பழிக்குப்பழி 1 276

நான் கத்துனேன், அவங்க என்ன உள்ளே போடினு சொல்லி கதவை பூட்டிட்டாங்க, விடியற வரை கீர்த்தி அலறல் சத்தம் மட்டும் தான் கேட்டுட்டே இருந்துச்சு, என்றாள். காலைல கதவை திறந்து விட்டாங்க, நான் கீர்த்தி எங்கன்னு கேட்டேன், அவ மாடில இருந்து குதிச்சுட்டா, கீழ கெடப்பா அப்டின்னாங்க.

அதுக்கப்பறம் தான் நான் ஆம்புலன்ஸ கூப்பிட்டு இங்க வந்து சேர்த்தோம் என்றாள். செரி உனக்கு எப்படிமா காயம் ஆச்சு என்றேன், நான் விக்கியை அடுச்சேன், அவன் என்னை ஸ்டெப்ஸ்ல இருந்து தள்ளி உட்டுட்டான், அதுல தான் இந்த சிராய்ப்பு என்றாள்.

அவள் என்னிடம் முழுதாக கூறவில்லை என்பது புரிந்தது, இடையில் பொய் கலந்து சொல்கிறாள் என்பதும் தெரிந்தது. நான் விஷயம் இவ்வளவு தான், 4 பேர் என் பெண்ணை கொடூரமாக சீரழித்து இருக்கிறார்கள், அது மட்டும் உறுதி. அங்கிள் போலீஸ்டலாம் வேணாம், எனக்கு பயமா இருக்கு என்றாள். இல்லமா போலீஸ்ட்ட போகமாட்டேன், என் பொண்ணோட மானம் தான் முக்கியம் என்றேன். அவர்கள் பெயரை கேட்டேன், சொன்னாள்.

மணி: 2:00
பொழுது: மதியம்
பிறகு என்னை அவர்களிடம் கூட்டிட்டு போ என்றேன், வேண்டாம் அங்கிள் என்று தயங்கினாள், இல்லமா நான் ஏதும் பண்ணிடமாட்டேன் என்றேன்.
அவலும் செரி என்றாள், நான் போனேன் அவளுடனே, எனக்கு மனம் முழுக்க கோபம், ஆனால் கூலாக இருப்பது போல இருந்தேன். அந்த ரிசார்ட் வந்தது, அங்கிள் வேணாம் அங்கிள் எனக்கு பயமா இருக்கு, என்றாள், ஒன்னும் இல்லமா வா எங்கூட என்று கூட்டிக்கொண்டு போனேன்.