இடை அழகி மேடம் சங்கீதா 6 67

எனக்கு shocking அ இருந்துச்சி. நானும் ஒரு நிமிஷம் உத்து ப் பார்த்தேன், white space ல காந்தியோட hologram தெரியணும், ஆனால் தெரியல. சரின்னு சொல்லி மத்த எல்லா நோட்டும் ஒன்னு ஒண்ணா குடுக்க எல்லாமே fake னு சொன்னான். நல்ல வேலையா அன்னிக்கி அவங்க card accept பண்ணாங்க, இல்லேன்னா கொஞ்சம் அசிங்கமா இருந்திருக்கும். திரும்பி function hall உள்ள போய் உட்காரும்போது என் கணவர் கிட்ட கேட்டேன் “ஏங்க, எங்கே ஏமாந்தீங்க இப்படி செல்லாத ரூபா நோட்டை வாங்கி” னு. நான் கேட்டதுக்கு அவரும் ஒரு நிமிஷம் ஷாக் ஆகி எங்க கம்பெனி ATM ல எடுத்த cash தான் அது னு அவர் சொல்லும்போது எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சி. eventhough its possible but very rare. சரி மேடம், ஒரு கேள்வி, நிறைய fake notes public place ல புழக்கத்துல இருக்கும். அப்படி ஏதாவது சில notes சிலபேர் bank ல cash deposit பண்ணும்போது மிஸ் ஆகி atm machine ல போக வாய்ப்பு இருக்கலாமே? எப்படி confirmed அ IOFI உள்ள இருக்குற paper manufacturing unit ல இருந்துதான் அந்த fake notes atm ல போகுதுன்னு சொல்லுறீங்க? you are correct, but சந்தேகம் வர்றதுல தப்பில்லையே? மேடம் நான் ஒன்னு சொல்லுறேன்னு தப்பா நினைக்காதீங்க…. நினைக்க மாட்டேன் சொல்லுடி… ரகாவ்காக நீங்க கொஞ்சம் அதிகமாவே உதவுரா மாதிரி தெரியுது.

சங்கீதாவுக்கு இல்லை என்றும் சொல்ல முடியாமல், ஆமாம் என்றும் சொல்ல முடியாமல் வார்த்தைகள் கிடைக்காததால், ஒன்றும் பேசாமல் மெளனமாக குனிந்து coffee tumbler மட்டும் பார்த்துக்கொண்டிருந்தாள். ரம்யா தனது கைகளை சங்கீதாவின் கைகள் மீது வைத்து “என்ன ஆச்சு மேடம், ஏதாவது பேசுங்க..” என்றாள். “ஆங்…. ஒன்னும் இல்ல ரம்யா..” – ரம்யா இந்த கேள்வியை எழுப்பிய பிறகுதான் சங்கீதாவின் மணதில் ரகாவின் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது. உண்மையில் நாம் ஏன் இவ்வளவு தூரம் இறங்குறோம்… எதுக்காக risk எடுக்குறோம்?…. அவளுக்கே பதில் கிட்டவில்லை. நாம் என்னதான் பலருடன் பழகினாலும் யாரேனும் ஒருவர் நம்மையும் அறியாது நம் மனதை ஆட்கொள்வார், அப்படி நிகழ்கையில், அதனை நாம் ரசிப்போமே தவிர ஏன் எதற்கு என்று நமக்கு நாமே கேள்விகள் எழுப்பிக்கொள்ள மாட்டோம், காரணம் நம் மனது அப்படிப்பட்ட ஒரு குழந்தை. சங்கீதாவின் மனதில் ரகாவின் நினைவுகள் முந்தைய நாட்களை விடவும் இப்போது சற்று அதிகம் கவர்ந்திழுக்க ஆரம்பித்தது உண்மை. அந்த உணர்வுக்கு காரணம் காதல் என்று சங்கீதா எண்ணவில்லை. ஆனால் அவளைப்பொருத்த வரையில் ராகவ் அவளின் வாழ்க்கையில் இன்று ஒரு most special person. அதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் அதனை ரகசியமாக மனதிலேயே வைத்துக்கொள்ள விரும்பினாலே தவிர யாரிடமும் வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை, ராகவ் உட்பட. என்ன மேடம், யோசிச்சிகுட்டே இருக்கீங்க? ஏதாவது தப்பா சொல்லி இருந்தால் மன்னிச்சிடுங்க மேடம். sorry – என்று பாவமாய் பேசினாள் ரம்யா. ச்ச ச்ச.. அப்படி எல்லாம் ஒன்னும் சொல்லாதடி, நீ எனக்கு best friend என் கிட்ட எந்த formality words ம் உபயோகப்படுத்தாத. please – என்று request செய்தாள் சங்கீதா. ராகவக்காக இல்லாட்டியும் எனக்கே இதுல அப்படி என்னதான் இருக்குன்னு தெரிஞ்சிக்க ஒரு curiosity இருக்குடி அதான் கொஞ்சம் சுவாரஸ்யம் காமிக்குறேன். சரி சரி, but ஏதாவது problem னு வந்தா என்னை யாரோன்னு நினைச்சி ஒதுக்கிடாதீங்க. உங்க முயற்சியில நானும் ஏதாவது பங்கு எடுத்துகனும்னா மறைக்காம சொல்லுங்க சங்கீதா. – உரிமையுடன் கண்டிப்பான குரலில் கூறினாள் ரம்யா. கண்டிப்பாடி, உன்னை விட்டா எனக்கும் வேற யாரிருக்கா? சரி சரி, topic change…. என்னோட missed calls கூட பார்க்க முடியாத அளவுக்கு அப்படி என்ன பேசினீங்க சஞ்சனா கிட்ட? ஒன்னும் இல்லைடி, அவ அவளோட கதைய சொன்னா, எனக்கு கொஞ்சம் கேட்க கஷ்டமா இருந்துச்சி, ஆனாலும் அந்தப்பொண்ணு மேலயும் தப்பிருக்கு. என்ன சொல்லுறீங்க? சஞ்சனா ரகாவின் காதல் பற்றி, அவளின் பிறந்தநாளுக்கு ராகவ் அழைகாததுக்கு சஞ்சனா அவன் மீதுள்ள கோவத்தில் அனாவசியமாக விட்ட வார்த்தைகள் என்னென்ன!!, அதன் விளைவு எதில் சென்று முடிந்தது என்றும், mithun ராகவ் competition, மற்றும் mithun சந்தர்ப்பத்தை பயன் படுத்தி எப்படி ராகவ் சஞ்சனா காதலில் விளையாடினான் என்றும்.

1 Comment

  1. கதை எதை நோக்கி போகுது என தெரியவில்லை

Comments are closed.