……டேய் ரவி ” ….. என்று சொன்னதுதான் தாமதம் , படுக்கையிலிருந்து திடுதிப்புயென அலரி அடித்துக் கொண்டு எழுந்தான் ரவி.
அது அவன் அம்மா “வடிவுக்கரசி”யின் குரல் , அந்த குரலின் “வலிமை” அவன் தினம் அறிந்ததே. எழுந்தவுடன் கடிக்காரத்தை பார்த்தான் மணி 6 : 30 என காட்டியது. ச்சே அதுக்குள்ள விடிஞ்சிச்சா என அவனுக்குள் புளம்பினான் கண்ணை கசக்கி கொண்டே.
அவசர அவசரமாக பாத்ரூம்க்குள் ஓடினான் ரவி. காலை கடனை முடித்துவிட்டு , உடற்பயிற்சி செய்ய மாடிக்கு சென்றான். 30 நிமிடம் அலுத்துக்கொண்டே ஏனோ தானோ என்று சில பயிற்சிகளை செய்து விட்டு சோர்வாக கீழே இறங்கி வந்தான்.
அவன் அம்மா வடிவுக்கரசி சமைத்துக் கொண்டிருந்தாள்.
இவனை பார்த்ததும் டேய் எரும மாடே மணி என்னடா? என கோவத்துடன் கத்தினாள் அம்மா வடிவு .
இல்லம்மா நைட் தூங்க லேட் ஆயிடுச்சி இன்னைக்கு கிளாஸ் டெஸ்ட் என செல்லி முடிக்கும் முன்பே அடுத்த கேள்வி இன்னும் கோபத்துடன் .
வீட்ல லேட் நைட் வரைக்கும் படிக்கிறனா அப்ப ஸ்கூல்ல பாடம் நடத்தும் போது கவனிக்கல அப்படி தானே .
பதில் பேசினால் வேற எதாவது செல்லி மடக்கி திட்டுவார்கள் என அமைதியாக தலை குனிந்து இருந்தான் ரவி.
அவன் கண்களில் நீர் கோர்த்திருந்தது.
சரி போய் குளிச்சி தொல என எரிச்சலாய் சொன்னால் அம்மா வடிவு .
அவன் அறைக்கு போகும் போது வழியில் அவன் அக்கா “தேன்மொழி ” அறையை நோட்டம் விட்டுட்டு சென்றான். அறை கதவு சாத்தியிருந்தது ” யப்பா இன்னைக்கு அம்மாகிட்ட திட்டு வாங்குனது அவ பாக்கல என அவன் மனதிற்க்குள் ஒரு நிம்மதி அவன் முகத்தில் தெரிந்தது.
குளித்து முடித்துவிட்டு ஸ்கூல் டெர்ஸ் அணிந்து வெளியே வந்தான் ரவி. அங்கே ஹாலில் கிழே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள் அம்மா வடிவும், அக்கா தேனும்.
இவனை பார்த்ததும் அக்கா தேன்மொழி “உனக்கு சாப்பிட அழைக்க கூட வெத்தல பாக்கு வச்சி கூப்பிடனுமாடா என சொன்னதும்
அவன் முகம் வாடியது. அக்கா கிட்டையும் வாங்கி கட்டிகனும் போல ச்சே என முனுமுனுத்தான்.
“டேய் உக்கார்ந்து சாப்பிடுடா ”
சரி” கா என ஒற்றை வார்த்தை மட்டும் சொல்லி அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.
ஒரு சாப்பாடு பருக்கை கீழே சிந்தினால் கூட அக்காவும் அம்மாவும் திட்டுவார்கள் என பயந்து கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தான் ரவி.
Superbbbb…kadhayoada meedhi eppo varum
Super admin intha kathaivuda endding nalla irukkum.
Aluga vaikra kaathai
Posted in wrong site?
ஆரம்பம் சூப்பர்
Hi baby