28 வயது அழகுப் புயல் – பாகம் 62 127

உளறாதே காயத்ரி அப்படிலாம் இல்ல

நான் தெரிஞ்சிதான் சொல்றேன். ஒத்துக்கோங்க

கடுப்பேத்தாதே காயத்ரி. அப்படிலாம் இல்ல.

அப்படித்தான். உங்களுக்கு உங்க பொண்டாட்டியைவிட நிஷாதான் முக்கியமா இருக்கா

அவன் அவளை முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்றான்.

நிஷா சொல்லி நீங்க என்னை சந்தோஷமா வச்சிக்கிறதைவிட, நீங்களே என்னை சந்தோஷமா வச்சிருந்தா எனக்கு பெருமையா இருக்கும்ங்க

காயு…

மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. நிஷா உங்களை தேடி வந்து படுப்பான்னு சொல்லித்தானே அவ சொல்றதையெல்லாம் கேட்டு நடக்குறீங்க.

அவனுக்கு பேச்சு வரவில்லை.

கடைசியா ஒரே ஒரு கேள்வி கேட்குறேன். நிஷா துபாய் போகவேணாம்னு சொன்னா கேட்பீங்களா கேட்க மாட்டீங்களா

அவன் எதுவும் பேசாமல் திகைத்து நிற்க, அவள் அவனை வெறுப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, கோபத்தோடு போய்விட்டாள்.

சீனு, பித்துப் பிடித்தவன்போல் அப்படியே அங்கேயே உட்கார்ந்துவிட்டான். ச்சே.. காயத்ரி எவ்வளவு புண்பட்டிருந்தால் இத்தனை நாளும் இதை வெளியே சொல்லாமல் மனசுக்குள்ளேயே வைத்துக்கொண்டிருந்திருப்பாள்?

அவனுக்கு தன்னை நினைத்து… போலியாக தான் நடித்துக்கொண்டிருப்பதை நினைத்து…. வருத்தமாக இருந்தது.

மனதுக்குள் எல்லா ஆசைகளும் இருக்கத்தான் செயகிறது. நிஷாவுக்கு பிடிக்காது என்று நடித்துக்கொண்டிருக்கிறேன்.

நிஷாவுக்காக எல்லாம் செயகிறேன். காயத்ரிக்காக செய்வதில்லை.

இனி நான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது நிஷாவுக்கு இல்லை. காயத்ரிக்கு. இவள்தான் என் மனைவி.

இரவு – காயத்ரி இவனிடம் பேசாமல் திரும்பிப் படுத்திருந்தாள். இவன், அவளது வளைந்த இடுப்பையும், பின்னழகுகள் திரட்சியையும் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

கோபமாயிருக்கிறாள்!

காயு… இனிமே உனக்குதாண்டி நான் முக்கியத்துவம் கொடுப்பேன்

அவள் பேசாமல் கிடந்தாள்.

5 Comments

  1. G. சங்கர்

    அருமை கதையை வேறு கோணத்தில் அழகாக கொண்டு சென்று விட்டிர்கள்
    சூப்பர் சார் இப்படி எழுத உங்களை தவிர யாராலும் முடியாது. சார் சீனு காமினி
    பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் வாசகன்.
    G. Sankar

  2. Next please 63

  3. Next please 63

  4. Next please 63
    Supr

Comments are closed.