யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 1 394

ரவி சிந்தனையிலிருந்து மீண்டு ” என்னம்மா சொன்னீங்க” என்றான்

அம்மா ” கைல வலி எப்படி இருக்குனு கேட்டேன்” என்றாள்

ரவி ” இப்ப பாரவால்ல மா” என தேன்மொழியை பார்த்த வாரே கூறினாள்

டாக்டர் வந்ததும் அம்மா டாக்டரிடம் ” என் பையனுக்கு ஒன்னும் இல்லல, பயப்படர மாதிரி எதும் இல்லல ” என பதரியவாறு கேட்டாள்.

டாக்டரோ வடிவுக்கரசியிடம் ” ஹி இஸ் ஆல்ரைட், நோ ப்ராபளம் . இப்பவே வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம். பட் வீக்லி டூ டைம்ஸ் செக்கப்புக்கு வரனும் . 4 வீக்ஸ்ல தைலல்ல பிரிச்சிடுலாம் ” என்றார் மற்றும் ரவியிடம் ” தையல் போட்ட இடத்துல அதிக ஸ்ரையின் கொடுக்க கூடாது பா* ” என்றார்

எல்லாம் முடிந்து வீட்டிற்க்கு வர இரவு 9 மணி ஆயிற்று.
அம்மா கடகடவென சமைத்து முடித்து ரவியையும் வற்ப்புருத்தி அழைத்து சாப்பிட அமர்ந்தார்கள்.

அம்மா தன் தட்டில் உள்ள சோற்றை சிறு உருண்டையாக எடுத்து ரவியின் வாய்யருகே கொண்டு சென்று ” ரவி ஆஆ காட்டு” என்றாள்.

ரவி ” மா…. எனக்கு ரைட் ஹான்ட்ல உள்ளங்கைல மட்டும் தான் அடிபட்டுருக்கு விரல்,லாம் அசைக்க முடிது நீங்க ஸ்பூன் கொடுங்க நானே சாப்டுகிறேன்” என்றான்

அம்மாவோ “….ம்… வாய தொறன்னு சென்னேன்ல ” என சிறிது கண்டிப்புடன் கூறினாள்

ரவி வாயை திறந்து அம்மா ஊட்டிய சாப்பாட்டை சாப்பிட்டான் பின்பு மாத்திரைகளை உண்டு , தூங்க சென்றான்

சமையலறையில்,,,

*தேன்மொழி,. அம்மாவிடம் “ஏம்மா உன் புள்ள மொகத்துல ஏதோ மாற்றம் தெரிதா?” என கேட்டாள்.
“ஏன் உன்ன காப்பாத்தும் போது நீ பாக்கலையா” என அம்மாவும் எதிர் கேள்வி கேட்டாள்.

“இல்லம்மா மூனு வாரமா அவன் என்கூட பேசல” என்றாள் தேன்மொழி “மெதுவாக ” .

அம்மா “என்னடி திடீர்னு தம்பி மேல பாசம் பொங்குற மாதிரி தெரிது , இவ்வளவு நாள் அவனை சனியன், நாயி,எரும என திட்டிய போது தெரியலையா” என்றாள் “நக்கலாக ”

“. ஏன் நான் மட்டும் தான் திட்டினேன்னா, நீ தான் தினமும் அவனை கரிச்சி கொட்டிட்டே இருப்பே” என தேன்மொழி பதிலலித்தாள்.

அம்மா தேனிடம், அவள் தலையை தடவி என்னடி ஆச்சி என்றாள் அன்பாக. தேனோ அன்று இரவு நடந்ததை கூறினாள். உடனே அம்மா அவள் தலையில் செல்லமாக கொட்டி ” அவனை எதுக்குடி அடிச்ச பாவம் என் மகன்” என்றாள் வருத்தத்துடன் .

தேன்மொழி “சாரிம்மா ஏதோ புத்தி கெட்டு அடிச்சிட்டேன்”

அம்மா “விடுடி அவன் கோவம் இரண்டு நாள்ல கொறைஞ்சிடும் நீ போய் தூங்கு” என்றாள்

இரவு 11:30 மணி

அம்மா நல்ல உறக்கத்தில் இருந்தார்கள்., ரவியும் கையில் உள்ள வலியால் இப்போது தான் தூங்க தொடங்கினான்.

அவளோ,..
** “அவசரபட்டு ரவியை அடித்து விட்டோமோ ” என சிந்தித்து கொண்டிருந்தாள்.
அவள் மூளையில் ஒரு மின்னல் வெட்டியது போல நினைவு வந்தது, அது அவனிடம் அப்போது அவள் பேசிய கடுஞ்சொற்கள்.

*”””யாருடா நீ ” “உனக்கு என்ன உரிமை இருக்கு” “”

*இதை நினைத்து பார்க்கவே தேன்மொழிக்கு மனது வலித்தது. அவள் கண்கள் குளமானது,
“அடித்து மட்டும் விட்டுருந்தால், அவன் கண்டிப்பாக பேசிருப்பான், ஆனால் அந்த வார்த்தைகள் , “ஆம்” அந்த வார்த்தைகள்,,,
*அழுதேவிட்டாள் அவள் ,,
*”உனக்கு என்ன உரிமை இருக்கு” இந்த வார்த்தையை நினைக்கும் போது, அய்யய்யோ இனிமேல் என்னிடம் பேச மாட்டியா” என கண்ணிர் விட்டு அழத்தொங்கினாள்.

5 Comments

  1. Superbbbb…kadhayoada meedhi eppo varum

  2. Super admin intha kathaivuda endding nalla irukkum.

  3. Aluga vaikra kaathai
    Posted in wrong site?

  4. ஆரம்பம் சூப்பர்

Comments are closed.