ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 7 33

” நீங்க யாரையாவது… ஏமாத்தியிருக்கீங்களா..?”
”ம்…” யோசித்து ”இருக்கலாம்.. ஆனா என் மனசறிய.. யாரையும் திட்டம் போட்டு ஏமாத்தினது இல்லை..”
என்னைத் தழுவினாள்.
”ஐ லவ் யூ… புருஷா..?”
”ஐ லவ் யூ..! பொண்டாட்டி..!!” என முத்தங்களிட்டேன்.
”ஓபனா… பேசற இந்த அன்பு போதும்..!!” என்று அவளும் முத்தங்கள் கொடுத்தாள்..!!
அடுத்த நாள்..!! காலை சிற்றுண்டிககுப் பின்.. படகு இல்லம் கிளம்பினோம்..!! கிளம்பிய சிறிது நேரத்திலேயே.. சாலையோரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி..
”ஒரு நிமிசம் நிறுத்துங்க..” என்றாள்.
”ஏன்..?” அவளைப் பார்த்தேன்.
”ப்ளீஸ்… நிறுத்துங்க..”
ஓரம் கட்டினேன்.
”என்னாச்சு..?”
”ஒரு நிமிசம் பின்னால பாருங்க..” என்றாள்.
திரும்பி பின்னால் பார்த்தேன். மூன்று குதிரைகள் குப்பைத் தொட்டியை மேய்ந்து கொண்டிருந்தன..! இரண்டு பெரிய குதிரைகள்.. ஒரு சின்னக் குதிரை..!!
கேமராவை எடுத்துக் கொண்டு இறங்கினாள்.
”ஏய்.. என்ன பண்ணப்போறே.. இப்ப..?” என நானும் இறங்கினேன்.
”ஸ்நாப்ஸ்..” என்று சிரித்து விட்டு குதிரைகளின் அருகே போனாள்.
”விடும்மா..! அதுக ஏதோ.. பசில.. திணணுட்டிருக்கு..!” என்றேன்.
நான் சொல்வதற்கெல்லாம் சிரித்துக் கொண்டே.. புகைப்படங்கள் எடுத்தாள். அவளுக்குத் திருப்தியாகும்வரை எடுத்து விட்டு..
”ம்..ம்..! ஓகே போலாம்..!!” என்றாள்.
காரில் உட்கார்ந்து.. அவள் எடுத்த புகைப் படங்களைக் காட்டினாள். குதிரைகள் குப்பைகளை மேய்வதை நன்றாகவே எடுத்திருந்தாள்.
”இத.. ஃபேஸ்புக்ல போடப்போறேன்…” என்று சிரித்தாள்.
”ம்..ம்..!!” கிளம்பினோம்..!
கூடலூர் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக இருந்தது.! அங்கங்கே.. எதிரே வாகனங்கள் வரும்போது.. ஓரம் கட்டி நிறுத்தித்தான் காரை எடுக்க வேண்டிருந்தது..!
”இங்க மட்டும் ஏன் ரோடு.. இவ்ளோ மோசமா இருக்கு..?” என்று கேட்டாள்.
”அது… ஊட்டி நிர்வாக சம்பந்தப்பட்டவங்களத்தான் கேக்கனும்..” என்றேன்.
” மேட்டுப்பாளையத்துலருந்து.. ஊட்டிவரை.. மட்டும் எப்படி ரோடு… ஒரு சின்ன குண்டு.. குழி இல்லாம… அவ்வளவு இதா இருக்கு..?”
”அது… அரசியல்மா…”
”என்ன அரசியல்..?”
”அந்த ரோடு..ஊட்டிவரை மட்டும்தான் தெரியுமா.. உனக்கு..?”
” ம்.. அப்படின்னா..?”
”நம்ம லெவலுக்கு சொல்லனும்னா… திருப்பூர்லருந்து நம்ம ஊர்வரை.. ரோடு அவ்வளவு நீட்டா… இருக்கறது மட்டும் இல்லை..! ரோட்ல.. நூறு.. நூத்தம்பது கிலோ மீட்டர் தூரம்வரை… ஒரு ஸ்பீடு பிரேக்கர்கூட இல்ல தெரியுமா.?”
”அப்படியா… ஏன்..?”
”நம்ம.. ‘அம்மா..’ கார்லயும் வருவாங்க..” என்றதும் புரிந்து கொண்டாள்.
”ஓ..! கொடநாடு.. வருவாங்க.. இல்ல..?”
” ம்..ம்..! இதனால..நம்ம சிட்டிக்குள்ள எத்தனை பிரச்சினைகள் தெரியுமா..?”
”என்ன பிரசசினை..?”
”ட்ராபிக்னால விபத்து.. பிரச்சினை..! இந்த ரெண்டு மாசம் முன்னாடி.. ஒரு ஆக்ஸிடெண்ட் நடந்துச்சு.. எப்படி தெரியுமா..?”

”எப்படி…?”
”வெளியூர் பசங்க…! நாலுபேர் … அதிகாலை நேரத்துல… ஊட்டிக்கு வந்துட்டிருந்தப்ப.. எப்படி ட்ரைவ் பண்ணான்னு தெரியல..! அன்னூருக்கு இந்தப் பக்கம்.. ஒரு பாலம் இருக்கு… அந்த பாலததுருந்து.. சுமார் ஒரு ஐநூறு அடி தூரம்… காரு பறந்து போயி… பள்ளத்துக்கு நடுவால இருந்த பெரிய பாறை நடுவுல வந்த வழியப் பாத்து திரும்பி நின்னுட்டிருந்துச்சு..!”
”ஓ..!! பசங்களுக்கு…?”
”ரெண்டு பேர் ஸ்பாட் அவுட்..! ஒரு பையனுக்கு.. மண்டைல டாப் இல்ல..! மீதி ரெண்டு பேர்.. பயங்கர சீரியஸ்னு கொண்டு போய் கோயமுத்தூர்ல அட்மிட் பண்ணதா சொன்னாங்க..! அநேகமாக.. பொழைச்சிருக்க வாய்ப்பில்லேன்னுதான் பசங்க சொன்னாங்க..! ஆனா இதுல ஆச்சரியம் என்ன தெரியுமா..?”

2 Comments

  1. sex டாபிக் இன்னும் டீப்பா சொன்னா கதை நல்லா இருக்கும். மத்தது ok தான் மேட்டர் வரும் போது ரசனையோட விவரித்தாள் நல்லா இருக்கும் ஷார்ட் ah முடிக்கிறது story க்கு மைனஸ்

Comments are closed.