யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 1 478

*ரவியோ, இன்னும் எழுந்திருக்கவே இல்லை கீழேயே இருந்து அவளின் கண்களை பார்த்தான் , அழகாய் இருந்த, “அதே கண்கள்”* இப்போது கொலைவெறியில் கொடுரமாய் இருந்தது.
* மெதுவாய் எழ முயச்சி செய்து எழுந்தான் ,
அவளோ, கதவை திறந்து கொண்டே ” இனிமே இந்த மாதிரி செஞ்சிடு இருந்த நான் கொலைகாரியா மாறிடுவேன்” என வெருப்பை உமிழ்ந்தாள்.
ரவி இன்னமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை , அனைத்து வலிகளையும், வேதனையையும் உள்ளுக்குள் அடக்கி கொண்டான்.
** தலை குனிந்து கொண்டே வெளியே சென்றான், அவன் அந்த அறை வாசலை தான்டியதும், அவள் கதவை வேகமாக சாத்தி தாழிட்டாள்.

அவனுக்கு கன்னத்தில் பயங்கர வலி, உடம்பு முழுக்க வியர்வையில் நனைந்திருந்தது. என்ன நினைத்தானோ தெரியவில்லை , கொள்ளை புரத்து கதவை திறந்து வெளியே சென்றான். நேராக கிணற்றுக்கு அருகில் அமர்ந்தான். வியர்வையில் நனைந்த உடம்பினால் , சில்லென்று காற்று வீசுவதினால் , உடம்பு குளிர தொடங்கியது.
*ஆனால், அவன் மனதோ “அவள் ” பேசிய வார்த்தையில் மிக வேதனையில் துடித்துக் கொண்டிருந்தது. திரும்பதிரும்ப அந்த வார்த்தை அவன் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது,* ” “உனக்கு என்ன உரிமை இருக்கு”
“உனக்கு என்ன உரிமை இருக்கு”
“உனக்கு என்ன உரிமை இருக்கு”
“உனக்கு என்ன உரிமை இருக்கு”
:
.
.
ஆம் அவள் மேல் ” எனக்கு என்ன உரிமை இருக்கிறது” என தனக்குள் முனுமுனுத்தான் …

கண்ணில் நீர் தாரை தாரையாய் வழிந்துக் கொண்டிருந்தது, விசும்பி விசும்பி அழத் தொடங்கினான். “உனக்கு என்ன உரிமை இருக்கு” என மீண்டும் அவள் சொன்னதையே நினைத்துக் கொண்டுருந்தான்.

*””” சாப்டியானு கேக்குறதும், தண்ணி எடுத்துட்டு வந்து கொடுக்குறதும், குளிர்ல போத்தி விடுரதும் “””* எல்லாம் நான் பாசத்திற்கு தானே செய்தேன். வேரேதும் தவறாய் செய்யலையே என அழுது கொண்டிருந்தான், கண்ணில் நீர் நின்றதாய் தெரியவில்லை .
“அந்த பாசம் இனிமேல் எனக்கு தேவை இல்லை என முடிவெடுத்து ”
*உடனே எழுந்தான் கிணற்றில் வாளியை போட்டு நீர் இறைத்து அப்படியே அவன் மேல் உளற்றினான். மனதில் இருந்த வேதனையில் குளிர் அவனுக்கு சுத்தமாக தெரியவில்லை.
* மூன்று வாளி நீரை ஊற்றி விட்டு, அப்படியே நீர் சொட்ட,சொட்ட வீட்டிற்குள் நுழைந்தான் . அவன் அறையில் கட்டிலுக்கு கிழே தரையில் படுத்தான். ரவி முகத்தில் ஏதோ ஒரு “மாற்றம்” தெரிந்தது . உடல் வலியினாலும். மன வலியினாலும் உடனே உறங்கினான்.

*காலையில் வழக்கம் போல் உடற்பயிற்சி செய்து, குளித்து விட்டு , சாப்பிட அமர்ந்தான். .. அம்மா சாப்பிட்டு வேலைக்கு புறப்பட்டதும்.
* தேன், அப்போதுதான் கவனித்தாள் , ரவி இரவு ஏதும் நடக்காதது போல் சகஜமாக அமர்ந்திருந்தான். ஆனால் அவன் கண்களில் இரவு அழுததும், கன்னத்தில் அவள் அறைந்ததால் 4 விரல்களும் பதிந்திருந்தன. அப்போதும் கூட , அவளுக்கு தன் தம்பியை அடித்ததில் எவ்வித குற்ற உணர்வும், பரிதாபமும் வரவில்லை.

ரவியோ, இரவு நடந்த சம்பவத்தினால் வாழ்க்கையே வெருத்திருந்தான். அமைதியாக புத்தகத்தை விரித்து வைத்து அமர்ந்திருந்தான்.
வீடே அமைதியாக இருந்தது, அமைதியை உடைக்கும் விதமாக தேனோ,
*”என்னடா இன்னைக்கு கிளாஸ்ல டெஸ்ட் எதாவது சொன்னாங்களா” என வினாவினாள்.
………………………….ரவியிடமிருந்து பதிலில்லை.
‘” டேய் கேக்குறேன் ல” என்றாள்,
…………………… மீண்டும் பதிலில்லை அவனிடம்…
:
.
இது அவளுக்கு புதிது “ஆம்” இதுவரை தான் கேள்வி கேட்டு ரவி பதிலளிக்காமல் இருந்ததில்லை.

இரவு நடந்த சம்பவத்தான் இவளிடம் நிகழ்ந்த ஒரே மாற்றம் ” தன் தம்பியை திட்ட தோன்றவில்லை தேனுக்கு,

5 Comments

  1. Superbbbb…kadhayoada meedhi eppo varum

  2. Super admin intha kathaivuda endding nalla irukkum.

  3. Aluga vaikra kaathai
    Posted in wrong site😂

  4. ஆரம்பம் சூப்பர்

Comments are closed.