பழிக்குப்பழி 2 138

எனக்கு கோபமாக வந்தது, நான் கோபமாக உன்னால ஆனதை பாதுக்கோ, பத்து பைசா தர முடியாது என்று சொல்லி காரில் ஏர முற்படும்போது என்னை தள்ளிவிட்டு காரில் இருக்கும் பெட்டியை எடுத்து திறந்து பார்த்தார்கள், அதில் அவனை மயக்கம் அடைய செய்யும் tranquilizer வைத்திருந்தேன்,
அவனுக கோபமாக பணம் எங்கே என்று கேட்டார்கள், நீ தனியா வரமாட்டேன்னு தெரியும் அதான் என்றேன், என்னை பணத்தை கேட்டு மிரட்டினார்கள், நான் அசரவில்லை. bagஐ தூக்கி என்னிடம் போட்டார்கள், ஒருவனை மயக்கம் அடைய வைக்கும் அளவுக்கு தான் வீரியம் இருக்கும், இன்னொருவனை எப்படியும் சமாளித்து விடலாம் என்று முடிவெடுத்தேன்,

அவர்கள் செல்ல பின்னாடி போய் கூட வந்தவனை கழுத்தில் ஊசி குத்த அவன் மயங்கி விழுந்தான், முத்து அதை கண்டு அலறி ஓடினான், அவனை தொறத்தினேன் அவன் வேகமாக ஓடினான், நான் டேய் நில்லு நில்லு என்று கத்திகொண்டே ஓடினேன், ஒருக்கட்டத்தில் நான் ஏதோ கயிறு போல் வேர்கள் தடுக்க கீழே விழுந்தேன், நல்ல அடி எனக்கு, ஒரு நிமிடம் உடம்பு முழுக்க மறத்து போனது போல ஒரு உணர்வு, அப்படியே மயங்கினேன்.

கொஞ்ச நேரம் கழித்து சுயநினைவு வர எழுந்தேன், பார்த்தால் என்னை ஒரு மரத்தோடு சேர்த்து கட்டிவைத்து இருந்தான், என் கை கால்களில் எல்லாம் சிராய்ப்பு காயம், வலித்தது, முத்து என் முன்னாடி இருந்தான், அவன் நண்பன் இன்னும் மயக்கத்தில் இருந்தான், அவன் அவனை எழுப்புவதில் குறியாய் இருந்தான், எப்படியும் அவன் எழும்ப 10 மணிநேரம் மேல் ஆகும். நான் கூப்பிட்டேன், கட்டை அவிழ்த்து விடு என்றேன், அவனுக்கு பயம் தான் அதிகம், டேய் நான் போட்டது விஷ ஊசிடா அவன் செத்திருவான் என்றேன், அய்யோ மச்சான் என்றான், ஒஹ் இவன் தங்கை புருஷன் போல என்று தெரிந்து கொண்டேன்,

நான் நெனச்சா மட்டும் தான் அவனை காப்பாத்த முடியும் என்றேன், உடனே என் பக்கம் திரும்பினான், இங்கே இருந்து பெரிய ஹாஸ்பிடல் 7 km அங்கே போறதுக்குள்ள அவன் செத்திருவான்டா என்றேன், என்னை என் கிளினிக்குக்கு கூட்டிட்டு போ, நான் காப்பாத்ரேன் என்றேன், அவனும் என் கையை கட்டிய படியே என்னை மரத்தில் இருந்து விடுவித்து என்னையும் அவனையும் காரில் ஏற்றினான், நான் பின்னால் ஏறி கொண்டேன், கொஞ்சம் காட்டு வழி போகும் போது, அவனை பின்னால் இருந்து தள்ளி உதைக்க, அவன் நிலை தடுமாறி மரத்தில் மோதினான்,

கார் முன்பாக நன்றாக அடி பட்டது, எனக்கு இடித்ததில் கையில் நல்ல அடி, எனக்கு ரத்தம் வழிகுறது ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை, steeringல் தலை அடிபட்டு ரத்தம் அவனுக்கு, நான் முன்னே போய் மீண்டும் அவன் தலையை steering இல் இரண்டு முறை இடித்து மோதினேன், இன்னும் அழுத்தமாக மோத அவன் மூஞ்சி ரத்த களரி ஆனது, நான் அவனை தள்ளி, என் கட்டை அவிழ்த்து வண்டியை என் பழைய கிளினிக்கிற்கு விட்டேன். வண்டியில் இருந்து புகை தள்ளியது, இருந்தும் வண்டியை அழுத்தி பிடித்து என் கிளினிக் வாசலை சென்றடைந்தேன்,