ஒண்ணு, என்னதான் மதன் பிரச்சினையை சரி பண்ணிட்டேன், உங்க சித்தப்பா, சித்தியை பழிவாங்கிட்டேன்னு சொன்னாலும், அவிங்க இன்னமும் உங்க வீட்லத்தான் இருக்காங்க. அவன் என்ன பண்ணான்னு தெரியாட்டியும், அங்க போனா நாம எப்டி நடந்துக்கனும், அவிங்க எப்டி நடந்துக்குவாங்கன்னு தெரியனும் இல்லையா?
கரெக்டுதான்… வேண்ணா, நாளைக்கு மதனையே கேட்டுடலாம்! என்னச் சொல்ற?
ம்ம்…
ரெண்டாவது என்ன?
இல்ல, பிரச்சினை சீரியசா போனப்ப, வேற வழியில்லாம, ஒரு தடவை அவனுக்கு கால் பண்ணேன். அப்ப என்கிட்ட கோவமா பேசுனான். நான் வீட்டுக்கு வந்தப்பவும் ஒரு மாதிரி சம்பந்தமே இல்லாத மாதிரி நடந்துகிட்டான். பேசுறதைக் கூட அவாய்ட் பண்ணான்.
எனக்கு நல்லா தெரியும், அவனுக்கு என் மேல நல்ல பாசம் இருக்குன்னு. எனக்காக இன்னிக்கு இவ்ளோ ஃபீல் பண்றவன், ஏன் அப்படி நடந்துக்கனும். முன்ன ஒரு தடவை கேட்டப்பவும் ஒரு மாதிரி தடுமாறுனான். அதான் யோசிக்கிறேன்…
அதையும் அவனையே கேக்கலாமே?
கேட்கனும். என்னமோ இருக்கு! ஆனா, அழுத்தக்காரன், வாயைத் தொறக்க மாட்டான். ஆனா, நானும் விடப் போறதில்லை. அதுனால, இது ரெண்டையும் தெரிஞ்சிகிட்டு நாம நம்ம வீட்டுக்குப் போயிடலாம். என்ன சொல்றீங்க?
ம்ம்.. ஓகே. அப்டியே பண்ணிடலாம். அப்ப நாளைக்கு மதியம், இதை அவன்கிட்ட கேட்டுரலாம்.
என் முகத்தில் குழப்பம் வந்தது. அது ஏன், நாளைக்கு மதியம்? காலையிலியே கேட்டுடலாமே?
காலையில கேட்கலாம்! ஆனா, கொஞ்சம் லேட்டாகுமே?! அதான் யோசிக்கறேன்.
எதுக்கு லேட்டாகும்? எனக்கு இன்னமும் குழப்பமாக இருந்தது.
நாம, எந்திரிச்சு, ரெடியாகத்தான்…
எதுக்குங்க லேட்டாகுது? எனக்கு புரியலை.
இல்லை, இப்பதான் ஒரு ரவுண்டு முடிஞ்சிருக்கு, இன்னும் ஒரு ரவுண்டு போயிட்டு படுத்தா, லேட் ஆகிடும். கொஞ்சம் டயர்டும் ஆகிடும்! அதான், காலையில எந்திரிக்க லேட் ஆகும்னு சொன்னேன் என்று சொல்லி கண்ணடித்தான்.