”அக்…கா…”
”…….”
”என்னக்கா… ஒன்னுமே பேசமாட்டேங்கற…?”
”என்ன பேசச் சொல்ற..?” என்றாள்.
”ஏதாவது பேசு…!! நல்லா திட்டு..!! இல்ல… நாலு அடி வெச்சுரு..!! பேசாம இருக்காத.. ப்ளீஸ்…!!”
அம்மா இறந்தபின்.. பல நேரங்களில் இது நிகழ்ந்திருக்கிறது.
உமா கோபித்துக்கொண்டு.. அவனோடு வாரக்கணக்கில் பேசாமல் இருந்திருக்கிறாள்.
அது தாமுவை… பெரிதும் பாதித்திருக்கிறது..!
”திட்னா… இதெல்லாம் விட்ற போறியா..?” உமா கேட்டாள்.
அவளையே பார்த்தான்.
”சொல்லுடா..?”
”ம்..! விட்டர்றேன்…! ஆனா இப்படி எதுமே… பேசாம இருக்காத…!!”
”நா.. யாரு…?” எனக் கேட்டாள்.
”அக்கா…”
”அதில்ல… ஊருல நாலுபேர்.. என்னை என்ன சொல்றாங்க..?”
அவனுக்குத் தெரியும். ஆனால் சொல்ல முடியாது.
உமா ”தேவடியானு சொல்றாங்களா… இல்லையா…?”
முகம் இருகினான் ”ம்..!!”
‘பளீர்.. பளீர் ..’ என மின்னல் வெட்டியது. பலமாக மழை பெய்தது.
உமா சொன்னாள் ”நா தேவடியாதான்..! ஆனா ஏன் இப்படி ஆனேன் தெரியுமா..?”
அவன் பேசவில்லை.
”என் சுகத்துக்காக இல்லை. பணத்தேவைகளுக்காக..! செத்துப்போன.. அம்மாவுக்கு மருந்து.. மாத்திரைல இருந்து.. ஸ்கூல் போயிட்டிருந்த உன்னோட செலவு..! வீட்டுச் செலவு.. இது எல்லாமே நான் ஒருத்திதான் பாக்க வேண்டிருந்தது..! நா வேலைக்கு போய் சம்பாரிக்கற காசு இதுக்கெல்லாம் பத்தல..! காசுக்காக்தான்.. கொஞ்சம் கொஞ்சமா.. நான் இப்படி ஆகிட்டேன்..!!” என்றாள்.
அவன் மௌனம் காக்க…
”நான் இதுவரை வாழ்ந்தது… இனிமே வாழறது… இதுலெல்லாம் எனக்கு சந்தோசம் இருக்குன்னா… அது நீ மட்டும்தான்..!! என் கண்ணு முன்னாடியே நீயும் கெட்டு சீரழியறதைப் பாத்துட்டு… என்னால நிம்மதியா இருக்கவே முடியாது..”
”ஸாரிக்கா..! இனிமே பண்ண மாட்டேன்..!”
”போன தடவையும் இதேதான் சொன்ன..”
”இந்த ஒரு வாட்டி மன்னிச்சிருக்கா…!! ப்ளீஸ்…!!”
”சரி.. என்னப் பத்தி யாரு என்ன பேசினாலும்.. அத நீ காதுலயே போட்டுக்காத என்ன…?”
”ம்..ம்..!!”
”சீக்கிரமே ஒரு கல்யாணம் பண்ணிக்கோ.. எனக்கு அது போதும்..! நீ எவள வேனா.. லவ் பண்ணு.. உனக்கு நான் கல்யாணம் பண்ணி வெக்கறேன்…!!” என்றாள் உமா….!!!
காலை..!
வேலைக்குக் கிளம்பினான் தாமு..! ஜீன்ஸ் பேண்ட்… டீ சர்ட்.. தோளில் பேக்..! கம்பெனிக்கு போகிறான்..!!
உமா பாத்ரூமில் இருந்தாள்..!
புறப்பட்டு ”அக்கா… போய்ட்டு வரேன்..” என்றான்.
அவளிடமிருந்து பதில் இல்லை. மறுபடி கூப்பிட்டான்.
”அக்கா…”
பதிலே இல்லை.
”உமா..” என்றான் உரக்க..!
உடனே பதில் வந்தது ”உமாவா..? வரேன் இரு… தாயோலீ..”
சிரித்து ”போய்ட்டு வரேன்.. உமா…” என்று விட்டு ஓடினான்.
தெருமுனையில் திரும்பிய போது.. அவனுக்குப் பின்னாலிருந்து…
”தாமு…” என்றது பெண் குரல்.
பின்னால் திரும்பினான்.!
கீர்த்தனா…!! அவனுடன்தான் வேலை செய்கிறாள்..! ஒரே வேனில்தான் இருவரும் போய் வருவார்கள்…!!
கீர்த்தனாவுடன் இன்னொரு பெண்ணும் இருந்தாள். பெயர் தெரியாது…! ஏரியாவிற்கு புதியவள்..!
நைட்டியிலிருந்த கீர்த்தனா ”கெளம்பிட்டியா.. ?” எனக் கேட்டாள்.
”ம்..! ஏன் நீ வல்ல…?”
”இல்ல..!” சிரித்தாள் ”லீவு..”
”ஏன்…?”
”கொஞ்சம்… காச்சல்…”
” கொஞ்சம் காச்சலா..?”
”ம்…!” பேசிக்கொண்டே நடந்தனர்.
”அது யாரு… உன் பிரெண்டா..?” கீர்த்தனாவைக் கேட்டான் தாமு.
” ம்..ம்..!!”
அந்தப் பெண் மிகவும் அழகாக இருந்தாள்..! பளீரென.. அசத்தும் அழகு. ! கூடுதல் நிறம்..! அற்புதமான முகவெட்டு..! கச்சிதமான உடலமைப்பு..! உடம்பைப் பிடித்த மாதிரி… சுடிதார் போட்டிருந்தாள்..!
”எங்கருக்காங்க..?” தாமு கேட்டான்.
”என் வீட்டுக்கு பக்கத்து வீடு..! புதுசா குடி வந்துருக்காங்க..!”
”காலேஜ் போறாங்களா…?”
”ஆமா….”
”ஓ..!” புன்னகைத்தான் ”பேரு..?”
”எதுக்கு…?”
”இல்ல.. தெரிஞ்சுக்கலாம்னுதான்..”
அந்தப் பெண்ணே சொன்னாள்.
”வஞ்சனா…!!”
”வஞ்சனா…? பேரு புதுசா இருக்கு…!” என்றான் ”ஆனா அழகாருக்கு… அவங்கள மாதிரியே…!!”
”ஏய்…!!” என்றாள் கீர்த்தனா.
”தேங்க்ஸ்…!!” என்றாள் வஞ்சனா..!
‘குப் ‘ பென ஒரு போதை ஏறியது அவனுக்கு.
பஸ் ஸ்டாப்பை அடைந்தார்கள். கொஞ்சம் கூட்டமாக இருந்தது.
கீர்த்தனாவைக் கேட்டான் தாமு.
”லீவ் சொல்லிட்டியா…?”
” ம்..! போன் பண்ணிட்டேன்..!”
கம்பெனி வேன் வந்தது. தாமு ஏறினான்.
கீர்த்தனா உள்ளிருந்த பெண்களிடம் பேசினாள்.