யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 1 394

ரவி உடம்பில் முறுக்குடன் முன்னே சென்றான், ரவுடியோ தேன்மொழியின் பிடியை விடுவித்துவிட்டு* கையில் கத்தியை கொண்டு ரவியின் நெஞ்சை குறி வைத்து ஓங்கினான், ரவியோ லாவகமாக குனிந்து அவன் குறியிலிருந்து தப்பித்து, தொடர்ந்து முன்னேறி அந்த ரவுடியை கடந்து சென்று பின்னால் உள்ள மற்றொரு ரவுடியை யாரும் எதிர்பாரா சமயத்தில் அவன் கையில் உள்ள அமிலத்தை அசையாமல் பிடித்துக்கொண்டு தன் சக்தியை திரட்டி கூர்மையான கல்லால் அவன் இடது கண் அருகே அடித்தான் ரவி..

அவ்வளவுதான் அந்த ரவுடி கண்ணில் வெட்டுபட்டு கிழே விழுந்தான் , தேன்மொழியின் தோழிக்கு இப்போது தான் உயிரே வந்தது. அவள் ஓடி சென்று தேன்மொழியை கட்டிக்கொண்டாள், இப்போது ரவி கையில் அமிலம் இருந்தது, அதை தூரமாக வீசிவிட்டு, திரும்புவதற்க்குள் மற்றொரு ரவுடியோ, ரவியின் முதுகிற்கு பின்னால் கத்தியை வைத்து குத்த ஓங்கினான்,அவன் முகத்தில் எல்லா முயற்சியும் தோல்வியின் பிரதிபளிப்பு இருந்தது.

அங்கே,,அப்போது …

தேன்மொழி, “ரவி………….. பின்னாடி பாருடா…..” என கத்திக்கொண்டே , அந்த ரவுடியை தடுப்பதற்கு ஓடினாள் . அதற்குள் ரவி திரும்பி நின்றிருந்தான் , முதுகு நோக்கி ஓங்கிய கத்தி இப்போது ரவியின் வயிற்றை நோக்கி வந்து கொண்டிருந்தது…..

திக் திக் திக்….. அங்கே உள்ள அனைவருடைய மனதும்..

நொடியில் நான்கில் ஒரு பங்கு நேரத்தில் அந்த கத்தியை தன் இடது கையால் பிடித்தான் , அவன் வயிற்றுக்கு ஒரு சில சென்டிமீட்டர் தொலைவே பிடித்து நிறுத்தினான். கத்தியை ரவி பிடித்த பகுதியோ கூர்மையான பகுதி.,* இன்னும் ரவுடியோ கத்திக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தான், மேலும் இன்னொரு கையையும் சேர்த்து அழுத்த துடங்கினான், கத்தி ரவியின் பிடியை மீறி அவன் வயிற்றுக்கு அருகில் நகர்ந்து சென்றது.

ரவியின் இடது கையில் இருந்து இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்தது. தேன்மொழியோ அந்த ரவுடியை தன் கையால் அடித்து கொண்டிருந்தாள் . மக்களோ அச்சத்தில் யாரும் அருகில் வரவில்லை.

தினமும் காலை தான் செய்த உடற்பயிற்சினால் தன் முழு பலத்தையும் கையில் வரவைத்துக் கொண்டு கத்தியை வளைக்க தொடங்கினான் , கத்தியோ” பட் ” என்ற ஓசையுடன் உடைந்தது .. ரவுடி கத்தி உடைந்ததை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருக்கும் போதே அவன் தலையில் பின் மன்டையில், ரவி தன் வலது கையில் உள்ள கல்லால் அடித்தான். மூளை குழம்பி நினைவிழந்து சரிய தொடங்கினான்.

ரவிக்கு , அவன் சரிய சரிய பின்னால் நின்ற தன் அக்கா முகம் தெரிய தொடங்கியது. ரவி முகத்தில் தன் அக்காவை காப்பாற்றிய நிம்மதி இருந்தது. அவன் இடது உள்ளங்கையில் மிகவும் ஆழமாக வெட்டுபட்டிருந்தன, இரத்தம் நிற்க்காமல் வழிந்து கொண்டிருப்பதன் விளைவாக மெதுவாக ரவியின் கண்கள் சொக்கிபோய் , மயக்கம் அடைய தொடங்கினான் . அதற்க்குள் தேன்மொழி அவனை பிடித்து தன் மடியில் கிழே அமர்த்திக்கொண்டாள்.

தேன்மொழி* மயக்கமடைந்த ரவியை கண்ணீர் வடிந்த கண்களுடன் அவனது கன்னத்தை தட்டியவாரே “டேய் ரவி டேய் ரவி ” என பிணாத்தி கொண்டிருந்தாள்” திடீரென சூழ்நிலையை புரிந்து
*”யாராவது ஆம்புலன்ஸ கூப்பிடுங்களேன்” என்று கத்தினாள்….

அவள் தோழியோ ” தேனு அழுவாம ,மொதல்ல அவன் கையில வழியிர ரத்தத்த நிறுத்தனும்டி அவனுக்கு ஒன்னும் ஆகாது ” என்றதும்,,*** தேன்மொழி உடனே அருகில் கிழே கிடந்த தன் துப்பட்டாவை அமர்ந்திருந்தவாரே எட்டி எடுத்து அவன் ரத்தம் வழிந்துகொண்டிருக்கும் இடது உள்ளங்கையில் சுற்றினாள் . அப்போதுதான் கவனித்தாள் ரவியின் வலது உள்ளங்கையிலும் அதிக சிராய்ப்புடன் சதைதோல்கள் கிழிக்கப்பட்டுருந்தது.

கூர்மையான கல்லை இருக்கிபிடித்து அந்த ரவுடிகளை அடித்ததன் பாதிப்பே அது..

அதற்குள் ஒரு ஆட்டோவை அவள் தோழி மறித்து நிருத்தினாள் . மயக்கமடைந்த ரவியை ஆட்டோ ஓட்டுனரும், தேன்மொழியும், அவள் தோழியும் முயன்று ஆட்டோவில் ஏற்றி புறப்படும் போது, தேன்மொழியோ, அங்கே உள்ள ஆபத்தில் உதவாத மக்களை ” எச்சி” போல் பார்த்து கொண்டிருந்தாள்.. பின்பு ரவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

5 Comments

  1. Superbbbb…kadhayoada meedhi eppo varum

  2. Super admin intha kathaivuda endding nalla irukkum.

  3. Aluga vaikra kaathai
    Posted in wrong site?

  4. ஆரம்பம் சூப்பர்

Comments are closed.