பழிக்குப்பழி 1 279

இன்னிக்கி நைட்டே கப்பல் மூலமா பார்ஸல் பண்ணிடுவேன், அப்போ பணம் குடுத்தர்றேன் என்றார். நான் கைக்குலுக்கினேன். 20 நாள் முன்னாடி வரை நான் ஒரு அற்ப மனிதன், இப்பொழுது உலகின் முக்கியமாக குற்றவாளிகளின் காண்டாக்ட் வைத்திருக்கும் ஆள் நான். இதற்காக நான் ஒரு நொடியும் ரெக்ரெட் பண்ணவில்லை.

இரவானது ஸ்மூத்தாக ட்ரான்சக்ஷன் முடிந்தது கையில் கேஷ் கொடுத்தார், 4 பேரும் நடை பிணங்களை போல போனார்கள். உண்மையான நரகத்தை இனிமேல் தான் பார்க்க போகிறீர்கள், என்னையும் என் மகளையும் என்றும் மறந்து விடாதீர்கள் என்று அவர்கள் காதில் சொல்லி, திரும்பி பார்க்காமல் வந்தேன்.

ஆத்ம திருப்தி மனசுக்கு. இன்னும் என் வேலை முடியவில்லை, மீதம் ஒருத்தி இருக்கிறாள், காரணகர்த்தாவே அவள் தான். என் கிளினிக்கை கிளீன் செய்தேன், அங்கே நான் உபயோகித்த எல்லா பொருட்களையும் குழி தோண்டி புதைத்தேன்,

ஒரு கட்டில் மெத்தை, மினி ஃபிரீசர் என்று பொறுத்தினேன், செரி என்று கோயம்புத்தூர் கிளம்பினேன், வேறு போலி சிம் வாங்கி என் மொபைலில் இருந்து பவித்ராவுக்கு கால் பண்ணினேன், யாருங்க என்றாள், பவித்ரா, கீர்த்தி அப்பா பேசுறேன் மா, என்றேன்,

சொல்லுங்க அங்கிள் என்றாள், கீர்த்தி கண் முழுச்சுட்டாலா என்றாள், இன்னும் இல்லமா ஊட்டில இருக்கா, நான் ஒரு வேலை விஷயமா வெளியூர் போனும், உன்னால ஒருநாள் அவளைபாத்துக்க முடியுமா என்றேன், நீ ஒன்னும் பயப்பட வேணாம் கூட என் மனைவி இருப்பா என்றேன், கொஞ்சம் தயங்கினாள், நான் வரியாமா என்றேன், உன்ன கூட்டிட்டு போயிட்டி திரும்ப விட்டுர்றேன் என்றேன். ஓகே அங்கிள், சூர் என்றாள். யார்கிட்டயும் சொல்லிக்க வேண்டாம்மா என்றேன்.

ஓகே அங்கிள் இப்போ எங்க இருக்கீங்க என்றாள், உன் காலேஜ் முன்னாடி தான் நிக்கறேன் என்றேன். ஓ அப்படியா இன்னிக்கேவா என்றாள், இருங்க ஒரு 20 நிமிடத்தில் வந்துர்றேன் என்று வந்தாள், என்னை பார்த்ததும் சிரித்தாள். ஒரு கொலைகார புன்னகை போல எனக்கு இருந்தது.