உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 2 136

” ஆனா என்ன விழி .?”

அவனை நேராகப் பார்த்தாள்.
”அவள கல்யாணம் பண்ணிக்கப் போறியா..?”
” ம்.. தெரியல…”
”உன்னுது.. சின்சியர் லவ்வா.?”
” அப்கோர்ஸ்..! ஏன். .?”
” அவ உன்ன மேரேஜ் பண்ணிக்கறதா சொன்னாளா.?”
” இன்னும் அதுபத்தியெல்லாம் பேசல..! நீ சொல்ல வந்தத சொல்லு..”

சிறிது மௌனித்துவிட்டுச் சொன்னாள்.
”கல்யாணத்துக்கப்பறம்.. நீ ரொம்ப பீல் பண்ணுவே..”

விழிநயாவைப் பார்த்து மெல்ல புன்னகைத்தான் நந்தா.
” என்ன பீல் பண்ணுவேன்.”
” எனக்கு தெரிஞ்சே அவளுக்கு நெறைய பாய்பிரெண்டஸ் இருக்காங்க..” என்றாள்.
”நெறையன்னா.?”
”மெனிமோர் பாய்ஸ்…! நா பொய் சொல்லல..”
” ஓ..!” என அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டான்.
” எதுக்கும் நீ… கேர் புல்லா இருந்துக்கோ..” என்றுவிட்டு ”சரி வா கீழ போலாம் ” என்றாள்.
அவனும் அவளுடன் சேர்ந்து கீழே போனான்.

அன்றைய இரவு..வெகுநேரம் பேசிக்கொண்டிருந்த பின்பே படுக்கப் போனான் நந்தா. அப்போதே மிருதுளா துங்கத் தொடங்கியிருந்தாள்.
பூரணிக்கு போன் செய்து பார்த்தான். ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருந்தாள். தூங்கியிருப்பாள் என நினைத்துக் கொண்டு அவனும் படுத்தான். சிறிது நேரம் மொபைலை நோண்டிக்கொண்டிருந்தான்.

”டொக்… டொக்..” சன்னமாக அவன் அறைக்கதவு தட்டப்பட்டது.
”தாழ் போடலே..” என்றான்.
வழிநயா உள்ளே வந்தாள்.
” வா..! என்ன இங்க. .?” எழுந்து உட்கார்ந்தான்.
” சும்மா. .! என்மேல எதும் கோபமில்லையே..?”
”எதுக்கு. .?”
”பூரணி பத்தி சொன்னதுக்கு.?”
” சே… சே..”
” நியாயமா பாத்தா.. என்னை உன்னால நம்பத்தான் முடியாது. ! ஏன்னா உன் லவ்வரைப் பத்தி. . தப்பா சொன்னா அது என் தப்புதான்.”
” இல்ல. . அப்டிலாம் இல்ல. .”
” இல்லல்ல..?”
”நீ எதும் பீல் பண்ணிக்க வேண்டாம் விடு..! உக்காரு..”
” நா போறேன்..! ஆனா ஸாரி சொல்லத்தான் வந்தேன் .”
” பரவால்ல. .”

1 Comment

  1. Nice presentation… story…

Comments are closed.