ம் ”
சரி ”
இல்லை”
நான் போறேன்”
முடியாது”
என ஒரிரு வார்த்தையில் இருக்கும்
தன் தம்பி ரவி மேல் “கூட பிறந்தவன் “என்ற பாசம் முற்றிலும் இல்லாமல் இருந்தது.
அவனிடம் கோபபட்டு திட்டுவது கூட அவள் அப்பாவை திட்டுவது போல் உணர்வாள், மனதிற்குள் சந்தோஷபடுவாள்.
சின்ன வயசிலிருந்து தன் அப்பா மேல் அவ்வளவு கோவம் இன்று வரை இவளுக்கு.
பள்ளியிளோ அல்லது கல்லூரியிலோ யாரவது தன் அப்பா பற்றி கேட்டால் இவள் பதில் சொல்ல மாட்டாள். மிகுந்த வேதனையடைவாள், அன்று இரவு தனிமையில் அழுவாள் .
அந்த கோவத்தையும் மறுநாள் ரவியிடமே காண்பிப்பாள்.
மணி 7:55 ஆனதும் :
டேய் நான் கிளம்புறேன்டா காலேஜ்கு என சொல்லிவிட்டு பதிலை கூட எதிர்பார்க்காமல் சாவி கொக்கியில் போய் பார்த்தாள் வீட்டிற்க்கு உள்ள 3 சாவிகளில் அம்மா ஒன்று எடுத்து போக மீதி இரண்டு சாவிகள் இருந்தது அதில் ஒன்றை எடுத்துக் கொண்டு வாசல் வரை வந்தவள் திரும்பி ரவியை பார்த்ததாள் , அவன் இன்னும் சாப்பிட்டு கொண்டிருக்க,
இவள் கோபத்தில் இரைந்த படியே ” டேய் இன்னுமா சாப்பிட்டிருக்க , போய் படிடா 9:15க்கு வீட்டை பூட்டிட்டு 9:30க்கு கரைட்டா ப்ரேயர் அடர்ன் பன்னனும் ” என கத்தினாள்.
ரவியோ நடுங்கியபடி சரி கா என்றான்.
அவள் சென்று வீட்டிற்கு அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில் நின்று வாட்ச்சில் டைம் பார்த்தாள் ” மணி 8 ஆகுது இன்னும் காலேஜ் பஸ் வரலியே ” என எரிச்சலடைந்தால்.
காஞ்சிபுரம் ஏனாத்தூர் சாலையில் அமைந்துள்ளது அவள் கல்லூரி 8:30 மணிக்கு தொடங்கி, மதியம் 1.30 மணிக்கு முடிவடையும்.
Superbbbb…kadhayoada meedhi eppo varum
Super admin intha kathaivuda endding nalla irukkum.
Aluga vaikra kaathai
Posted in wrong site?
ஆரம்பம் சூப்பர்
Hi baby