பழிக்குப்பழி 2 138

கொஞ்ச நேரம் அங்கயே நிற்க அவர்கள் கிளம்பி போனார்கள், அநேகமாக போலீஸ் என் பழைய கிளினிக் செல்ல வாய்ப்பிருக்கிறது, யோசித்தேன் மீண்டும் வண்டியை திருப்பினேன், எங்கள் வீட்டிலேயே மேலே மாடியில் எனக்கென்று ஒரு அறை இருக்கிறது, அங்கே வெறும் தேவை இல்லாத பொருட்களை போடுவதற்காக வைத்து இருந்தோம், பேசாமல் பவித்ராவை கொஞ்ச நாள் அங்கே தங்க வைக்கலாம் என்று யோசித்தேன், ஒருவேளை பவித்ரா சத்தம் போட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன், வாய்ப்பில்லை போலீசை பார்த்தே ஏதும் செய்யவில்லை, கண்டிப்பாக ஏதும் பிரச்சனை இருக்காது என்று முடிவு செய்தேன்,

ஆமா உன் wife வருவங்களே என்னை எப்படி இங்கே தங்கவைப்பாய் என்று சொல்லி என்னை பார்த்தாள், நான் என் வீட்டுக்கு போய் அவள் புது அறையை காட்டினேன், ரொம்ப தூசி யாக இருக்க, இருவரும் கிளீன் செய்தோம், எப்படியும் என் wife வர 2மணி நேரம் ஆகும், கொஞ்ச நாள் இங்கேயே இருந்துக்கோ அப்புறம் இடம் மாத்திக்கலாம் என்றேன், அப்பரம் ஒன்னு கேக்கணும் நீயென் போலிச பாத்துட்டு எதுமே பண்ணல, சத்தம் போடுவேன்னு இல்ல நெனச்சேன், ச்ச ச்ச எனக்கு உன்கூட இங்க இருக்கிறது பிடுச்சிருக்கு என்றாள், நான் முறைத்தேன்.

என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள உடனே என் பழைய கிளினிக் சென்றேன், நான் யோசித்தது போலவே என் கிளினிக்கின் பூட்டை உடைத்து உள்ளே ஆய்வு செய்து கொண்டு இருந்தார்கள், எனக்கு செம கோபம் வந்தது, யாறைகேட்டு பூட்டை உடைத்தீர்கள் என்று, சாரி சார் இது ஏதோ ஆளில்லா அறை என்று நினைத்து விட்டோம் என்றார்கள், இல்லை என் பொண்ணு அடிக்கடி இங்கே தான் தங்குவாள் என்றேன், ஒஹ் அப்டியா ட்ரெஸ் எல்லாம் இருந்தது என்று பல்லை காட்டி சிரித்தபடி சொன்னார், என் பெயர் கிருஷ்ணன் நான் தான் இந்த ஏரியா SI என்றார், நான் கோபமாக மூஞ்சை காட்டினேன், என்ன விஷயமா சார் இங்கே வந்தீங்க என்றேன்.

ரெண்டு பேரு காணாம போயிருக்காங்க அதான் விசாரிக்க வந்தோம் என்றார்கள், கண்டிப்பாக என் வண்டியை பத்தி இனிமே தெரியவரும் அதற்க்குள் நானே சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்தேன், நானே உங்களை பாக்கணும்னு நெனச்சேன், ரெண்டு நாள் முன்ன என் வண்டிய மரத்துல இடுச்சுட்டேன், ஷெட்ல இருக்கு, insurance claim பண்ண fir வேணும்னு மெக்கானிக் சொல்றார் என்றேன், ஓஹோ அப்படியா, அதான் இந்த காயமா என்று என் நெத்திய பார்த்து கேட்டார் ஆமாம் என்றேன், செரி ஸ்டேஷன் வாங்க வாங்கிக்கலாம் என்றார்.

செரி நாங்க கிளம்பறோம் என்று சொல்லிவிட்டு சென்றார்கள், என் மீது எந்த சந்தேகமும் இருப்பது போல தெரியவில்லை, நானும் சந்தேகம் வரா வண்ணம் நடந்து கொண்டேன், எனக்கு மீண்டும் அவர்கள் வர வாய்ப்பு இருப்பதுபோல தெரிந்தது, நான் உள்ளே கொஞ்ச நேரம் உட்கார்ந்தேன், வெளியே பார்த்தால் ராஜபாண்டி வந்திருந்தார், எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, என்ன ராஜா இங்கே வந்திருக்கிங்க சொல்லுங்க என்றேன், உள்ளே வந்தார்,