நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 4 50

”ஏய்… நாங்க மச்சான்னு கூப்பிடறது.. ஒரு பிரெண்ட்சிப்ல..”

” நானும் அதே பிரெண்சிப்லதான் மச்சான்..!! உக்கார்றியா…?”

”நா.. வல்ல…! நீங்க வெளையாடுங்க..!”

” ஒரு பொண்ணுகிட்ட தோத்துருவோம்னு… பயம்..?” என்று சிரித்துக்கொண்டு கேட்டாள் சரண்யா.

”அதெல்லாம் இல்ல..” கீழே உட்கார்ந்தான் ”இதுவரை யாரு ஜெயிச்சது..?”

”வேறயாரு…?” என இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டாள் சரண்யா ”உன் பிரெண்டு மச்சான்.. ஒரே தோல்விதான் மச்சான்…!! டூ டைம்ஸ்..!!”

அவளுக்கு கேரம் போர்டு விளையாடுவதில் ஆர்வம் அதிகம்.! திறமைசாலியும் கூட..! சுலபத்தில் அவளை வெல்ல முடியாது..!

சரவணன் விளையாடியவாறே கேட்டான்.
”அப்பறம் என்னடா.. பண்ண..?”

”என்னது…?”

தாமுவைப் பார்த்து ”மேட்டர ஓபன் பண்ணிட்டியா..?” என்று கேட்டான்.

புரிந்து கொண்ட தாமு தயக்கமாகத் தலையாட்டினான் ”ம்கூம்..”

” போடா…ங்க..! நீ வேஸ்ட்றா..!!”

சரண்யா.. அவனைப் பார்த்து.. ‘என்ன..?’ எனக் கண்களால் கேட்டாள்.
அவனுக்கு வெட்கமாக இருந்தது.

சரவணன் ”டெய்லியும் பாக்றதான..?”

” ம்..ம்..!!”

” ஆனா சொல்லல…?”

” பயமாருக்குடா..!”

” போடா.. பொடலங்கா…!! பயமாருக்காம் பயம்…! சரி.. நா வேனா பேசிரட்டுமா..?”

6

” இல்ல… இல்ல.. வேண்டாம்..! வந்து.. நானே….”

”எப்படா..?? அவ புள்ள பெத்தப்பறமா…? நீ இப்படி தொட நடுங்கியா இருந்தேன்னா.. அதான் நடக்கும் பாரு..!! ” என்றான் சரவணன்.

இடை புகுந்த சரண்யா. ”ஹேய்.. என்ன மச்சான் லவ்வா..? சொல்லவே இல்ல..? நாம அப்படியா பழகிருக்கோம்..? ” என்று கேலியாகச் சிரித்தாள்.

” ஆ..! நீ பெரிய இவ..?” என அவள் தலையில் அடித்தான் சரவணன்.

சரண்யா ”யாரு மச்சான்.. அந்த ஆளு..? செல்லு.. ப்ளீஸ்… ப்ளீஸ்..!!” எனக் கெஞ்சுவது போல பாவணை செய்தாள்.

தாமு ”அதெல்லாம் ஒன்னும் கெடையாது..” என்றான்.

”பாத்தியா..? என்கிட்டயே பொய் சொல்ற பாத்தியா..? போ.. நா… உன்கூட.. கா..!!” என்றாள்.

சரவணன் எழுந்தான். சரண்யாவும் எழுந்தாள். ஸ்கர்ட்டில் இருந்தாள்.

”என்ன பண்ணலாம்..?” தாமுவைக் கேட்டான் சரவணன்.

” நீதான் சொல்லனும்..”

”சினிமா போலாமா…செகண்ட் ஷோ..?”

” எங்கக்கா திட்டுவா..! செகண்ட் ஷோ போனா..!!”

”நீ இன்னும் சின்னப்பையனாடா..? உங்கக்காளுக்கு இப்படி பயந்து சாகற..?”

தயக்கத்துடன் சரவணனைப் பார்த்தாள் சரண்யா.

”என்ன..?” சரவணன் கேட்டான்.

”நானும் வரன்டா..” என்றாள்.

”எங்க..?”

”சினிமாக்கு..!”

” அடீங்…” என அவள் தலையில் அடித்தான் ”மூடிட்டு போய்… படி..!!”

”என்னை விட்டுட்டு போறீங்கன்னா… டும்மு..!!” என்றாள்.

”அதென்ன டும்மு..?” தாமு கேட்டான்.

” டும்மு… டோக்கு…டப்பா..!!” என்றவள் சரவணன் உதைக்க வருவதைப் பார்த்து… விலகி வெளியே ஓடினாள்…!!!!

வஞ்சனாவுக்காக கம்பெனி வேனைத் தவிர்த்து விட்டான் தாமு. பஸ்ஸிலேயே போகத்தொடங்கினான். அவள் ரெகுலராக ஒரே பஸ்ஸில்தான் காலேஜ் போகிறாள். அதேபோல் மாலையும் ஒரே பஸ்தான்..!!
அவளது நேரத்தைப் பின்பற்றி… அவளோடு பிரயாணம் செய்து வந்தான் தாமு..! தினமும் அவளோடு பேசுகிறான்… ஆனால் காதலை மட்டும்.. அவனால் அவளிடம் சொல்ல முடியவில்லை..!!

கீர்த்தனாவுக்கு அவனது காதல் தெரிந்துவிட்டது. அவ்வப்போது அவனைக் கிண்டல் செய்துகொண்டிருந்தாள்.

ஆனால் வஞ்சனாவுக்கு இன்னும் தெரியவில்லையே என வருந்தினான் தாமு.
‘கீர்த்தனா சொல்லாமலா இருப்பாள்..? அல்லது வஞ்சனாவுக்கே தெரிந்திருக்கலாம்..!
தெரிந்து கொண்டு… எதுவும் தெரியாதவள்போல… நடந்து கொள்கிறாளோ..?’

அன்று எப்படியும் தனது காதலை அவளிடம் சொல்லி விடுவது என்று தீர்மானித்தான்.

மாலை பஸ்விட்டு இறங்கி… அவளுடன் நடந்து போகும்போது…வெகுவான தயக்கத்துக்குப் பின்..
”வஞ்சனா… உங்ககிட்ட… ஒன்னு சொல்லுனும்..” என்றான் குரல் தடுமாற..!

அவனை சைடில் பார்த்து..”என்ன தாமு..?” என்று கேட்டாள்.

அவளது முகம் பார்த்துச் சொல்லும் தைரியம் வரவில்லை. அவளைப் பக்கவாட்டுத் தோற்றத்தில் பார்த்து…
”வந்து…” என இழுத்தான். சட்டென மனசுள் பயம் வந்து விட்டது. ஒருவேளை.. இவள் மறுத்து விட்டால்…????

”ம்…? வந்து…?” அவனது முகத்தை ஒருவித ஆவலுடன் பார்த்தாள்.

துணிந்து.. ”நீங்க .. ரொம்ப.. அழகா இருக்கீங்க.. !” என்றான்.

‘ பக் ‘ கெனச் சிரித்தாள் ”ஐ..!! இத்தனை நாள் இல்லாம.. இன்னிக்கு என்ன.. திடிர்னு..?”