யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 1 394

ஒரு நாள் மாலை ரவி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். பேருந்து நிறுத்தத்தில் மக்கள் பரபரப்புடன் சத்தமாக கத்திக்கொண்டு கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். ரவிக்கு ஏதோ பிரச்சனை என தோன்றியது, மெதுவாக கூட்டதில் நுழைந்தான் .

அங்கே…

* இரண்டு பெண்களை அவர்களுடைய துப்பட்டாவாலேயே அந்த பெண்கள் முகத்தில் மூடி கழுத்தை இருக்கி பிடித்தால்போல் இரண்டு ரவுடிகள் இருந்தனர். ஒரு ரவுடியின் கையில் பாட்டிலில் அமிலமும் (acid) , மற்றொரு ரவுடியின் கையில் சிறிய கத்தி இருந்தது.
* இரண்டு பெண்களின் கழுத்தை இருக்கி பிடித்திருப்பதினால் கத்தகூட முடியவில்லை.

அமிலம் வைத்திருக்கும் ரவுடியோ ” ஏன்டி தெவிடியா முன்ட உனக்கு என்ன பிடிக்கலையாடி ….. எத்தன நாள் உன் பின்னாடி சுத்திருக்கேன் என்ன வேணாம்னு சொன்னேல்ல இப்ப பாருடி உன் மூன்சி என்ன ஆகுதுனு” என்றான்.

*மற்றொரு ரவுடியோ…” உன் ஃபெர்ன்டுக்கும் என் தம்பிக்கும் தான்டி பிரச்சனை நீ ஏண்டி நடுவுல வந்த இப்ப பாரு நீயும் சாகபோற ” என்றதும் அப்பெண் அமைதியாதான் இருந்தாள், யாரையோ பார்த்துக்கொண்டு..

* ரவிக்கு அப்பெண்களின் முகத்தில் துப்பட்டா முடியிருப்பதினால் யாரென்று தெரியவில்லை. கூட்டத்தில் உள்ள அனைவரும் அவர்களுக்குள்* “இவங்க தான்பா போன மாசம் “சிக்னல் ஜங்சன்ல ” நடு ரோட்ல பட்டபகல்ல ஒருத்தன வெட்னாங்க … எல்லாம் ஆலும் கட்சி சப்போட்ல தான் ” என* பரபரப்புடன் பேசி கொண்டிருந்தனர்.
..ஆம்..
அந்த கொலை வழக்கில் அன்று மாலையே சரண்டர் ஆகி உள்ளே சென்று சிறையிலிருந்து இரண்டு வாரம் முன்பு தான் ஜாமினில் வந்தார்கள் இவர்கள்.. எல்லா கட்சி சப்போட்டும் இவர்களுக்கு உண்டு .

சிலரோ காவல் நிலையத்திற்கு கைப்பேசியில் முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

பழைய ரவியாக இருந்திருந்தாள் இங்கு பக்கம் கூட வந்திருக்க மாட்டான் . ஆனால் இன்றோ ரவுடியின் முன் நிற்க்கிறான் .அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

*ரவுடியோ “இன்னைக்கு செத்தடி ” என்று அமிலத்தை அப்பெண் முகத்தில் ஊற்ற தயாரானான். இதை கேட்டவுடன் அப்பெண்னுக்கு மரண பயத்தில் கத்த முடியாமல் கை, கால்களை துடிக்க செய்தாள்.
*மற்றொரு பெண்ணோ அமைதியாக கூட்டத்தில் உள்ள ஒருவரை இன்னும் பார்த்துக்கொண்டேதான் இருந்தாள் மரணபயமில்லாமல்…

ரவுடியோ “இன்னைக்கு செத்தடி ” என்று அமிலத்தை அப்பெண் முகத்தில் ஊற்ற தயாரானான். இதை கேட்டவுடன் அப்பெண்னுக்கு மரண பயத்தில் கத்த முடியாமல் கை, கால்களை துடிக்க செய்தாள்.
*மற்றொரு பெண்ணோ அமைதியாக கூட்டத்தில் உள்ள ஒருவரை இன்னும் பார்த்துக்கொண்டேதான் இருந்தாள் மரணபயமில்லாமல்…

ரவிக்கோ,. பதற்றம் அதிகமாகி கொண்டே போனது அந்த சம்பவத்தின் போது அவன் மட்டுமே அருகில் இருப்பது போல் உணர்ந்தான், “என்ன செய்யலாம் என்ன செய்யலாம் என மூளை வேகமாக சிந்திக்க தொடங்கியது .

கூட்டத்தில் ஒருவர் , மற்றொரு நபரிடம் ” போலிஸ்க்கு போன் பண்ணிட்டேன் , 5 நிமிசம் இவங்கள அந்த ரவுடிங்க எதுவும் பண்ணாம இருந்தா , போலீஸ் வந்து இவங்கள காப்பாத்திடும் ” என கூறிக் கொண்டுருந்தார்.

ரவிக்கு ஒரு யோசனை வந்தது 5 நிமிடம் இவர்களை திசை திருப்பினால், அதற்குள் போலீஸ் வந்துவிடும் , இந்த பெண்களும் காப்பாற்றபடுவார்கள் என எண்ணினான்.

“”………அண்ணா… அண்ணா…. ப்ளீஸ்… கொஞ்சம்.. நிறுத்துங்க… ப்ளீஸ்… வெயிட்… ப்ளீஸ்..ணா… ” என ரவுடிகளை நோக்கி கத்திக் கொண்டே மூன்று அடி முன் முன்னோக்கி நடந்தான்..

ரவுடிகள் யாருடா இவன் என யோசித்துக் கொண்டே , அமிலம் வைத்திருக்கும் ரவுடி ” டேய்… ஒருங்கா.. போய்டு.. இல்ல.. நீயும். பொனமாய்டுவே..” என அதட்டீனான்.
ரவி ஒரு நொடி பயந்து பின்பு தைரியத்தை வர வைத்துக்கொண்டு அந்த ரவுடியிடம்
” அண்ணா என்னண்ணா காதல ஏதுக்கலனு போய் கொலையா பாவம்ணா அவங்க, விட்டுடுங்கணா ப்ளீஸ். ” என கூறினான்.

5 Comments

  1. Superbbbb…kadhayoada meedhi eppo varum

  2. Super admin intha kathaivuda endding nalla irukkum.

  3. Aluga vaikra kaathai
    Posted in wrong site?

  4. ஆரம்பம் சூப்பர்

Comments are closed.