ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 7 33

”யாரு இவ..?” நிலாவினி கேட்டாள்.
”தெரிஞ்ச பொண்ணு..”
”நம்ம ஊரா…?”
”ம்கூம்..! டீச்சர்ஸ் காலனி..!!”
மேலே அவள் கேட்கவில்லை.
”எங்க போறது..?”நான் கேட்டேன்.
” ரூம்க்கு…”
” வேற எங்கயும்…?”
” இன்னிக்கு போதும்..”
மழை தூறிக்கொண்டே இருந்தது. சாலையில் தண்ணீர் ஓடியது. சில்வர் ஓக் மரங்களிடையே… ஊசி சாரலாக.. மழைத்துளிகள்.. பொழிந்த வண்ணமிருந்தது..!
”இப்ப.. ஸ்நாப்ஸ் எடுத்தா.. நல்லாருக்கும்ல..?” என்றாள் நிலாவினி.
”ம்..ம்..!! சூப்பரா இருக்கும்…!!” என்று காரை ஓரம் கட்டி நிறுத்தினேன்.
மழைத்தூரலில் நனைந்தபடியே… நாங்கள் இருவரும் போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம்..! எனக்கு சிறுநீர் பை நிரம்பியிருக்க…தூரலில் நனைந்தபடியே.. ஒரு ஓரமாக நின்று.. ஜிப்பை இறக்கினேன்.
” வேன் வருது..” என்றாள் என் மனைவி.
கீழிருந்து மேல் நோக்கி..ஒரு வேன் வந்து கொண்டிருந்தது. அதைப் பற்றிக் கவலைப் படாமல் நான் சிறுநீர் கழிக்க… என்னைக் கடந்த வேனுக்குள் இருந்து… ”ஆய்ய்…. ஊய்ய்…” என்று கீச்சுக் குரல்கள் உற்சாக கோஷமிட… நான்கைந்து பெண்கள். .. வெளியே கையை நீட்டி.. ஆட்டிவிட்டுப் போனார்கள்.
கன்னம் பொத்திச் சிரித்தாள். நிலாவினி.
”கண்றாவி… கண்றாவி…!!”
”இதுல என்ன கண்றாவி..?”
”பொண்ணுங்க முன்னால வெக்கமில்லாம காட்டிட்டு..”
”டோண்ட் வொர்ரிமா…! எப்படி இருந்தாலும் அவங்க.. பாக்காத சங்கதி…இல்லே.. இது..”
”ஐயோ…ச்சீ..”
மறுபடி காரில் உட்கார்ந்து காரைக் கிளப்பினேன்.
” ஆமா.. சுவேதா.. என்ன பண்றா..?” என்று கேட்டாள் நிலாவினி.
லேசாக திடுக்கிட்டு அவளைப் பார்த்தேன்…நான்….!!!!

லேசான திடுக்கிடலுடன் என் மனைவி நிலாவினியின் முகத்தைப் பார்த்தேன்.
”என்ன பண்றான்னா..?”
”ஸ்டூடண்ட்டா… இல்ல.. ஜாப் ஏதாவது…?” என்றாள்.
”ஜாப்ல.. இருக்கா…” என்றேன்.
”என்ன ஜாப்..?”
”கார்மெண்ட்ஸ்ல…”
” உங்களுக்கு எத்தனை நாள் பழக்கம்..?”
”ம்..ம்..! இப்ப கொஞ்ச நாளாத்தான்..”
”எப்படி பழக்கம்..?”
சந்தேகம் வந்துவிட்டது அவளுக்கு.
”ம்.. பிரெண்ட்ஸ் மூலமாத்தான்…”
சிறிது பொருத்து..
”அவள பாத்தா.. குடும்ப பொண்ணா தெரியல…” என்றாள்.
”எப்படி சொல்ற..?” என்று கேட்டேன்.
”அவ போட்றுக்கர ட்ரெஸ்ம்.. மேக்கப்பும்… பார்வையும்… பேச்சும்… எதுவுமே.. நல்லால்ல..”
”ஓ… கொஞ்ச நேரத்துல.. இதெல்லாம் கவனிச்சியா.. நீ..?”
”பாத்தாலே எல்லாம் தெரியுது.! அட கல்யாணம் பண்ணிட்டு ஹனிமூன் வந்துருக்காங்கன்ற அறிவு வேண்டாம்..? பொண்டாட்டி நான் ஒருத்தி பக்கத்துல இருக்கப்பவே… அப்படி வழியறா…”
நான் மௌனமாகி விட்டேன். என் முகத்தைப் பார்த்தாள்.
”என்ன.. ஒன்னும் பேசல..?”
”அதான்.. எல்லாம் நீயே சொல்லிட்டியே..?”
”அப்படின்னா… அவ…?”
”ம்..ம்..”
” அந்த மாதிரி ரகமா…?”
”ம்..ம்…”
அப்பறம் அவள் அமைதியாகிப் போனாள்.
”நிலா….” மெல்லமாக அழைத்தேன. ”ஸாரி…”
”குணாவுமா…?”
”ம்..ம்..!!”
”ச்சீ…” என வெளியே பார்த்தாள். அவள் முகம் சுணங்கிவிட்டது.
”ஸாரி.. வெரி ஸாரி..” என்றேன்.
அவள் பேசவே இல்லை.
”நிலா..”
”எப்படிடா.. நீங்கள்ளாம்… இப்படி…? வேதனையில் முனகினாள்.
” அ..அது.. வயசுக் கோளாறுல.. ஒரு…வாலிப.. இதுல…”
”என்ன எழவோ..!! கடவுளே…!!”
”ஏய்..” அவள் தோளைத் தொட்டேன்

2 Comments

  1. sex டாபிக் இன்னும் டீப்பா சொன்னா கதை நல்லா இருக்கும். மத்தது ok தான் மேட்டர் வரும் போது ரசனையோட விவரித்தாள் நல்லா இருக்கும் ஷார்ட் ah முடிக்கிறது story க்கு மைனஸ்

Comments are closed.