ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 7 33

”என்ன பண்றே..?”
சிரித்தாள் .”விருந்துடா..”
”அதுக்கு..?”
”பலகாரம் பண்றேன்..”
”ரொம்பல்லாம் அலட்டிக்காத..”
” ஏன்டா..? அவகூட ஏதாவது சண்டையா..?”
”அடச்சீ… போகுதே உன் புத்தி..! ஸ்பெஷலா எதுவும் பண்ண வேண்டாம்..! எப்பயும்போல.. சிம்பிளா… பண்ணா போதும்..!!”
”நீ சரிடா..! ஆனா வர்றவ என்ன நெனைப்பா..? உங்கக்கா விருந்துக்கு கூப்ட்டு.. என்ன பண்ணி போட்டுட்டானு கேக்க மாட்டாளா..?”
”மாட்டா..! அவ அப்படிப்பட்டவ இல்ல. .”
”ஆமா..! புதுசுல எல்லா பொண்டாட்டிகளும் அப்படித்தான்..!”
”ஆனா.. அவ அப்படி இல்ல..”
” க்கும்..! அதையும் பாக்லாம்..!!”
”ம்.. பாரு.. பாரு..”
” பின்ன.. பாக்காமயா போயிருவேன்..?” என்று கிண்டலாகச் சிரித்தாள்.
அவர்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுக் கிளம்பினேன்.

சடங்கு.. சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து விட்டன.! எங்கள் தனிக்குடித்தனமும் தொடங்கிவிட்டது..!
காலை நேரம்..!!
நன்றாக தூங்கிக்கொண்டிருந்த என்னை.. உலுக்கி எழுப்பினாள்.. நிலாவினி. புரண்டு படுத்து..
”இன்னும் கொஞ்சம்..துங்க விடேன்..” என்றேன்.
”மணி.. என்ன இப்ப..?” என் பக்கத்தில் உட்கார்ந்து.. என்மேல் சாய்ந்து கொண்டு கேட்டாள்.
”ஏன்.. வாட்ச் ஓடறதில்லையா..? அப்ப மொபைல்ல பாரு தெரியும்..!” என்றேன்.
”ம்..ம்..! நல்ல யோசனை..! ஆனா.. புருஷா..! இப்ப.. நான் மணி கேக்கல..! மணியாச்சு.. எந்திரிங்கன்னு சொல்ல வந்தேன்..!”
”ம்..ம்..! மணி என்ன..?”
”எட்டு…”
”ம்..ம்..! எட்டுதானா..?”
”எட்டுதானா இல்ல..! எட்டாகிப்போச்சு..! எந்திரிச்சு.. குளிங்க..!!”
”நீ.. குளிச்சாச்சா..?”
”ம்..ம்..!!”
”டிபன். .?”
” இட்லி.. தோசை…”
”தனிக்குடித்தனத்துல… உனக்கு சிரமம் .. ஏதாவது..?”
”பழக வேண்டியதுதான.. எத்தனை நாளைக்கு பெத்தவளே சமைச்சு போடுவா..? நமக்கும் குழந்தைகள் பொறந்தா.. அதுகளையும் கவனிசசு… எல்லாம் பழக வேண்டியதுதான..? சிரமம் பாத்தா எப்படி குடும்பம் நடத்தறதாம்..?”
”ம்..ம்..!”
‘ஆவ் ‘ என வாயைப் பிளந்து கொட்டாவி விட… ‘சத்’ தென என் வாய்மீது அடித்துச் சிரித்தாள்.
”தூங்கினது போதும்..! எந்திரிங்க..”
”ம..ம்..! முத்தம்..?”
” மொதல்ல போய் வாய் கழுவிட்டு வாங்க..”
”ஏன். .?”
”வாய்ல நெறைய கிரிமி.. இருக்கும்.!!”
”நாம.. அசைவம்தான..? சைவமில்லியே..?”
”அசைவம்தான்..! அதுக்காக.. புழு.. பூச்சி… பாக்டீரியாவெல்லாம் சாப்பிட மாட்டேன்..” என்று என் கன்னத்தில் சன்னமாக அடித்தாள்.
அவளை இறுக்கி.. அவள் மோவாயைக் கடித்தேன்.
”ம்..ம்..” என்று சிணுங்கினாள். அவள் உதட்டை முத்தமிடப்போக… அவளது கையை வைத்து என் உதட்டைத் தடுத்தாள். அவளை இழுத்துப் போட்டு.. பிண்ணிக் கொண்டேன். அவள் மார்பில் முகம் புரட்டினேன்.
” எத்தனை மணிக்கு எந்திரிச்ச.. நீ.?”
” அஞ்சரைக்கு…” என்றாள்.
”அவ்ளோ நேரத்துல எதுக்கு எந்திரிச்ச..? உன் புருஷன் என்ன ஆபீஸ் போறவன்னு நெனைச்சியா..? டான்னு.. ஏழரை.. எடடு மணிக்கு கெளம்பறதுக்கு..?”
”இதுக்கெல்லாம் ஆபீஸ் போகனும்னு.. இல்ல..”
”நைட் தூங்கறப்பவே.. மிட் நைட்டுக்கு மேல…”
”அப்பவும்.. அஞ்சரைக்கு முழிப்பு வந்துருச்சு..! பாத்ரூம் போய்ட்டு வந்து.. உங்கள கட்டிப்புடிச்சு.. உங்க பக்கத்துல படுத்துப் பாத்தேன்..! நீங்க சும்மா.. பெரண்டு பெரண்டு படுத்திட்டிருந்தீங்க..! சரி.. உங்க தூக்கத்த கெடுக்க வேண்டாம்னு நானே எந்திரிச்சுட்டேன்.! அப்பவே.. பின்னால வீட்ல பாத்திரமெல்லாம் உருண்டுட்டிருந்துச்சு..!!”
”ம்..ம்..!! அது.. ஒரொரு நாளைக்கு நாலு.. நாலரைக்கெல்லாம் எந்திரிச்சுரும்…!!”
”அது.. பேரு என்ன..?”
”மேகலா…”

2 Comments

  1. sex டாபிக் இன்னும் டீப்பா சொன்னா கதை நல்லா இருக்கும். மத்தது ok தான் மேட்டர் வரும் போது ரசனையோட விவரித்தாள் நல்லா இருக்கும் ஷார்ட் ah முடிக்கிறது story க்கு மைனஸ்

Comments are closed.