நீண்ட நேரம் அவள் மனசு நிம்மதியில்லாமல் தவித்தது.
‘ சே.. இந்த மனுசன் ஏன் வந்தான்.?’ என்று வெறுப்பாக இருந்தது.
கணவன் மேல் ஆவேசம்.. ஆத்திரமெல்லாம் பொஙகிப் பொங்கி வந்தது. நடந்தவைகளை நினைத்து மனம் குமைந்தாள். கணவன் மேல் உண்டான வன்மம் அளவில்லாமல் பெருகி.. நெஞ்சு குமறியது.
” நீ நெனைக்கற மாதிரி. .. அவ ஒன்னும் கெட்டவ இல்ல தெரியுமா..? எல்லார் கிட்டயும் ரொம்ப அன்பாதான் பழகுவா..!” என திடிரெனப் பேசினார்.
அவள் மனசுள் எரிமலை குமறியது.!!
மிருதுளாவின் மனசுக்குள் ஒரு எரிமலை குமறியது.!!
” உன்ன அவளுக்கு ரொம்ப புடிக்கும் தெரியுமா..? அடிக்கடி உன்னப் பத்தி விசாரிப்பா..” என்றான்.
அப்போதும் அவள் பேசவில்லை.
”ஒரு தடவ அவள .. கூட்டிட்டு வரட்டுமா..?”
” தூத்தெறி…” என வெடித்தாள் மிருதுளா. ”வெககமால்ல இப்படி கேக்கறதுக்கு. .? அவ யாரு எனக்கு. .? கண்ட.. கண்ட சிறுக்கி காலெல்லாம் இந்த வீட்ல பட்டா செருப்பால அடிப்பேன்.!”
” என்னைவா… என்னைவா செருப்பால அடிப்ப..?”
” கண்டவன்லாம் வந்து படுத்துட்டு இப்படி அதிகாரம் பண்றதுக்கு இது ஒன்னும்.. தேவடியா மடம் இல்லை. .” என்று மிகவும் கொதிப்புடன் சொன்னாள்.
அதன் பிறகு அவள் கணவன் பேசவில்லை. ! ஆனால் மிருதுளா மனசு… புழுங்கித் தவித்தது…!!!
மனம்… குமுறிக் குமுறி… ஒரு வழியாக நள்ளிரவுக்கு மேல்தான் தூங்கினாள் மிருதுளா. அப்படியும் திடுமென விழித்தாள்.
பார்த்தால்… அவளது கணவன் அவளை அணைத்துப் படுத்திருந்தான். வந்தது ஆத்திரம். .! வெடுக்கெனப் பிடித்து அவனைத் தூரத் தள்ளி விட்டாள்.
” ஏய். .நா உன் புருஷன். ..” என்றான் தடுமாறி எழுந்து உட்கார்ந்து.
” அப்படி எந்த மயிரானும் எனக்கு இல்ல. மரியாதை கெடறதுக்கு முன்னால வெளில போறது நல்லது.”
” என்னைவே வீட்ட விட்டு வெளில போகச் சொல்றியா..?”
” இது என்வீடு… அதுக்கு எனக்கு உரிமை இருக்கு. ”
” நீ என்ன தைரியத்துல இப்படி எல்லாம் பேசறேனு எனக்கு தெரியுன்டி..”
கணவனைக் கடுமையாக முறைத்தாள். கணவன்.
”புதுப் புது புருஷனா புடிக்கறவளுக்கு. . தாலி கட்டின புருஷன எப்படி புடிக்கும். .?” என்றான்.
” மரியாதை கெட்றும்… இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா.!”
” நா போறன்டி.. ஆனா உன்ன சந்தி சிரிக்க வெக்காம விடமாட்டேன் பாரு..” எனக் கோபத்துடன் கத்திவிட்டுப் போனான் அவளது கணவன்.
Nice presentation… story…