“என்னாச்சு சொல்லு ப்ளீஸ்”
“….”
“என்னாச்சு”
“….”
“சொன்னாத்தானே தெரியும், சொல்லிட்டாச்சும் அழு”
“அந்த பாஸ்டர்ட் என்னை நல்லா ஏமாத்திட்டான் வித்யா”
“யாருடி அந்த காலேஜ் பையனா”
“இல்லடி அந்த பாஸ்டர்ட் ராம்”
“யாரடி உன்னோட புருசனையா சொல்லுற”
“ஆமாடி”
“என்னாச்சு சுஜி. ராம் என்ன செஞ்சாரு”
“அந்த பாஸ்டர்ட் இந்தியா போய் இன்னொரு பொண்ணை இந்தியா போனப்போ திருட்டு தனமா கல்யாணம் பண்ணிகிட்டான். அது எப்படியோ அப்பாவுக்கு தெரிஞ்சி அவன் கிட்ட எதுக்குனு கேட்டதுக்கு உன் பொண்ணு நடத்த கெட்டவ அப்படினு அவனே இங்கே எடுத்த போட்டோவை எல்லாம் காட்டி இருக்கான் ப்ளோட்டி ஸ்கவுன்றல்”
“என்னடி” எனக்கு பேரதிர்ச்சி ஆக இருந்தது.
“எங்க அம்மா எனக்கு போன் பண்ணி, இங்கே வந்து எல்லாம் குடும்ப மானத்தை நாறடிச்சிடாதே. அங்கேயே செத்துப்போ அப்படின்னு சொல்லிட்டாங்க” கதறி கதறி அழுதாள்.
“சுஜி ப்ளீஸ் அழாதே”
“….”
“சுஜி ப்ளீஸ் அழாதே”
உண்மையிலே அவள் அழுவதை பார்க்க எனக்கே அழுகையாக வந்தது.
“சுஜி நீ ராம் கிட்ட பேச வேண்டியது தானே”
“உன்னை மாதிரி ஐட்டம் கிட்டே எப்படி வாரிசு கொடுக்குறது அதனாலே தான் நல்ல பொண்ணா பார்த்து கட்டி கிட்டு வந்தேன். பயப்படாத அவ எனக்கு பொண்டாட்டி, நீ ஊருக்கே பொண்டாட்டி. உன்னைவச்சி ஆபீஸ்ல இன்னும் ப்ரோமோஷன் வாங்க வேண்டி இருக்கு” அப்படின்னு திமிரா சிரிச்சான்.