பின் நான், என் அக்காவிடம் சொன்னான். உனக்கும் அதேதான். எந்த இடத்துலியும், நீ அவரை ஒரு பொருட்டா மதிக்காத. ஆனா, அவர் முன்னாடி, நீ இன்னமும் கம்பீரமா, தைரியமா நடந்துக்கனும். ஓகேவா? சொல்லப் போனா, உன் கம்பீரமும், தைரியமும்தான் அவருக்கு முக்கிய, கடைசி தண்டனையா இருக்கனும்!
எனக்கும் முழுசா புரியலை. இருந்தாலும் ஓகே.
சரி, நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வந்துடுறேன்.
இந்த முறை அழுத்தமாக அக்காவின் குரல் வந்தது. இல்ல கொஞ்சம் உட்காரு, உன்கிட்ட இன்னொரு முக்கிய விஷயம் பேசனும்.
எனக்கு குழப்பம் வந்தது! இன்னும் என்ன சொல்லு?
பின் ஆழமாக என் கண்ணைப் பார்த்து கேட்டாள். நான் கால் பண்ணப்பவும், திரும்ப இங்க வீட்டுக்கு வந்தப்பவும் ஒரு மாதிரி நடந்துகிட்டியே, அது ஏன்?
சரியான பாயிண்ட்டை பிடித்து விட்டாள்!
இந்த முறை நான் தடுமாறினேன். அது ஒண்ணுமில்லை… ஏதோ பிசினஸ் டென்ஷன் அதான்…
பொய் சொல்லாத! உனக்கு அது வரலை.
ஏய் ஒண்ணுமில்லை… இன்னமும், என்னால் அவள் கண்களைப் பார்க்க முடியவில்லை.
உன்னால என் கண்ணையேப் பார்க்க முடியலை. ஏற்கனவே, உன் கம்பெனிக்கு நான் வந்திருந்தப்ப, நீ கொஞ்சம் உன்னை மீறி சொன்னது எனக்கு இன்னமும் ஞாபகத்துக்கு இருக்கு. நீ ஏதோ மறைக்கிற. என்னான்னு சொல்லு!
ஏய் மறைக்கல்லாம் இல்லை… எல்லாம் உனக்குத் தெரிஞ்ச விஷயம்தான். எனக்கு அதுல ஒரு குற்ற உணர்ச்சி. அதான்…
ஏய், எனக்கு சத்தியமா புரியலை. நீ எந்த விஷயத்தைச் சொல்ற நீ?
நான் இன்னமும் தடுமாறிக் கொண்டிருந்தேன்.
டேய், சொல்லு ப்ளீஸ். சத்தியமா சொல்றேன். எனக்கு நீ என்ன சொல்றேன்னே புரியலை. இன்னும் சொல்லப் போனா, ஏதாச்சும் பெரிய பிரச்சினையோன்னு பயமாக் கூட இருக்கு. ப்ளீஸ் சொல்லு!
நான் அமைதியாகவே இருந்தேன்!
ஹரீஸ் நீங்க, கொஞ்சம் நம்ம ரூம்ல இருங்க ப்ளீஸ்.
எழுந்த ஹரீசை, நான் குறுக்கிட்டேன். இல்லை வேணாம் மாமா. நீங்களும் இருங்க. அப்படி ஒண்ணும் ஒங்களுக்கு தெரியக் கூடாத விஷயமில்லை.
மெல்ல நான் சொல்ல ஆரம்பித்தேன். நான் சொல்லும் போதே தெரிந்துவிட்டது. அதில் பல விஷயங்கள், அக்காவிற்குத் தெரியவில்லை. அவளுக்கும் பலத்த அதிர்ச்சி. அது அவள் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரில் தெரிந்தது.