உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 4 110

ஆமா மாமா! சொன்னவள் பின் திரும்பி ப்ரேமையும் அலட்சியமாகப் பார்த்தாள்.

மாமாவா? அதிர்ந்து நின்றான் ப்ரேம்! ராஜா கேட்ட போது ஒன்றும் சொல்லாத மைதிலி, இன்று ப்ரேம் முன்னிலையில் அவளையுமறியாமல் சொல்லியிருந்தாள்!

வலிக்குதா ப்ரேம்? துரோகமும், அவமானமும் உனக்குன்னு வர்றப்ப வலிக்குதா? இந்த வீடு மட்டுமில்லை, கீழ நிக்குற கார், நகை, ஏன், நீ உன் வீட்டை வித்து கொடுத்த பணம் 50 லட்சம், எல்லாத்தையும் மறந்துடு!

தொடர்ந்து அடி வாங்கினால், அவனும் என்னதான் பண்ணுவான்? இது சீட்டிங்.. ஃபோர்ஜரி! என்று கத்தினான்.

அப்ப நீ பண்ணதுக்குப் பேரு என்ன? என்ற ராஜாவின் நக்கல், ப்ரேமை இன்னும் காயப்படுத்தியது!

மைதிலி, வேணாம், அவனை நம்பாத. அவன் உன் காசைப் புடுங்கிட்டு ஏமாத்திடுவான். என்ன இருந்தாலும் நான் உனக்கு தாலி கட்டிய புருஷன். நான் சொல்றதை கேளு, என் கூட வந்….. பேசிக்கொண்டிருந்த ப்ரேமின் வார்த்தைகள் அப்படியே நின்றன். அவன் கண்ணையே அவனால் நம்பவில்லை.

ஏனெனில், அங்கே, ராஜா, மைதிலியை இழுத்து அவள் உதட்டில் முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

மைதிலிக்கும் ஒன்றும் புரியவில்லை. ராஜா தோளில் கை வைத்தது சங்கடமாய் இருந்தாலும், அவனது அருகாமை, அணைப்பு அவளுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. மெதுவாக அதனை ரசிக்கத் தொடங்கியிருந்தாள். பேசிக் கொண்டிருந்த ப்ரேம், ராஜாவை நம்ப வேண்டாம் என்று சொன்ன போது அவளுக்கும் கடுப்பாக ஆரம்பித்தது. அவனைத் திட்டலாம் என்று வாய் திறக்க நினைத்த நேரத்தில்தான், அவளை இழுத்து, ராஜா முத்தமிட ஆரம்பித்திருந்தான்.

அவள் திகைப்பில் இருந்தாள். நடந்ததே புரியவில்லை அவளுக்கு. ஏனெனில், ராஜா, மைதிலியிடம் சொன்ன ப்ளானில், இந்த சீனே இல்லை!

சிறிது நேரம் முத்தமிட்டவன், அவளை பிரிந்தாலும், அணைப்பிலேயே வைத்திருந்தான். அவள், ராஜாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனோ, மைதிலியின் கண்கள் லேசாக கலங்கியிருந்தது. கொஞ்சம் கோபமும் இருந்தது!

அவள் கண்களில் லேசாக முத்தமிட்டவன், திரும்ப அவள் கண்களையே அழமாகப் பார்த்தவன் சொன்னான்,

கிஸ் மி!

அவன் ஒரு கை அவளை அணைத்திருந்தது. இன்னொரு கை அவளது கன்னத்தை வருடிக்கொண்டிருந்தது!

ராஜா… அவள் தவித்தாள்! அவளிடம் ராஜா, முதன் முதலாய் கேட்பது! அதைத் தருவதில் எத்தனை தவிப்பு?! ஆனால், தராமலும் இருக்க முடியவில்லை!

திரும்ப அவள் கண்களையே பார்த்தவன், சொன்னான்.

நான் சொன்னா, நீ செய்ய மாட்டியா மைதிலி என்றான் அழுத்தமாக!

அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தவள், ஒரு நீண்ட மூச்சை விட்டாள்! பின் அமைதியாகத் திரும்பி ப்ரேமைப் பார்த்தாள்.

தீர்க்கமாகப் ப்ரேமைப் பார்த்தவாறே, ராஜாவின் கன்னங்களில் முத்தமிட்டவள், பின், திரும்பி ராஜாவின் கண்களைப் பார்த்துக் கொண்டே, அவன் உதடுகளில் முத்தமிட்டாள். மெதுவாக, அவன் உதடுகளை சுவைத்த அவள் உதடுகள், கொஞ்சம் கொஞ்சமாய் ஆவேசம் அடைந்து மிக வேகமாய் சுவைக்க ஆரம்பித்தது.

அடுத்தடுத்து வேகமாய் முத்தமிட்ட மைதிலி, திடீரென ஆவேசம் தாங்க முடியாதவளாய் அப்படியே அவன் மார்பில் முகம் புதைத்து, அவனை இறுக்கி அணைத்திருந்தாள்.

அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவளது உணர்வுகள் அவனுக்குப் புரிந்தது. மெல்ல அவள் தலையை வருடிக் கொடுத்தான்.

உடன் திரும்ப நிமிர்ந்து ராஜாவைப் பார்த்த மைதிலி, மீண்டும் அழுத்தமாக, ராஜாவின் உதட்டில் முத்தமிட்டாள்! பின், ராஜாவிடமிருந்து விலகியவளின் கண்கள் கலங்கியிருந்தது. ராஜாவைப் பார்த்தவள், நான் ரூமுக்கு போறேன் என்று திரும்பினாள்.

ப்ரேமோ, நான் சொல்வதைக் கேளு மைதிலி. அவனை நம்பாதே என்று மைதிலியின் கையைப் பிடித்தான்.

அவ்வளவுதான்…