இடை அழகி மேடம் சங்கீதா 6 67

அதுல எனக்கு அவளோ Interest இல்ல மேடம்.. கூடவே நம்பிக்கையும் இல்ல. தனியா வாழுற வாழ்க்கைல சந்தோஷம் அதிகமா இருக்கு. மனசுக்கு நினைச்சதை செஞ்சிக்க முடியுது. கூடவே யாரை வேணும்னாலும் சைட் அடிசிகுட்டே இருக்கலாம் இல்ல …( கண்களில் லேசான சோகம் தெரிந்தாலும் சாமர்த்தியமாக அவ்வப்போது ஜோக் அடித்து சிரிப்பில் மறைத்தால் சஞ்சனா..) come on… நான் உன் வயசை தாண்டினவ…… – சங்கீதா பேச “ஒரு நிமிஷம்” என்று சொல்லி இடையில் மறித்து வண்டியினுள் முன் பக்கத்துக்கும் பின் பக்கத்துக்கும் இடையே இருக்கும் தடுப்பு ஸ்க்ரீனை இழுத்தாள் சஞ்சனா… பொம்பளைங்க சமாசாரம் தாத்தா…. நீங்க வண்டியை மட்டும் ஓட்டுங்க சரியா?…. – லேசாக காதை நுழைக்கும் தாத்தாவிடம் கிண்டலாக நக்கலடித்து ஸ்க்ரீனை இழுத்தாள் சஞ்சனா. சொல்லுங்க சங்கீதா.. என்று சஞ்சனா சொல்ல “ஏண்டி பாவம் அந்த மனுஷனை இப்படி நக்கலடிக்குற..” என்று சொன்னதுக்கு “அதெல்லாம் அப்படிதான் நீங்க பேசுங்க…” என்றாள் சஞ்சனா.. Actually நான் உன் வயசை தண்டிணவ…. ஒரு ஆம்பளை துணை இல்லாம வாழுறது ரொம்ப கஷ்டம் டி.. நாம என்னதான் freedom னு நினைச்சாலும் தனியா வாழுரதுக்கும் இந்த சமுதாயம் நம்மள நிம்மதியா விடாது.. அதுவும் நீ வேற இங்கே தனியா parents இல்லாம வாழுற… உன் கூட யாரும் இல்ல.. அக்கம் பக்கம் யாரும் உன்னை தப்பா நினைக்க மாட்டாங்க?..( தன் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கும் சஞ்சனா மீது உண்மையாகவே கரிசனத்தோடு கேட்டாள் சங்கீதா.) ராகவ் இருக்கானே மேடம்.. புரியல… நான் IOFI வளாகத்துள இருக்குற guest house ல தான் இருந்துகுட்டு வரேன். மாச மாசம் சம்பளம் வந்ததும் ஊர்ல இருக்குற parents க்கு அனுப்பிடுவேன். கூடவே ராகவுக்கு secretory வேலைதானே. அதனால அதிகமா வேலை பளு இருக்காது. அப்போ ஊர்ல இருக்குற உன் parents உன் கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிக்கல? ஹ்ம்ம் கைல காசு வருதுன்னா அதை என் கெடுத்துக்குவாங்க?… சம்ப்ரதாயதுக்கு அப்போ அப்போ கேட்பாங்க “ரெண்டு மூணு வரன் வந்திருக்குடி அப்படின்னு” நான் வேணாம் னு ஒரு வார்த்தை சொன்னதும் சரிம்மா உன் இஷ்டம் னு சொல்லிட்டு நோகாம போன் வெச்சிடுவாங்க.. எனக்கும் இதை ஒவ்வொரு 6 மாசத்துக்கும் பேசி பேசி பழகிடுச்சி.. ஹ்ம்ம்.. – இரு கரங்களையும் இணைத்து தன் மடியில் வைத்து கரங்களை குனிந்து பார்த்து மெலிதாக சிரித்து பேசினாள். நீ யாரையும் காதலிக்கல? – சங்கீதா அவளின் கண்களை கூர்ந்து பார்த்து பதிலை எதிர்பார்த்தாள்.. நிமிர்ந்தவள் மீண்டும் லேசாக கீழே குனிந்து, ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பி தலை முடியை சரி செய்துகொண்டு, மீண்டும் சங்கீதாவின் முகத்தை பார்த்து மெதுவாக சிரித்து “இல்லையே.. யாரையும் காதலிக்கல..” என்று சொல்ல.. நிஜம்மா காதலிக்கல? – கிட்ட வந்து கண்களை உத்து பார்த்து சிரித்து மீண்டும் கேட்டாள் சங்கீதா.. இப்போது லேசாக மனதை திறக்க ஆரம்பித்தாள் சஞ்சனா…. காதலிச்சேன் மேடம்… யாரு? ராகவ்.. ( காத்து கலந்த குரலில் பாதி சத்தம்தான் வந்தது சஞ்சனா வாயிலிருந்து..) சரியா கேட்கல.. ராகவ்.. ( இப்போவும் தெளிவாக சொல்ல வில்லை இருப்பினும் முன்னமே சங்கீதாவுக்கு விஷயம் தெரியுமென்பதால் அதிகம் கேட்டுக் கொள்ளவில்லை.) ஏன் அவன் கிட்ட உன் காதலை சொல்லல? நான் என் காதலை சொல்லி, ஒரு காலத்துல ரெண்டுபேருமே காதலிச்சோம்… ஆனா விதி விளயாடிடுச்சி.. என்ன ஆச்சு? basically எனக்கு பொண்ணுங்கள விட பையனுங்க தான் அதிகம் friends, என் கிட்ட இருக்குற அந்த இயல்பு ராகவுக்கு அதிகம் பிடிக்காது. நானும் எல்லா பையனுங்க கிட்டயும் எல்லாத்தையும் பத்தி பேசுவேன்.

1 Comment

  1. கதை எதை நோக்கி போகுது என தெரியவில்லை

Comments are closed.