பழிக்குப்பழி 1 276

நால்வரையும் இழுத்து கொண்டு உள்ளே போய் கதவை அடைத்துக்கொண்டேன். ஏற்கனவே மயக்க மருந்து கொடுத்து தான் கூட்டி வந்திருக்கிறார்கள் இருந்தும், ப்ரொபோஃபோல் என்னும் அனஸ்தீஸியாவை வாங்கி வைத்திருந்தேன், நாள்வருக்கும் 20எம்.ஜி குடுத்தேன், 3 மணிநேரம் எழுந்திருக்க முடியாது.

அவர்ககளை இழுத்தபடி என் காரில் போட்டேன், வீட்டை பூட்டிவிட்டு என் பழைய கிளினிக்கை வந்தடைந்தேன்.

நால்வரையும் நான்கு மூலைகளில் சங்கிலியால் கட்டி விட்டேன். நால்வரும் என்ன பிளட் குரூப் என்று டெஸ்ட் செய்தேன், இருவர் பி பாசிடிவ், இன்னொருவன் ஓ பாசிடிவ், ஒருவன் மட்டும் ஏபி பாசிடிவ்.

ரொம்ப பசித்தது, அவனுகளை அப்படியே விட்டுவிட்டு சாப்பிட சென்றேன், ஒரு 5கிலோ மீட்டரில் ஹோட்டல், நான் நன்றாக சாப்பிட்டுவிட்டு, மதியத்துக்கும் சாப்பாடு வாங்கிக்கொண்டேன். இடையே பிளட் பேங்க் சென்று அவர்களின் ரத்த வகையில் நான்கு யூனிட்களை வாங்கி எனது ஃபிரீசரில் வைத்து கொண்டேன்.

மணி: 9:00
பொழுது: காலை
நான் ஒரு ஓரமாக ச்சேர் போட்டு உட்கார்ந்து கொண்டேன், நால்வரும் மயக்கம் தெளிந்து விழித்து பார்த்தனர். பதறினான்கள், ஆனால் எழும்ப முடியாது, கை, கால்களை சேர்த்து செயினால் கட்டி வைத்திருக்கிறேன்,

ஹாய் என்றேன் என்னை தெரிகிறதா என்றேன், நீங்களா என்று அதிர்ச்சியோடு பார்த்தார்கள். ஹெல்ப் என்று கத்தினான்கள், யாரும் வரமுடியாது, யாருக்கும் கேட்கவும் கேட்காது. எங்களை என்ன செய்ய போறீங்க என்றான் ஒருவன், ஒன்னும் செய்ய மாட்டேன், இட்ஸ் ஜஸ்ட் எ பே பேக் என்றேன்.

கத்தினார்கள், பிறகு சுத்தி முத்தி பார்த்தார்கள், சர்ஜிக்கள் கத்திகள், சளின் பாட்டில், நீடில் என்று எல்லாத்தையும் பார்த்து கொஞ்சம் பயந்து போனார்கள், அவர்கள் நால்வரும் எம்பிபிஎஸ் படித்தவர்கள் தான்.

சார் பயமா இருக்கு சார், இதெல்லாம் வெச்சு என்ன பண்ண போறீங்க என்றான் விக்கி. இதுக்கு முன்னநான் சர்ஜெரி பண்ணதில்லை இதான் என் பர்ஸ்ட் டைம் என்றேன். என்ன சர்ஜெரி சார் என்றார்கள், இது சும்மா ஒரு எக்ஸ்பிரிமெண்ட் தான் என்றேன்.