காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 6 51

“சரி அப்போ நான் கிளம்பரேன்”

“இருங்க மாமா. நான் உங்களுக்காக ஆசையா சமைச்சி வச்சி இருக்கேன் அதை சாப்பிடுங்க”

இருவரும் சென்று பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தோம். அர்ச்சனாவிடம் வெரோனிகா பற்றி அவள் சங்கருக்கு எதிராக திரட்டிய ஆதாரங்கள் எல்லாம் சொன்னேன்.

“ச்சே அந்த வீடியோ எல்லாமா போட்டு காட்ட போறீங்க”

“இல்லை அர்ச்சனா, வீடியோ எல்லாம் எப்படி காட்டமுடியும். அதை எல்லாம் அப்போவே டெலீட் பண்ணிட்டேன். அவன் கம்பெனில பண்ணிய பிராட் மட்டும்வச்சி தான் கேஸ் மூவ் பண்ண போறேன்”

“ஹ்ம்ம் ஆல் தி பெஸ்ட் மாமா”

“தேங்க்ஸ் அர்ச்சனா. என்னோட தப்பை எல்லாம் புரிய வச்சிட்டே”

“எனக்கு சந்தோசம் மாமா. சங்கர் எப்போ ஜெயிலுக்கு போவான்னு காத்துகிட்டு இருக்கேன்”

“நீயும் கொஞ்சம் ஜாகிரதையாக இருந்துக்கோ”

“டோன்ட் ஒற்றி. நான் நாளைக்கு காலையிலே அம்மா வீட்டுக்கு கிளம்பி போய்டுவேன்”

“குட் அது தான் உனக்கும் பாதுகாப்பு. அப்போ நான் வீட்டுக்கு கிளம்பவா”

“இங்கேயே இருங்க மாமா, காலையில போகலாம் எனக்கு போர் அடிக்கும். எனக்கு தனியா தூங்க புடிக்காது ”

“சரி நான் காலையிலே போறேன்”

அவள் போய் நைட்டி மாற்றி கொண்டு வர இருவரும் டிவியில் உட்கார்ந்து படம் பார்த்தோம். அவள் என் நெஞ்சின் மீது சாய்ந்து கொண்டு படம் பார்த்தது எனக்கு வித்யாவை தான் ஞாபக படுத்தியது . கல்யாணம் ஆன புதிதில் எல்லாம் அவள் என் நெஞ்சில் சாய்ந்து கொண்டு தான் படத்தை பார்ப்பாள்.

படம் முடிவதற்குள்ளாகவே “குட் நைட் மாமா, எனக்கு தூக்கம் வருது” என்றாள்.

“சரி நீ ரூம்ல தூங்கு, நான் இங்கேயே தூங்குறேன்”

“ரூம்லயே வந்து தூங்குங்க மாமா”

“பரவாயில்ல அரச்சு. நான் காலையிலே முழிக்கிற ஆளு உனக்கு தூக்கம் டிஸ்டர்ப் ஆகும் அதனாலே நான் இங்கேயே படுத்து தூங்கிட்டி காலையிலே கிளம்பி போயிடுறேன்”

“சரி மாமா”

“நீ முழிச்சி அம்மா வீட்டுக்கு போய்ட்டு எனக்குமெஸ்ஸஜ் பண்ணு”

“ஹ்ம்ம் சரி மாமா “குட் நைட்” என்று சொல்லி என் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு பெட்ரூம் சென்றுவிட்டாள்.

அதன் பின்பு நான் தூங்கி எழுந்த போது மணி 6.30 ஆகி இருந்தது. ஏனோ தெரியவில்லை வழக்கத்தை விட ஒரு மணி நேரம் அதிகமாக தூங்கிவிட்டேன். வீட்டின் கதவை திறந்து வெளியே வரும் போது எதிர் அபார்ட்மெண்டில் இருந்த செக்கூரிட்டி என்னையே ஒரு மாதிரியாக பார்த்தான். மெல்ல குனிந்து கொண்டே வந்து தூரத்தில் பார்க் செய்து இருந்த எனது காரை எடுத்து கொண்டு எனது வீட்டிற்கு கிளம்பி வந்தேன். வித்யா தூங்கி கொண்டு தான் இருந்தாள். வழக்கம் போல ஜோக்கிங் முடித்து விட்டு வந்து குளித்தவுடன் நன்றாக கண்ணயர்ந்து தூங்கி விட்டேன்.