ஒருவரின் செயலைப்பற்றி தவறான தர்க்கத்தை கோபப்பட்டவனின் மனதில் விதைப்பதுதான் ராகுவின் முதல் வேலை..!!

“என்னாடீ நான் என்னா… உன்னை ரேப்பா பண்ணிட்டேன் இப்ப? வுட்டா நீ என்னமோ மேலே மேலே சீன் காட்டறே?” கொதித்துப்போனான் அவன்.

“டேய்… செல்வா.. உனக்கு என்னை ரேப் பண்ணணுங்கற அந்த ஆசை வேற உன் மனசுக்குள்ள இருக்கா… வாடா வா…
“ சுகன்யாவும் கொதித்தாள்.

“வாடா… வா… வந்து என்னை ரேப் பண்ணு… என் தலையெழுத்து உன்னை மாதிரி ஆள் மேல ஆசை வெச்சேன் பாரு… எனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்..” தன் தலையில் அடித்துக்கொண்டாள் சுகன்யா.

இப்போது அவள் ஹாலின் குறுக்கே வேகமாக நடந்து கட்டிலின் அருகில் வந்தாள் சுகன்யா. கோபத்தில், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தான் என்ன செய்கிறோம் என்பதனை உணராமல், கட்டிலின் மேல் கிடந்த தலையணைகளை, ஒன்றன் பின்னாக ஒன்றாக எடுத்து செல்வாவின் மேல் வீசி அடித்தாள். தலையனை ஒன்று செல்வாவின் முகத்திலும், மற்றொன்று அவன் மார்பிலும் மோதி பால்கனி கதவின் ஓரம் சிதறி விழுந்தன.

“சுகன்யா.. ப்ளீஸ்.. பிஹேவ் யுர்செல்ஃப்..” செல்வா தன் அடிக்குரலில் கூவினான்.

“உன் மனசுல இருக்கறது எனக்குத் தெரிஞ்சுப் போச்சுடா… இதுக்கு மேல நீ என்னை ரேப் பண்ணி, உன் கயவாளித்தனத்தை மொத்தமா எனக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்போறியா?”