உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 4 110

முறைக்காத! நீ என்னை மாமான்னு கூப்பிடுறியோ இல்லியோ, உங்கப்பாவை, நான் மாமான்னு, கூப்பிட ஆரம்பிச்சு நாளாச்சு! உங்கப்பாவும், எங்கப்பாவும் சம்மந்தி மாதிரிதான் பேசிகிட்டு இருக்காங்க! இன்னும் நீ தான் இல்லாத மூளையைப் போட்டு உருட்டிகிட்டு இருக்க!

உனக்குத் தெரியுமா? சில சமயம், மனசு சொல்ற மாதிரி கேட்டுட்டு போயிட்டே இருக்கனும்! ரொம்ப யோசிக்கக் கூடாது! ந்னு ஒரு பெரிய மகான் சொல்லியிருக்காரு!

இப்போது மொத்தமாக தெளிந்திருந்த மைதிலி, புன் சிரிப்புடன், நிமிர்ந்து அவனைக் காதலுடன் பார்த்தாள். நான் சொன்னது எனக்கேவா, திருடா, இப்பிடியே சத்தமில்லாம ப்ளான் பண்ணி, கண்டதையும் பேசி, ஆளைக் கவுத்துடு!

ம்க்கும்… உன்னை கவுக்க ப்ளான் பண்றாங்க! போடி, யாருக்கும் தெரியாம கள்ள உறவு வெச்சுகிட்டவன் கூட ஒழுக்கத்தைப் பத்தி இவ்ளோ ஃபீல் பண்ணதில்லை! இவ என்னான்னா, ஒழுங்கா, சந்தோஷமா வாழலாம்னு வந்து சொல்றவன்கிட்ட, லொல்லு பண்ணிட்டிருக்கா! உன்னைக் கட்டிகிட்டு இன்னும் நான் என்னென்ன பாடுபடப்போறேனோ….

உங்களை… என்று செல்லமாய் அவனை அடித்தவள், காதலின் மிகுதியில் அவனை அணைத்துக் கொண்டு, அவன் தோளில் முகம் புதைத்தாள்!

ராஜாவும் அவளை இறுக்க அணைத்துக் கொண்டான்! அணைத்திருந்த ஒரு கை, மெல்ல அவள் தலையை வருடியது, பின் அவள் கன்னங்களையும் வருடியது. பின் அவன் விரல்கள் மெல்ல அவளது காது மடல்களை அடைந்த போது, அவள் அணைப்பு இறுகியது. இன்னும் ஆழமாக அவன் தோள் வளைவில் முகம் புதைத்தாள்!

மைதிலி…

ம்ம்..

ஆக இதுக்கும் தாங்க்சோ, ட்ரீட்டோ கிடையாது, அப்பிடித்தானே! அவள் முகம் புதைத்திருந்தாலும், அவள் உதடுகள் புன்னகையில் விரிவது அவனுக்குத் தெரிந்தது. அவள் இல்லை என்று தலையாட்டினாள்.

அவன் வாய் பேசிக் கொண்டிருக்கவில்லை. கையும் பேசிக் கொண்டிருந்தது. பேச்சு வாக்கில் அவனது கை, அவளது பின் கழுத்து, முதுகு, தோள்கள், கை என்று அழைந்து மெதுவாக அவளது இடுப்பில் ஊர்ந்துக் கொண்டிருந்தது!

அவளது அணைப்பும் கொஞ்சம் கொஞ்சமாக இறுகிக் கொண்டே வந்தது. அவளது மூச்சு கொஞ்சம் அதிகமாகியிருந்தது. மேலும் முன்னேறிய அவனது கைகளை, அவளது கைகள் தடுக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தது! இடுப்பிலிருந்து இன்னும் மலையேற முயன்ற அவனது விரல்களை டக்கென்று பிடித்த அவள்,

டேய் பொறுக்கி, என்னடா பண்ற?

ம்ம்… அது, நீ ரொம்ப கஷ்டமா இருக்குன்னு ஃபீல் பண்ணியா, அதான் உனக்கு ஆறுதல் சொல்லிட்டு இருக்கேன்….

ஹா ஹா, இருவரும் சிரித்தாலும், அவனது கையை எடுத்து, அவளது கன்னத்தில் வத்தவள், கம்முனு இருக்கனும், பிச்சுபுடுவேன் என்று இன்னும் சலுகையாய் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்!

ஒரு சனிக்கிழமை மாலை! ராஜாவின் வீடு.

ப்ரியாவுக்கு பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. அவள் ஊரிலிருந்து வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது! எதுவோ சரியில்லை என்று உள்மனம் சொல்லியது. ஆனால், எல்லாமே சரியாக நடப்பது போலும் இருந்தது.

ராஜா ஏனோ மிகுந்த சந்தோஷமாக இருந்தது போல் தோன்றியது. அவளிடம் சாதாரணமாகப் பேசினாலும், அவளுக்கு ஏதோ உறுத்தியது. அது ஏனென்றும் அவளுக்குத் தெரியும். வழக்கமாக, அவளோ, அவனோ ஊருக்கு போவதெனில், ஊருக்குப் போகும் முன்னும், போய் விட்டு வந்த பின்னும், அவர்களுக்குள் உறவு இருக்கும். ஆனால் இந்த முறை ராஜா அவளை கண்டு கொள்ளவேயில்லை, முன்பும் சரி, பின்பும் சரி.

இன்னும் சொல்லுவதென்றால், கடைசியாக அவர்கள் எப்பொழுது உறவு கொண்டார்கள் என்றே ஞாபகத்தில் இல்லை! வெட்டிங் டே சமயத்தில் கூட இல்லையே? ப்ரேம் தொட்டே, இரண்டு மாதங்களுக்கும் மேலாகியிருந்தது!

ப்ரேம் வேறு என்ன ஆனான் என்று தெரியவில்லை. மொபைல் ஸ்விட்ச் ஆஃபிலேயே இருந்தது. ரிசைன் பண்னிவிட்டு சென்றது கம்பெனியில் தெரிந்தது. யாரிடமாவது கேட்டால், ப்ரேமைப் பத்தி, நீங்க, என்கிட்ட கேக்குறீங்களா என்று ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். அவ்ளோ வெளிப்படையாகவா இருந்தது எங்கள் பழக்கம்? புது வேலை ஜாயின் பண்ணதுல பிசியாகிட்டானா? ஒன்றும் புரியாமல், பல குழப்பங்களில் இருந்தாள்.