**** ரவி சென்றதும் தேனு முகத்தில் “கோபம், ஆச்சிரியம், குழப்பம்” என அத்தனை உணர்வையும் வெளிபடுத்தியது, அப்பாவின் மேல் உள்ள வெறுப்பின் காரணமாக, ரவியை “தம்பி” என நினைத்துகூட பார்த்தது இல்லை. இவனை எப்பொழுதுமே தனக்கு கீழே வைக்க வேண்டும் என்று, என்றோ முடிவு செய்திருந்தாள். இவன் இப்படி தைரியமாக பேசியது கூட அவளுக்கு எரிச்சலையும், கோபத்தையும் தான் வரவைத்தது.
*** அங்கே ரவி தன் அறையில் கட்டிலில் அமர்ந்த படியே “அடுத்து என்ன ” என சிந்தனையில் முழுக தொடங்கினான்
* .
.
.
மணி மாலை 6 :30
.
அம்மா வீட்டில் நுழைந்ததும் , ரவி அவன் அறையிலும் , தேன் ஹாலிலும் படித்துக் கொண்டிருந்தார்கள். தேனை பார்த்து “குட்டி இன்னைக்கு காலேஜ் எப்படி மா போச்சி” என கேட்டாள் .
*”ம்.. சூப்பர் மா” என புத்தகத்தில் இருந்து கண் எடுக்காமல் பதிலளித்தாள்.
** இதையெல்லாம் தன் அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருத்தான் ரவி. “ஆமா நீங்க மட்டும் பேசிக்கோங்க, கொஞ்சிக்கோங்க ஆனா என்கிட்ட மட்டும் கோபபடுகங்க, என்னடா நியாயம் இது ” என தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தான். அக்காவிடம் அடுத்த கட்ட முயற்சியை உடனே அதுவும் இன்று இரவே நடைமுறைபடுத்த வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
மணி இரவு 9:00
*அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள் , அம்மா வடிவு இரண்டு வாய் சாப்பாடு சாப்பிட்டு, தேனிடம் “எனக்கு பசிக்கலை டி மதியம் சாப்பிட்டதே அப்படியே இருக்கு” என தன் அறைக்கு உறங்க சென்று விட்டாள்.
தேன் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது திடிரென “விக்கல்” அதிகமாக வர ஆரம்பித்துவிட்டது , சொம்பில் உள்ள நீரும் காலியாக உள்ளதை அவள்பார்த்தாள், அவள் எழுந்திருக்க நினைக்கையில், ரவி உடனே “இரு கா நான் எடுத்துட்டு வரேன்” என்று துரிதமாக சென்று தண்ணிர் எடுத்து வந்து கொடுத்தான்.
*தண்ணிர் குடித்துக் கொன்டே இன்னும் அவள் “விக்கி ” கொண்டேதான் இருந்தாள், ரவியோ அவள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஒரு குருட்டு தைரியத்தில் அவள் தலையில் கை வைத்து ” மெதுவா.. கா .. மெதுவா..” என தலையை தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான் . அவளும் விக்கலில் நிலை குலைந்து தண்ணீர் குடித்து கொன்டிருந்ததால் அதை கவனிக்கவில்லை , சொம்பில் இருந்து வாய் எடுத்ததும் அவன் சுதாரித்துக் கொண்டு கையை எடுத்தான்.
தேனுக்கு விக்கல் நின்றதும்தான் அங்கு என்ன நடந்தது என யோசித்தாள்
அவன் ” தன் கிட்ட பேசியதும், தண்ணீர் எடுத்து வந்ததும், தலையில் கை வைத்ததும் ” நினைவுக்கு வந்தததும் அவள் கண்கள் விரிய தொடங்கியது, ரவியை முறைக்க தொடங்கினாள்.
Superbbbb…kadhayoada meedhi eppo varum
Super admin intha kathaivuda endding nalla irukkum.
Aluga vaikra kaathai
Posted in wrong site?
ஆரம்பம் சூப்பர்
Hi baby