யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 1 394

அம்மா வடிவுக்கரசிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்மாவோ , உள்மனதில் அவனை வெருக்க சில காரணங்கள் இருந்தாலும் தன் பிள்ளைக்கு என்ன ஆனதோ என அலரியடித்துக்கொண்டு வந்து சேர்ந்தாள். அதற்குள் ரவிக்கு இடது கையில் 6 தையல்களும், வலது கையிலும் மருந்து இட்டு கட்டு போடப்பட்டது..

மணி மாலை 6:55

மருத்துவமனையில் ரவி கட்டிலில் மயக்க நிலையில் படுத்து கொண்டிருந்தான். தேன்மொழியோ அம்மாவிற்க்கு நடந்ததை விளக்கி கூறிக்கொண்டிருந்தாள்.

அவள் தோழியோ “இன்னைக்கு நடந்ததை என்னாள் மறக்கவே முடியாதுடி , உன் தம்பி மட்டும் இல்லனா நாம இரண்டு பேரும் எப்பையோ அங்க செத்துருப்போம் . அவன் முழிச்சா நான் ரொம்ப தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லுடி.. டைம் ஆச்சி அம்மா தேடுவாங்க* கிளம்புறேன்டி … என கூறிவிட்டு* சென்றாள்.

ரவி மெதுவாக கண் விழித்தான்..

வெளியே அமர்ந்திருக்கும் அம்மா மற்றும் அக்காவிடம் அங்கே உள்ள நர்ஸ்லேடி “பேஷன்ட் முழிச்சிட்டாங்க யாராவது ஒருத்தர் போய் பாருங்க” என்றதும் அம்மா எழுந்தாள் அதற்குள் அக்கா தேன்மொழி அம்மாவை முந்திக்கொண்டு உள்ளே சென்றாள்..

வெளியே அமர்ந்திருக்கும் அம்மா மற்றும் அக்காவிடம் அங்கே உள்ள நர்ஸ்லேடி “பேஷன்ட் முழிச்சிட்டாங்க யாராவது ஒருத்தர் போய் பாருங்க” என்றதும் அம்மா எழுந்தாள் அதற்குள் அக்கா தேன்மொழி அம்மாவை முந்திக்கொண்டு உள்ளே சென்றாள்..

தேன்மொழி உள்ளே சென்றதும், ரவி அமைதியாக கண் விழித்தவாரே* இரண்டு உள்ளங்கையிலிலும் வலியுடன் படுத்திருந்தான். இவளை கண்டதும் தன் அக்காவிற்க்கு எதுவும் ஆகவில்லை, அவள் நன்றாக இருக்கிறாள், நான் காப்பாற்றி விட்டேன் என்ற பூரிப்ப்பால் அவன் முகம் முழுவதும் மகிழ்ச்சி மற்றும் உதட்டில் சிறு புன்னகையும் உண்டானது.

மூன்று வினாடிதான் இருந்திருக்கும் ரவிக்கு அந்த இரவு நடந்தது நியாபகம் வந்தது, உடனே அவன் நெற்றியை சுருக்கினான், புன்னகை மறைந்தது, முகத்தில் கோவரேகைகள் தென்பட்டது. தன் கண்கள் மற்றும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொன்டான்.

*இவைகளை தேன்மொழி பார்த்ததும் அவனுக்கு தன் மேல் உள்ள கோவத்தை குறைக்கனும் என சிந்தித்தாள்.

*”சார் இன்னும் கோவத்தில்தான் இருக்கீங்க போல ” என கூறினாள்.

ரவி அமைதியாகவே இருந்தான்

தேன்மொழி ” டேய் அன்னைக்கு உன்ன அடிச்சது தப்புதான் ” என சலித்து கொண்டே சொன்னாள்.

ரவியோ அவளை ஒரு வினாடி பார்த்து பின் மீண்டும் தலையை திருப்பி கொண்டான்.

தேன்மொழி பொய் கோபத்துடன் ” என்னதான்டா பன்ன சொல்ர” என்றாள்

ரவி அவள் பின்னால் அம்மா வருவதை பார்த்து கொண்டிருந்தான்.

அம்மா வந்து அவன் அருகில் கட்டிலில் அமர்ந்து அவனிடம் ” ரவி… கை வலி எப்படி பா இருக்கு” என்றாள்

ரவியோ இதுவரை அம்மா தன்னை “பா” போட்டு கூப்பிட்டது கிடையாது … ஒரு வேளை தன் ஆசை மகளை காப்பாற்றியதன் விளைவாக இருக்குமோ என சிந்தித்து கொண்டே இருந்தான்.

அம்மா மீண்டும் அவன் கால்களை ஆட்டியவாரே* ” ரவி.. என்னப்பா யோசனை ” என்றாள்

5 Comments

  1. Superbbbb…kadhayoada meedhi eppo varum

  2. Super admin intha kathaivuda endding nalla irukkum.

  3. Aluga vaikra kaathai
    Posted in wrong site?

  4. ஆரம்பம் சூப்பர்

Comments are closed.