“ஆண்டவா.. முருகா… இவகிட்டேருந்து என்னை நீ காப்பாத்தேன்.. முண்டமாட்டாம் பேசறாளே?” அவன் தன் தலையில் கையை வைத்துக்கொண்டான்.
“இப்ப ஏண்டா நீ ரெண்டு பொண்டாட்டிக்காரனை கூப்பிடறே? உன் நெஞ்சுல சுத்தமா ஈரமே இல்லயாடா…” சுகன்யா மேலும் அவனை வெறுப்பேற்றினாள்.
“ஏன்டீ இப்படி என்னைப் படுத்தி எடுக்கறே… அவுக்கத்தான் வுடலே.. ஆண்டவன் பேரை சொல்லக்கூட ஏண்டி தடைப் போடறே… நான் சும்மா சாதாரணமா சொன்னேன்டீ..” செல்வா நிஜமாகவே புலம்பினான்.
“ஏன்டா இப்படி அலையறீங்க…?”
“நான் எதுக்கடி அலையணும்.. நான் என்னத் தெருவுல போற பொறுக்கியா.. என்னைப்பத்தி என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே நீ?” செல்வா அவள் பக்கம் நடக்க ஆரம்பித்தான்.
“வேணாம்… நீ எதுக்காக என்னைக் கட்டிப்புடிச்சி, இழுக்க வேண்டாம்..!? நான் இந்த ரூமுக்குள்ளவே இங்கேயும் அங்கேயும் ஓடீ, உன் மேலே கீழே விழுந்து என் மண்டையை திருப்பியும் உடைச்சிக்கணுமா?
“யாருடீ உன்னை கட்டிப்புடிக்க வந்தது.. உன் தலையை தடவிக்குடுக்க வந்தேன்டி..” அவன் பரிதாபமாக பேசினான்.
“நீ என் தலையையும் தடவ வேணாம்.. என் மாரையும் தடவ வேணாம்… என் இடுப்புத் துணியை அவுக்கவும் வேணாம்… நீ இங்கேருந்து மரியாதையா போயிடு..” சுகன்யா பைத்தியம் பிடித்தவள் போல் கூவ ஆரம்பித்தாள்.
“சுகன்யா… வேணாம்டீ.. சும்மா வீணாக் கத்தாதே… யார் காதுலேயாவது விழுந்தா என் மானம் போயிடும்டீ…”
“உன் மானம் ஏன் போவனும்.. மொதல்லே என் மானம் போவட்டும்.. உனக்கு எந்த கஷ்டமும் வேணாம்… நானே என் துணியை அவுத்துடறேன்.. நீ வந்து உன் ஆசையைத் தீத்துக்க.. உன்னை நான் என் வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்தேன் பாரு.. என் புத்தியைத்தான் செருப்பால அடிச்சிக்கணும்?
சுகன்யா தன் உதடுகள் துடிக்க, கண்களில் குரோதத்துடன் கத்திக்கொண்டிருந்தவள், விருட்டென தன் ஸல்வாரை அவிழ்க்க ஆரம்பித்தாள். ஸ்ல்வார் முடிச்சை அவிழ்த்ததும், சுகன்யா தன் மேல்சட்டையை அவிழ்க்க ஆரம்பித்தாள்.
“என்னாடீ பண்றே நீ.. உனக்கு என்னப் பைத்தியம் கியித்தியம் புடிச்சுப்போச்சா… நிறுத்துடி… உன் டிராமாவை… சட்டென செல்வா, அவளுக்கு எதிர்புறம் திரும்பி சுவத்தைப்பார்க்க ஆரம்பித்தான்.
சுகன்யா மெல்லியக் குரலில் அழ ஆரம்பித்தாள்.
இப்ப எதுக்குடி நீ கண்ணைக் கசக்கறே? அவளிடம் வேகமாக வந்த செல்வா சுகன்யாவின் தோள்பட்டையை பிடித்து வலுவாக உலுக்கினான். அவன் குரல் லேசாக குளறாலாக வந்தது. கைவிரல்கள் இலேசாக நடுங்கின.
“செல்வா என் மேலேருந்து கையை எடு.. என்கிட்ட வராதே நீ… உன்னைப் பாத்தாலே எனக்கு பயமாருக்கு..” அவள் கண்கள் சிவந்து குளமாயிருந்தன.
“நான் உன்னை என்னடீ சொல்லிட்டேன்…? இப்ப எதுக்குடீ நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்றே?”
“…”
“சுகு… கேக்கறேன்ல்லா”