யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 1 394

மீண்டும் அதே ரவுடி ” டேய் இப்பவும் சொல்றேன் ஓடிரு,* உயிர விட்ராதே” என மிரட்டினான்.

அத்தனை கூட்டத்தில் யாரும் காப்பாற்ற வராத போது, ரவியின் செயல்களை அந்த பயமற்ற பெண்ணோ ஆச்சிரியமாகவும், அதிர்ச்சியாகவும் பார்த்து கொண்டுருந்தாள். இப்போது தான் அப்பெண்ணுக்கு பயம் வந்தது. தன் உயிருக்காக அல்ல…

ரவிக்கோ 5 நிமிடத்தில் இன்னும் 4 நிமிடம் அந்த ரவுடிகளின் கவனத்தை சிதரடித்தால் போதும் என பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.
” அண்ணா …. மொதல்ல அவங்களுக்கு உங்க காதல மென்மையா வெளிபடுத்தனும்…..* நீங்க அவங்க அன்பையும் பாசத்தையும் பெற முயற்சி செய்யனும்……*** அவங்களுக்காக நீங்க எதையும் செய்வீங்கனு அவங்கள நினைக்க வைக்கனும்…** இதல்லாம் பன்னாம டேரைக்ட்டா வந்து என்ன லல் பன்னுனா யாரும் உங்கள லவ் பன்ன மாட்டாங்க” ” என்றான் ரவி….
*

இந்த வசனம் எல்லாம் சென்ற வாரம் முதன்முதலாக பள்ளியை கட் அடித்து விட்டு புதிதாக சேர்ந்த நண்பர்களுடன் காஞ்சிபுரம் பாபு தியேட்டரில் பார்த்த படத்தில் வந்த வசனங்கள் தான் இவை…

முதல் பெண்ணோ உயிர் பயத்தில் அரைமயக்கமாக இருந்தாள், மற்றொரு பெண் ரவி பேசிய பேச்சுகளை பிரம்மீப்புடன் பார்த்து கொண்டிருந்தாள்.
கத்தி வைத்திருக்கும் ரவுடிக்கு இவன் பேசிய வார்த்தையை கண்டு கோபத்தில் “டேய் வாயால பேசுனா நீ கேக்க மாட்ட டா” என அப்பெண்னையும் சேர்த்து இவன் அருகில் இழுத்துட்டு வந்து, கத்தியை ரவி கழுத்துக்கு இடமிருந்து வலமாக இழுத்தான். நல்ல வேளை கத்தி ரவி கழுத்தில் படவில்லை. இன்னும் கத்தி ரவுடியிடமே இருந்தது.

ரவி மிகவும் பயந்தவாறே ஒரு அடி பின் வைத்தான். தன் இலக்கு தவறியதால் இன்னும் கோவத்தில் “இன்னைக்கு செத்தட நாயே” என தன் வலது காலால் அவன் வயிற்றை பலம் கொண்டு எட்டி உதைத்தான் .. ரவியோ “அம்மா” என கத்தி கொண்டே* வலியால் வயிற்றை பிடித்துக்கொண்டே கீழே விழுந்தான்.

* அந்த ரவுடியின் பிடியில் இருந்த பெண்ணோ “ரவி…………………” என அலரினாள்.

ரவுடியின் பிடி சற்று தளர்ந்ததாள் அப்பெண், கையால் சிரமபட்டு முகத்தை மூடியிருக்கும் துப்பட்டாவை மேலே தூக்கினாள். அந்த முகம்…… அது ரவியின் அக்காவே தான்… ஆம் தேன்மொழியேதான் அது… கண்களில் நீர்வழிய நின்றுருந்தாள்.

சுற்றி உள்ள மக்கள் கூட்டமோ “ஏதோ நடக்க போகுதுனு” சலசலப்புடன் நின்றுகொண்டிருந்தனர். ரவி கண்களை மூடி வலியால் துடித்து கொண்டிருந்தான் . பின்பு சுயநினைவுக்கு வந்தவன் ,மங்களான பார்வையில் தன்னை பெயர் சொல்லி அழைத்தது யார் என வலியுடன் சுற்றி பார்த்து கொண்டிருந்தான்.

அப்போது ,,, அங்கே அப்பெண் முகத்தை பார்த்தான் ரவி.. அவனால் நம்ப முடியியவில்லை.. மங்களான பார்வையிலிருந்து மீண்டும் தன் கண்களை விரித்தவாரே பார்த்தான்,

அதிர்ச்சிதான் அவனுக்கு…..

“மூன்று வாரமுன்புவரை தான் நேசித்த தன் உடன்பிறந்த அக்கா , இப்போது கயவர்களின் பிடியில் மாட்டி துன்பபட்டு, மடிய போகிறாள் என்ற நினைப்பே ” அவனை ஏதோ செய்தது .

“தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் ”
*என்பதை போல
*
உள்ளுக்குள் அவளை எப்படியாவது “ஏன்” தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்று அவன் மூளையின் அனுமதியில்லாம் “மனது ” முடிவெடுத்தது….

ரவியின் அந்த வெறி அவன் உடலெங்கும் பரவியது, எழுந்து கால்களை நீட்டியவாரே அமர்ந்திருந்தான். கையில் உள்ளங்கையின் அளவுடைய பெரிய “கருங்கல்” சிக்கியது, அதன் கூர்மையான பகுதி வெளியே இருக்குமாரு இருக்கமாக பிடித்திருந்தான். உடம்பில் புதிய இரத்தம் பாய எழுந்து நின்றான். தேன்மொழியோ மிரட்ச்சியுடன் ரவியை பார்த்து கொண்டிருந்தாள்.

5 Comments

  1. Superbbbb…kadhayoada meedhi eppo varum

  2. Super admin intha kathaivuda endding nalla irukkum.

  3. Aluga vaikra kaathai
    Posted in wrong site?

  4. ஆரம்பம் சூப்பர்

Comments are closed.