ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 7 33

”என்ன..?”
”காருக்கு.. ஒரு துளி சேதாரம் இல்ல..!”
”ஓ..! எப்படி இது..?”
” ரோடு.. கன்டிசன் அப்படி..!! இதுக்கும் அது லைட் பெண்டுதான்..! ஆனா அம்மா வரதுக்கு மொத அங்க.. ஸ்பீடு பிரேக்கெல்லாம் இருந்துச்சு..! அந்த லைன்ல மட்டும் இது மாதிரி விபத்துக்கள் நிறைய..!!”
”ஓ…!!”
”அப்றம்.. அன்னூர்ல.. ரோட்டோரத்துலயே ஒரு ஸ்கூல் இருக்கு..! அங்க.. அடிக்கடி விபத்து நடக்குது.. ஸ்பீடு பிரேக்.. வேனும்னு.. எவ்வளவோ.. போராட்டங்கள் எல்லாம் நடத்திப்பாத்தாங்க…!”
அதே ”ஓ…!!” அப்பறம் ”ஆமா ஏன்..?” என்றாள்.
”என்ன.. ஏன்..?”
”இல்ல…ஸ்பீடு பிரேக் போட்டா.. என்ன.?”
” அம்மா காரு.. பறக்கனும்மா..!! ஸ்பீடு பிரேக் போட்டா… அது முடியாதில்ல..”
” ஆனா… அவங்க… ஹெலிகாப்டர்ல இல்ல போவாங்க…?”
”அது..சமய சந்தர்ப்பத்த பொருத்து… மாறும்..!!”
”ஓ…”
” ஆனா.. இதுல… என்ன ஒரு கொடுமைன்னா.. இதெல்லாம் அம்மாக்கு சொல்றதுக்குத்தான் யாரும் இல்ல..! அதே அம்மா இந்தப்பக்கமும் ஒரு தடவை வந்துருந்தாங்கனனா.. இந்த ரோடும் இப்படி இருந்துருக்காது..!!” என்றேன்.
பைய்காரவரை மெதுவாகவேதான் பயணம் செய்தோம்..! அங்கங்கே நிறுத்தி.. புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.!! வழியில்…நிறைய.. சூட்டிங் ஸ்பாட்கள் இருக்கின்றன..!! அன்றைய தினம்… படகு இல்லத்துடனேயே.. முடிந்து விட்டது….!!!!!

”வாடா..” என்று மலர்ந்த முகத்துடன் என்னை வரவேற்றாள் என் அக்கா. அடுப்படியில் ஏதோ வேலையாக இருக்க வேண்டும் .
”புது மாப்பிள்ளை…! எங்க உன் பொண்டாட்டி..?”
”அவ.. வீட்ல இருக்கா..”
”எப்ப வந்தீங்க… ஊட்டிலருந்து..?”
” நேத்து.. ”
”நல்லா.. ஊரச்சுத்தினீங்களா..?”
”ம்..ம்..!!”
”உன் மூஞ்சப்பாத்தாலே தெரியுது..” என்று சிரித்தாள் ”என்னவோ சொன்னாப்ல..”
”சரி.. எங்க ஒருத்தரையும் காணம்..?”
”அம்மா குளிச்சிடடிருக்கு..! குழந்தைங்க ஸ்கூல் போய்ட்டாங்க..”
”ஏன்… நீ போகல..?”
”எனக்கு ஒடம்பு கொஞ்சம் செரியில்ல..! அதான் லீவ் சொலலிட்டேன்..!”
”என்னாச்சு.. ஒடம்புக்கு. .?”
”கொஞ்சம்.. ஃபீவரிசா இருக்கு..! டேப்லெட் போட்றுக்கேன்..! உக்காரு காபி போடறதா..?”
”இல்ல.. வேண்டாம்..!” சோபாவில் சாய்ந்தேன் ”உன் புருஷன்..?”
”மச்சான்னு சொன்னா.. என்ன கொறஞ்சா போவ..?” என்று கடிந்து கொண்டாள்.
”ஏன்.. உன் புருஷன்னு சொன்னா மட்டும் என்ன.. நீ கொறஞ்சா போயிடப்போறே.. இல்ல உன் புருஷன் கொறைஞ்சுருவாப்லயா..?”
குளித்துவிட்டு என் பெரியம்மா வந்தாள். தலைமுடியை உலர்த்தியவாறு.
”வாடா தம்பி.. எப்ப வந்த..?” என்றாள்.
”இப்பத்தான்..”
”அவ வல்ல…?”
”வீட்ல இருக்கா…”
”சாயந்திரமா..அவள கூட்டிட்டு வா..! உங்கக்கா.. மெனக்கெட்டு என்னென்னமோ பண்ணிட்டிருக்கா..” என்றாள்.
அக்காவைப் பார்த்தேன்.

2 Comments

  1. sex டாபிக் இன்னும் டீப்பா சொன்னா கதை நல்லா இருக்கும். மத்தது ok தான் மேட்டர் வரும் போது ரசனையோட விவரித்தாள் நல்லா இருக்கும் ஷார்ட் ah முடிக்கிறது story க்கு மைனஸ்

Comments are closed.