ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 7 33

”ம்..ம்..! போகுதுங்க…! எனக்கு அலைச்சல் இல்ல..”
”எல்லாருக்கும் இப்படி அமையாது..! இதான் நேரம்ங்கறது..!!”
”ம்..ம்..!!”
”இந்த… நகை..பணம்… இதெல்லாம்..?” என்று ஆர்வமாகப் பார்த்தார்.
” இல்ல… அதெல்லாம் பேசலைங்க..”
” அவங்களும் சொல்லலையா..?”
” ம்.. அவங்களே பண்ணுவாங்க..! ஒரே பொண்ணு..!”
”வசதி.. இருக்கில்ல…?”
”ம்..ம் .! ஓரளவு வசதிதான்..”
பின்னர் லேசான தயக்கத்துக்குப் பின் மெல்லக் கேட்டார்.
”வரீங்களா.. வெளில போலாம்.?”
”எங்க…?”
” லைட்டா… ஒரு.. கட்டிங்.. போட்டுட்டு.. வரலாம்..”
எனக்கும் போகலாமென்றே தோன்றியது.
”ம்.. போலாம்..” என்றேன்.
உடனே எழுந்து விட்டார்.
”ஒரு நிமிசம்.. வீட்ல ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்தர்றேன்..” என்று வெளியே போனார்.
என் மனதில் லேசான ஒரு கவலை வந்தது..! என்னுடன் என்றால்.. மேகலா என்ன நினைப்பாள்..?? என்ன நினைத்தால்தான் என்ன… என்று எண்ணியபடி.. எழுந்து டிவியை அணைத்து விட்டு புறப்பட ஆயத்தமானேன்..!
நான் உடை மாற்றி.. கண்ணாடி முன்னால் நின்று தலைவாறும் போது.. மூர்த்தி வந்து விட்டார்.
”போலாம்..!!” என்று சிரித்தார்.
” ஆ..! ஒரு நிமிசம்..” என்று ஜன்னலைச் சாத்தினேன். நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேற.. கஸ்தூரி ஓடிவந்தாள்.
”அப்பா… உன்ன அம்மா கூப்பிடுது..”
”எதுக்கு…?”
”தெரியலே.. உன்ன கூப்பிட சொல்லுச்சு.. அவ்வளவுதான்..”
”உங்கோத்தாக்காரி.. இருக்காளே..” என்று சலித்துக் கொண்டவர் ”ஒரு நிமிசம் இருங்க.. வந்தர்றேன்..” என்று அவர் வீட்டுக்குப் போனார்.
அங்கேயே நின்றுவிட்ட கஸ்தூரி என்னைப் பார்த்துக் கேட்டாள்.
”அண்ணா.. எங்க போறீங்க..?”
”நா.. ஸ்டேண்டுக்கு.. கஸ்தூ..”
”எங்கப்பா…?”
” சும்மா… வரேன்னாரு..”
”ஆ.. பொய் சொல்றீங்க…” என்று சிரித்தாள்.
”அட.. இல்ல..! நீ வேனா.. உங்கப்பாவையே கேட்டுப்பாரு..”
”க்கும்…”
போன வேகத்திலேயே திரும்பி வந்து விட்டார் மூர்த்தி. கஸ்தூரியிடம்..
”நீ.. போ தங்கம்மா..!!” என்றுவிட்டு.. என்னிடம் ”நடங்க போலாம்..” என்றார்.
கஸ்தூரி.. ஓடிவிட்டாள். நாங்கள் இருவரும் தெருவுக்கு போக..
”இந்த பொம்பளைங்களே.. ஆகாதுப்பா..!” என்றார்.
”ஏங்க… என்னாச்சு..?” என்று புன்னகையுடன் கேட்டேன்.
”பின்ன என்னப்பா.. ஒரு மனுஷன் வீட்டுக்குள்ளயே அடஞ்சு கெடக்க முடியுமா..? அங்க போகாத… இங்க எதுக்கு போறேனு.. எதையாவது கேட்டு.. வம்பிழுத்து… மனுஷன் நிம்மதியவே கெடுக்கற புத்தி.. அவளுகளுக்கு ” என்றார்.
நான் வாய் விட்டுச் சிரித்தேன். இந்த நிலை கூடிய விரைவில் எனக்கும் வரலாம் என்றுதான் தோன்றியது.!!
☉ ☉ ☉
காலை..!! நான் தூங்கி எழுந்த சமயம்… பின்பக்கம் துணி துவைக்கும்.. ”தப்.. தப்..” சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
ஒரு வகையில் அந்தச் சத்தம் என் தூக்கத்துக்கு இடைஞ்சலாகக் கூட இருந்தது. பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து ஜன்னலைத் திறந்தேன். மேகலா..!!

2 Comments

  1. sex டாபிக் இன்னும் டீப்பா சொன்னா கதை நல்லா இருக்கும். மத்தது ok தான் மேட்டர் வரும் போது ரசனையோட விவரித்தாள் நல்லா இருக்கும் ஷார்ட் ah முடிக்கிறது story க்கு மைனஸ்

Comments are closed.