யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 1 394

இதையல்லாம் கவனித்து கேட்டுக் கொண்டிருந்த ரவிக்கு தன் கண்யே நம்ப முடியவில்லை , பிள்ளைக்கு உடம்பு சரியில்லையென்றால் அம்மா, சித்தி, அக்கா என குடும்பமே அவனை தாங்குவது, பாசத்தை பொழிவது இவனுக்கு ஆச்சிரியமாகவும், அவன் மீது ஒரு வித பொறாமையும் உண்டாக்கியது.
ரவி கிளாஸிற்கு வந்ததும் அதே சிந்தனையுடன் இருந்தான், இதுவரை நேரில் பாத்திராத இந்த பாசத்தை பார்த்தவுடன் , நமக்கும் தான் அம்மா ,அக்கா இருக்காங்க ஆனா இப்படி பாசமாக இல்லையே.
ஒரு வேளை என் மீது எதாவது தவறோ குறையோ இருக்குமா என சிந்திக்க தொடங்கினான். எப்படியாவது அம்மாவின் அன்பையும், அக்காவின் பாசத்தையும், பெறவேண்டும் என ஆழ்ந்த சிந்தனையில் முழுகினான்.

ரவி….டேய் ரவி.. டேய்….ரவி..டேய்..
என மேக்ஸ் டீச்சர் கூப்பிட்டதும் தான் சிந்தனையில் இருந்து நிகழ்காலத்துக்கு வந்தான் ரவி.
“ரவி என்னடா ஆச்சி உனக்கு நி இப்படி கிளாஸ கவனிக்காம இருந்ததில்லையே என வினாவினாள்.

ரவியோ” சாரி மிஸ் ” என்றான் பதற்றத்துடன்.

பள்ளி முடிந்து விட்டிற்க்கு செல்லும் வழியில் அக்கா மற்றும் அம்மாவை எப்படி மாற்ற வேண்டும் என்று சிந்தித்து கொண்டே இருந்தான். முதலில் அக்காவை மாற்ற முயற்சி செய்ய வேண்டும் என தீர்மானம் செய்தான்….

” அவனுக்கு தெரியாது முதலில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டுமென ”

கதையே இனிமேதான் ஆரம்பம்…

பள்ளி முடிந்து விட்டிற்க்கு செல்லும் வழியில் அக்கா மற்றும் அம்மாவை எப்படி மாற்ற வேண்டும் என்று சிந்தித்து கொண்டே இருந்தான். முதலில் அக்காவை மாற்ற முயற்சி செய்ய வேண்டும் என தீர்மானம் செய்தான்….

” அவனுக்கு தெரியாது முதலில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டுமென ”

கதையே இனிமேதான் ஆரம்பம்…

.
.
.
* மணி மாலை 4:45

வீட்டிற்கு வந்ததும் கதவு திறந்திருந்தது அக்கா தரையில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தாள்.
அவள் கல்லூரி 1:30 மணிக்கு முடிந்ததும் 2 அல்லது 2:15 மணிக்கு வீட்டுக்கு வந்துடுவாள்.

ரவி தன் அக்காவை பார்த்ததும் தன் திட்டத்தை நிறைவேற்ற என்னினான் .

உள்ளுக்குல் உதறல் இருந்தாலும், அவளை பார்த்து,

*”அக்கா வந்து ரொம்ப நேரம் ஆச்சா கா, மதியம் சாப்டியா” என கேட்டு மெல்லியதாக புன்னகை செய்தான்.

அப்படி கேட்டதும் ரவிக்கே தான் பேசியதை நினைத்து ஆச்சிரியமாக இருந்தது, ஆம் இத்தனை வருடத்தில் நினைவு தெரிந்த நாள் முதல் “இவனாய் ” அக்கா விடம் பேசியது இல்லை , அவள் கேள்வி கேட்டு கோபடுவாள் இவன் பதில் மட்டும் தெரிவிப்பான்..

ஆனால் இன்றோ நடந்ததோ வேறு, ரவி அப்படி பேசியதும் அக்கா தேனு அவனை ஒரு 10 நொடி வரை முறைத்து கொண்டே இருந்தால்.
ரவிக்கோ மனதில் ஒரு வித பயம் தொற்றிக் கொண்டது, அதை வெளிகாட்டாமல் தன் அறைக்கு சென்று கதவை சாத்திக் கொண்டான்.

5 Comments

  1. Superbbbb…kadhayoada meedhi eppo varum

  2. Super admin intha kathaivuda endding nalla irukkum.

  3. Aluga vaikra kaathai
    Posted in wrong site?

  4. ஆரம்பம் சூப்பர்

Comments are closed.