காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 6 51

டீவியை ஆன் செய்த போது அர்ச்சனாவின் வழக்கு பற்றி தான் ஓடிக்கொண்டு இருந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் முன்பே அனைத்து ஊடகங்களும் பாலன் தான் குற்றவாளி அவர்களாகவே தீர்ப்பை வழங்கி கொண்டு டி.ர.பி. யை ஏற்றி கொண்டு இருந்தனர். முன்னாள் நீதிபதி ஒருவரின் தலைமையில் இந்த கேஸை விசாரிக்க தனி நீதி மன்றம் அமைக்க பட்டு 10 நாட்களுக்குள் வழக்கு முடித்து வைக்க உத்தரவிட பட்டு இருந்தது.

அப்போது லாயர் போன் செய்தார்.

“மேடம் பார்த்தீங்களா, நான் சொன்ன மாதிரி ஸ்பெஷல் கோர்ட் அமைச்சிட்டாங்க பாருங்க”

“ஹ்ம்ம். டெட் பாடி கிடைக்காம எப்படி பாலனுக்கு தண்டனை கொடுக்க முடியும்”

“அங்கே இருந்த பாலனோட செமன், அப்புறம் அர்ச்சனாவோட பிளட் எல்லாம் வச்சி தான் ரேப் அண்ட் மர்டர் கேஸ் பில்ட் பண்ணி இருக்காங்க. பாடி ஒன்னு தான் மிஸ்ஸிங் இப்போ அதிக மீடியா கவர் இருக்கறதாலே அவங்களே ஒரு டீகம்போஸ் ஆன பாடிய காட்டி அது தான் அர்ச்சனான்னு சொல்லி கேசை மூட பார்ப்பானுங்க”

லாயர் சொன்னது போலே அடுத்த நான்காவது நாளில் ஒரு அழுகிய சடலத்தை காட்ட சங்கரும் அது தான் அர்ச்சனா என்று அடையாளம் சொல்ல பாலன் மீது கேஸ் இன்னு ஸ்ட்ரோங் ஆனது. பாலனை தூக்கில் போட வேண்டும் என்று ஆங்காங்கே போராட்டம் கூட நடைபெற கோர்ட்டில் போலீசார் எல்லாவற்றயும் தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு வாதமும் முடிந்த பிறகு இன்னும் 3 நாட்களில் தீர்ப்பை வழங்குவதாக நீதிபதி கோர்ட்டை ஒத்தி வைத்தார்.

நான் வெரோனிகாவை தான் மலை போல நம்பி இருந்தேன். தீர்ப்பு வந்த நாள் இரவே வெரோனிகா எனக்கு போன் செய்தாள்.

“வெரோனிகா, ஏதாச்சும் குட் நியூஸ் சொல்லுங்க”

“சாரி வித்யா, நாம ஹாக் பன்னுவோம்னு தெரிஞ்சே அவன் என்னை நாடு முழுக்க ஒண்ணுமே இல்லாம சுத்த வச்சிட்டான். பாஸ்டர்ட்”

அந்த கமெராவை தவிர வேறு வழியே இல்லை, அதை எடுக்க சங்கர் வீட்டுக்கே அன்றிரவு நேரடியாக சென்றேன்.

“என்னடி உன்னோட புருஷன் என்னோட பொண்டாட்டியை கொன்னுட்டான். நீ இப்போ என்னை கொள்ள போறியா”