யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 1 394

*
*மீண்டும் அவள் கொஞ்சம் உரக்கமாக “டேய்”…. என்றாள்,
” மெதுவாக தன் கண்களை புத்தகத்திலுந்து எடுத்து அவளை ஒரிரு நொடிகள் பார்த்தான் .ரவியின் அந்த பார்வையின் அர்த்தம்,
*” என்னை விட்டுடு , உன்னை பார்க்க பிடிக்கவில்லை”
*என்பது போல் இருந்தது.
ரவி , உடனே தன் அறைக்கு சென்று கதவை தாழிட்டான். இவள் அந்த சாத்திய கதவையே பார்த்திருந்தாள். இப்போது தான் அவள் மனது எதோ செய்ய ஆரம்பித்தது, அவளுக்கு இது என்ன என தெரியவில்லை.
*கல்லுரிக்கு நேரம் ஆவதால் அவளும் கிளம்பினாள்.

*ரவி கதவை திறந்து வெளியே வந்தான், “நடை, உடை, பார்வை, பேச்சு, சிந்தனை” இவையனைத்திலும் “””மாற்றத்துடன்””” பள்ளிக்கு செல்ல தயாரானான். .

ரவி கதவை திறந்து வெளியே வந்தான், “நடை, உடை, பார்வை, பேச்சு, சிந்தனை” இவையனைத்திலும் “””மாற்றத்துடன்””” பள்ளிக்கு செல்ல தயாரானான். . . .

மணி 9:15 ஆனதும் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு நடந்தான், போகும் வழியில் அக்கா தேன்மொழி ஏறும் பஸ் ஸ்டாப்பை கடக்கும் போது “தன் கன்னத்தை தடவியபடி “ராச்சசி “” என அக்காவை நினைத்து முனுமுனுத்தான்.
* பள்ளியில் அவன் வகுப்பில் அனைவரும் ரவியை ஆச்சிரியத்துடன் பார்த்தனர், இதுவரை தலையில் அதிக எண்னெய் தேய்த்து, முடியை வகுடெடுத்து வாரி, சட்டையில் உள்ள அனைத்து பட்டன்களையும் போட்டு, நெற்றியில் பெரிதாக குங்கும பொட்டு வைத்திருந்த அவன்.,,
*இன்றோ,,

தலையில் எண்ணெய் பட்டும் படாமல் தேய்த்து, அழகாக தலை சீவியிருந்தான். சட்டையில் கழுத்துக்கு கீழே உள்ள பட்டனை கழட்டிவிட்டு, இரண்டு கை பகுதியில் இரண்டு மடிப்பு மடித்துவிட்டிருந்தான், நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக சிறிய அளவில் திருநீர் வைத்திருந்தான்.

** அருகில் அமரும் சக மாணவர்கள் இவனை பார்த்து “ரவி இன்னைக்கு தான்டா அழகா இருக்க ” என கூறிக் கொண்டிருந்தார்கள்.
*எப்போதும் போல ,ரவி முதல் வரிசையில், முதல் ஆளாக அமர்ந்து இருக்க, அனைத்து ஆசிரியர்களும் இவனை வித்தியாசமாக பார்த்து கொண்டே பாடம் நடத்திவிட்டு சென்றார்கள்.

*மாலையில் தேன்மொழி நாற்காலியில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். ரவி உள்ளே வந்து கொண்டிருப்பதை இவள் பிரம்மிப்புடன் “என்னடா இவன் ஒரே நாளில் இப்படி மாறிட்டானே” என பார்த்தாள்.
… ஆம் ,,,
*அம்மாவுடைய கல்யான ஆல்பத்தில், அவள் பார்த்த அப்பாவின் “அம்மாஞ்சி ” தோற்றத்தில் தான் இவ்வளவு நாளும் இருந்தான் ரவி,. ஆனால் இன்று அவன் தோற்றமே மாறியிருந்தது.

இப்போது அவளின் கண்களுக்கு தன் அப்பாவும், ரவியும் வேறு வேறு போல் உணர தொடங்க ஆரம்பித்தாள்..

ரவியோ இவள் அமர்ந்திருப்பதை கொஞ்சம்கூட கண்டு கொள்ளாமல், சினிமா பாட்டை ஹம்மிங் செய்து கொண்டே, நெஞ்சை நிமிர்த்தி அழகாக, கம்பீரமாக நடந்து அவன் அறைக்கு சென்றான்.
*இன்னும் நாற்காலிலியில்தான் அர்மந்திருந்தால் பிரம்மிப்புடன்.

அம்மா வடிவுக்கரசி, செருப்பை வாசலில் கழட்டிவிட்டு உள்ளே நுளைந்தாள், தேனை பார்த்து விட்டு ரவி இல்லாததால், ” ரவி எங்கடி ” என கேட்டாள். அதற்கு அவளோ கண்களாளேயே “உள்ளே என ” சாத்தியிருந்த கதவை காண்பித்தாள். கதவு அருகில் சென்று வேகமாக தட்டிவிட்டு “டேய் என்னடா இது பழக்கம் கதவை கொண்டி போடுறது ” என கத்திவிட்டு சமையல் அறைக்கு சென்றாள்.

*அம்மா சென்றதும் ரவி கதவை திறந்து மட்டும் வைத்து விட்டு உள்ளேயே இருந்தான். இரவு சாப்பாடு சாப்பிட அம்மாவும்,தேனும் அமர்ந்திருந்தார்கள்.

5 Comments

  1. Superbbbb…kadhayoada meedhi eppo varum

  2. Super admin intha kathaivuda endding nalla irukkum.

  3. Aluga vaikra kaathai
    Posted in wrong site?

  4. ஆரம்பம் சூப்பர்

Comments are closed.