பழிக்குப்பழி 2 138

ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன், வாழ்க்கையில் முதன் முதலாக என்னையும் என் செயலையும் நினைத்து வெட்கபட்டேன், எனக்குள் இப்படி ஒரு மிருகம் இருக்கிறதா என்று, எனக்கு கோபமே வந்தது இல்லை, அப்படியே வந்தாலும் யாரிடமும் காட்டியது இல்லை. ஆனால் எப்படி நான் இப்படி மாறிவிட்டேனே என்று கவலையாக இருந்தது. இயற்கையான என் character மாறிவிட்டதே என்று அவள் மேல் வெறுப்பு தான் வந்தது.

அவளை தூக்கி பெட்டில் போட்டேன், காய்ச்சலுக்கு இன்ஜெக்ஷன் போட்டேன், உடம்பில் காவு இருந்ததால், oinment போட்டேன், ஒரு 1 மணிநேரத்தில் ஹீட் குறைந்தது, பார்க்கவே பாவமாக இருந்தது, இனிமேல் அவள் என்ன செய்தாலும் அவளை அடிக்க கூடாது என்று எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன், நான் நெற்றியை தொட முற்பட்ட போது என் கையை தட்டிவிட்டாள், இட்லியை எடுத்து அவள் முன் வைத்தேன், அதை தூக்கி எறிந்தாள், என் மீது கோபத்தை காட்டினாள்.

நான் பக்கம் போய் இட்லியை எடுத்து பிய்த்து சட்னி சாம்பாரில் தொட்டு அவள் கைகளில் தந்தேன், அதை வாங்கி சாப்பிட்டாள், நாலு சாப்பிட்ட பிறகு போதும் என்றாள்,
நான் மீண்டும் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

வீட்டில் நான் மட்டுமே இருந்தேன், அமைதியாக படுத்திருந்தேன், யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க, என் மனைவியும் மகள் தான் போல என்று நினைத்து திறக்க, அதிர்ச்சியாக இருந்தது, மில் அதிபர் ராஜாவின் கைக்கூலி முத்து வந்திருந்தான், நான் அவனை வெளியில் கூட்டி போக நினைக்க, அவன் உள்ளே வந்து sofaவில் அமர்ந்து கொண்டான், நானும் casualஆக என்ன முத்து இந்த பக்கம் என்றேன், ராஜ் அனுப்புச்சாரா என்றேன், இல்லை டாக்டர் நானே தான் வந்தேன் என்றான், செறி என்ன விஷயம் என்றேன் என்னிடம் ஒரு பேப்பர் கட்டிங்கை காட்டினான், அதில் விக்கியின்
படம் போட்டு காணவில்லை, துப்பு குடுப்போருக்கு 1 கோடி என்று போட்டு இருந்தது, எனக்கு என்ன விஷயமாக வந்திருக்கிறான் என்று புரிந்தது,