இடை அழகி மேடம் சங்கீதா 6 66

கடைசியில் இதெல்லம் தெரிந்திருந்தும் ராகவ் எப்படி சஞ்சனாவிடம் பெரிய மனதுடன் பழகி, அவளின் தந்தைக்கு உதவி செய்து மறு வாழ்க்கை அளித்தான் என்றும், பிறகு எப்படி சஞ்சனாவுக்கு பாதுகாப்பு குடுத்து வருகிறான் என்று அனைத்தையும் வெகு விரைவாக அதே சமயம் தெளிவாக ரம்யாவுக்கு எடுத்துரைத்தாள் சங்கீதா. அனைத்தையும் கேட்ட பிறகு, ரம்யாவுக்கு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. பிறகு மெல்ல பேச ஆரம்பித்தாள் “only one word madam” என்றாள். என்ன? – மென்மையாக சிரித்து, புருவங்களை உயர்த்தி தலையில் கை வைத்து சாய்ந்தவாறு ரம்யாவைப் பார்த்து கேட்டாள் சங்கீதா. Raghav… – என்று one word answer சொல்வதுபோல பேசினாள் ரம்யா..

ஹாஹாஹ், என்னடி ரகாவ்க்கு? – மீண்டும் மெலிதாக சிரித்தாள் சங்கீதா. he is chanceless madam.. very rare personality. உங்க கிட்ட இருக்குற ஒரு விஷயம் அவன் கிட்டயும் இருக்குறா மாதிரி தோணுது. ஹ்ம்ம் சொல்லு என்னன்னு கேட்ப்போம்? – சுவாரஸ்யமாக கேட்டாள் சங்கீதா.. வெளித்தோற்றதுல மட்டும் personality யான ஆள் னு சொல்ல முடியாது, மனசலவிலும் ஒரு கம்பீரம் இருக்கு. இதை ரம்யா சொல்லும்போது சங்கீதாவின் முகத்தினில் என்றும் தோன்றாத ஒரு வினோத சந்தோஷம் மலர்ந்தது.. அவள் சிரிக்கவில்லை ஆனால் புன்னகைத்தாள், கண்களும் ரம்யாவை பார்க்கவில்லை, வேறு என்கோதான் பார்த்தது. பொதுவாக தன்னை யாரேனும் ஒரு சின்ன வரியில் புகழ்தால் கூட மனது சத்தம் போடாமல் உள்ளுக்குள் சிறிதாக துள்ளிக்குதித்து ஆடும். அதே சமயம் நம் மனது மிகவும் மதிக்கும் ஒருவரை நம்முடனே ஒப்பிட்டு பாராட்டும்போது மணம் அனுபவிக்கும் அந்த ரகசிய ஆனந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆனால் அது நம் முகத்தினில் ஒரு பொலிவை உண்டாக்கும். அந்தப்பொளிவை ரம்யா சங்கீதாவின் முகத்தினில் கண்டாள். ஆனால் சங்கீதாவிடம் அதைப்பற்றி எதுவும் கூரிக்கொள்ளவில்லை, மேலே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். படையப்பா படத்துல வர்ற பாட்டுல ஒரு லைன் வரும் அதுதான் நியாபகம் வருது மேடம்.. ஹ்ம்ம்.. சொல்லு என்ன லைன்? “ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்..” ஹாஹாஹ்.. வாலு செம timing sense டி உனக்கு.. – இயற்கையாகவே முகத்தில் இருக்கும் பொலிவுடன் அவள் மென்மையாக சிரிக்கையில் அந்த சிரிப்பு அவளுடைய முகத்துக்கு இன்னும் அழகைக் கூட்டியது. அதை கவனிக்க தவறவில்லை ரம்யா.

இருவரும் இப்போது காலியான coffee கப்பை எடுத்துக்கொண்டு wash area பக்கம் நகர்கையில், சங்கீதா ஏதோ நினைவில் அவளது coffee கப்பை சாப்பாடு தட்டுகள் wash பண்ணும் இடத்திற்க்கு எடுத்து சென்றாள். இதை கவனித்த ரம்யா, “மேடம், எங்க போறீங்க? இங்க வாங்க…” என்று ஆச்சர்யமாக புருவத்தை உயர்த்தி சிரித்துக்கொண்டே கேட்க்கையில் சங்கீதாவுக்கு சற்று சந்கோஜமானது (embarassed).

இதை சமாளிக்க “ஒஹ்ஹ்.. sorry, சஞ்சனா பேசினதை யோசிச்சேனா அதான்… – என்று ரம்யாவை ப் பார்க்காமல் மெதுவாக தரையை ப் பார்த்து சிரித்துக்கொண்டு சரியான இடத்தில் coffee கப்பை வைத்து விட்டு எதுவும் பேசாமல் தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தாள் சங்கீதா. என்ன ஆச்சு, ஏன் இப்படி நான் phone மறந்து வெச்சிட்டு வந்தேன்? ஏன் இப்படி நான் coffee கப்பை வேற எங்கேயோ எடுத்துக்குட்டு போறேன்? என்று தன்னை த் தானே லேசாக கடித்துக்கொண்டாள். ரம்யா சில நிமிடங்களுக்குப் பிறகு சங்கீதாவின் இருக்கைக்கு வந்தாள். இந்தாங்க மேடம்.. என்னதுடி? ஒஹ் Femina வா, thanks டி, நானே இந்த மாசத்துக்கான edition வாங்கனும்னு இருந்தேன், but நீயே வாங்கிட்ட. தெரியும் நீங்க படிப்பீங்க னு, அதான் வர வழியில வாங்கினேன். பொறுமையா படிச்சிட்டு தாங்க மேடம். ஒன்னும் அவசரம் இல்ல. இந்த edition ல soch brand sarees collection superb மேடம்…. செம கலக்கலா இருக்கு, அதான் வாங்கினேன். நடு பக்கதுல இருக்குற சில models பார்க்குரதுக்கும் உங்களை மாதிரியே இருந்தாங்க, I mean முகதளவுல சொல்லல, இடுப்பளவுல… ஹாஹாஹ் – என்று தன் இடுப்பின் இரு ஓரங்களிலும் கைகளை அகலமாக சுத்தி காமித்து சங்கீதாவிடம் கிண்டலாக கூறினால் ரம்யா. ஏய்ய் வாலு, போதும் அடங்கு, இது bank, யாரவது பார்க்கபோறாங்க. சரி சரி பொறுமையா பார்த்துட்டு தாங்க. சரி டா.. புத்தகத்தை வாங்கி தன் மேஜையின் மீது வைத்து விட்டு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வேலையில் ஆழுந்து இருந்தாள். பிறகு சற்று relax செய்து கொள்ள ரம்யா குடுத்த Femina புத்தகத்தை எடுத்து புரட்டினாள். மேல் அட்டையில் “This is special edition for working women” என்று போட்டிருந்தது. “Interesting…” என்று மனதுக்குள் லேசாக முனுமுனுத்துக்கொண்டு பக்கங்களை புரட்ட ஆரம்பித்தாள். ஒரு பக்கத்தில் “All about Relationships, Dating & healthy sex life” – என்று ஒரு topic இருந்ததை ப் பார்த்து ஆவலுடன் படிக்க ஆரம்பித்தாள். அதில் பலர் தங்களது உருவுகள் பற்றிய கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். அதில் சில கேள்விகளை பார்த்தாள் சங்கீதா..அதில் இரண்டு கேள்விகள் அவளது மனதை லேசாக்கியது.

1 Comment

  1. கதை எதை நோக்கி போகுது என தெரியவில்லை

Comments are closed.