நானும் அவரை இறுக்கிக் கொண்டேன்! அப்படியேக் கொஞ்ச நேரம் இருந்தோம்!
பின் அவரே சொன்னார், மதனுக்குக்கு ஏதாச்சும் பண்ணனும்மா???
நான் விலகி அவரையே கொஞ்சம் கோபமாகப் பார்த்தேன்!
ஏம்மா, என்னாச்சு?
பதில் சொல்லாமல் இன்னும் முறைத்தேன்!
ஏய், என்னான்னு சொல்லு!
சரியான தத்திப்பா நீங்க! மதன் எங்கியும் போயிட மாட்டான், இங்கதான் இருப்பான்! இன்னிக்கு நம்ம கல்யாண நாள், ரொம்ப நாள் கழிச்சு பிரச்சினையெல்லாம் முடிஞ்சு சேந்திருக்கோம், நான் இவ்ளோ மேக்கப்போட, உங்களுக்காக காத்திட்டிருக்கேன். என்னை ஏதாச்சும் பண்ணனும்னு தோணலை, மதனுக்குக்கு பண்றாராமா?! போடா, போய் அவன் கூடவே பேசு, போ!
இப்போது அவன் கண்கள் விரிந்தது!
அவள் எதிர்பார்த்ததுதான்! ஆயிரம் சமாதானம் சொன்னாலும், நடந்த விஷயங்களின் தாக்கங்கள், அவனாக அவளை நெருங்குவதற்க்கு கூட ஒரு சின்ன தயக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்போது நான் பச்சைக் கொடி காட்டியதுமில்லாமாமல், சொன்ன படி, நாம் பழைய கணவன், மனைவிதான் என்று மறைமுகமாக தெரிவித்தது, என் மீதான, அவன் காதலை பன் மடங்கு அதிகப்படுத்தியது!
என்னை இழுத்து அணைத்துக் கொண்டான்! என் காதில் கிசுகிசுத்தான்!
குட்டிம்மா!
நான் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டேன்! எனக்கு என்னை இப்படி கூப்பிடுவது பிடிக்கும்!